மேலும் அறிய

Jatti - Cheddi Gang: நள்ளிரவில் வீட்டிற்குள் நுழையும் ஜட்டி கேங்! அச்சத்தில் ஆந்திர மக்கள்.. எச்சரிக்கும் காவல்துறை

திருப்பதியில் நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்கும் ஜட்டி கேங் கும்பலால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆந்திராவின் மிகவும் முக்கியமான நகரமாக மட்டுமின்றி, உலகின் பிரசித்தி கோயிலாக திருமலை அமைந்திருப்பது திருப்பதி ஆகும். திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

நாட்டின் பல நகரங்களில் இருந்து தினசரி லட்சம் பேர் வந்து செல்லும் திருப்பதியில் எப்போதும் பாதுகாப்பு பலமாகவே இருக்கும். கோயில் மட்டுமின்றி கோயில் அமைந்துள்ள நகரங்களைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டே இருக்கும்.

ஜட்டி கேங்:

இந்த நிலையில், திருப்பதியில் காவல்துறையினருக்கு சவால் அளிக்கும் விதமாக ஒரு கொள்ளை கும்பல் சுற்றி வருகிறது. ஒவ்வொரு கொள்ளை கும்பலுக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். அதாவது, தாங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்பதற்காக கொள்ளையடிப்பதில் விதவிதமான பாணியை ஒவ்வொரு கும்பலும் பின்பற்றும். அந்த வகையில், திருப்பதியில் இப்போது புதியதாக உலா வரத் தொடங்கியுள்ளது ஜட்டி கேங்.

இந்த கும்பல் தாங்கள் மாட்டிக் கொள்ளக்கூடாது என்றும், எந்த தடயமும் சிக்கி விடக்கூடாது என்பதற்காகவும் ஆடைகள் எதுவுமின்றி இடுப்பிற்கு கீழே வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். இந்த கும்பல் தாங்கள் கொள்ளையடிக்கும் இடத்தையோ, வீட்டையோ முன்கூட்டியே நோட்டமிட்டு கொள்கின்றனர். பின்னர், நள்ளிரவு நேரத்தில் திடீரென தாங்கள் திட்டமிட்ட வீட்டிற்கு சென்று கதவை தட்டுகின்றனர்.

போலீஸ் எச்சரிக்கை:

அந்த வீட்டில் இருப்பவர்களும் நள்ளிரவில் யாரோ கதவை தட்டுவதால் பதறிக்கொண்டு கதவை திறக்கின்றனர். அப்போது, அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் வீட்டின் உள்ளே செல்லும் இந்த ஜட்டி கேங் அவர்களைத் தாக்கி நகைகள், பணத்தை கொள்ளையடிப்பதாக போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், நள்ளிரவு நேரத்தில் சந்தேகப்படும் விதமாக யாரேனும் கதவைத் தட்டினாலோ, வித்தியாசமாக சத்தம் கேட்டாலே, குழாயில் இருந்து தண்ணீர் திறந்து கீழே சிந்துவதுபோல ஓசை கேட்டாலே யாரும் வீட்டின் கதவை திறக்க வேண்டாம் என்றும் ஆந்திர காவல்துறை எச்சரித்துள்ளனர்.

மேலும், விரைவில் இந்த புதிய வகை கொள்ளை கும்பலை கைது செய்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.  இந்த ஜட்டி கேங் கும்பல் ஏற்கனவே ஹைதராபாத்திலும் தங்கள் கைவரிசையை காட்டியுள்ளதாகவும், இவர்கள் தாங்கள் தப்பிப்பதற்காக கொள்ளையடித்த வீடுகள் மற்றும் இடங்களில் இருப்பவர்களை கொலை செய்யவும் தயங்க மாட்டார்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் படிக்க: Uttarkhand Tunnel Collapses: சுரங்கம் தோண்டும் பணியில் விபத்து: சிக்கிய 40 பேரின் நிலை என்ன? உத்தரகாண்டில் பரபரப்பு!

மேலும் படிக்க: ஐப்பசி மாத அமாவாசை: அன்னபூரணி அலங்காரத்தில் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன்

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கம்பீர் இனி கேட்க ஆளே இல்ல இந்திய அணியின் POWERFUL COACH Gautam Gambhir’’ரொம்ப கஷ்டமா இருக்கு’’ஓய்வை அறிவித்த விராட்ஷாக்கான BCCI, ரசிகர்கள்! | Virat Kohli Retirement Annoucementதிடீரென மயங்கி விழுந்த விஷால் பதறி உதவிய திருநங்கைகள் பரபரப்பான கூவாகம் திருவிழா Vishal Health ConditionEPS Birthday Blood Donation : EPS பிறந்தநாள்ரத்ததானம் அளித்த தம்பிதுரை வரிசை கட்டிய அதிமுகவினர்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pak. Official Asked to Leave: டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி 24 மணி நேரத்தில் வெளியேற இந்தியா உத்தரவு
Trump Vs India: போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
போர் நிறுத்தம் - யார் சொல்றது உண்மைன்னே தெரியலையே.?! ட்ரம்ப் சார் நீங்க இப்படி பண்ணலாமா.?
Thoothukudi Ship Building: அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
அடி சக்க, தூத்துக்குடிக்கு லக்கு தான், ரூ.10,000 கோடி முதலீட்டுல என்ன வரப்போகுது தெரியுமா.?
Gold Rate 13th May: இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
இப்படி பண்றீங்களே மா, நேத்து 2 தடவை குறைச்சுட்டு, இன்னிக்கு 2 தடவை ஏத்திட்டீங்களே.! தங்கம்
Stalin Vs EPS: பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் - இப்படியா பண்றது?
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு, மாறி மாறி வெளுத்துக்கொண்ட ஸ்டாலின்-இபிஎஸ் - இப்படியா பண்றது?
Operation Keller: இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
இந்திய ராணுவத்தின் அடுத்த அதிரடி ‘ஆபரேஷன் கெல்லர்‘ - 3 முக்கிய தீவிரவாதிகள் குளோஸ்
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி -  பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
Pollachi Case: தமிழ்நாடே ஹாப்பி - பொள்ளாச்சி வழக்கு, 9 பேருக்கும் சாகும் வரை சிறை - அதிரடியான தீர்ப்பு
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
தமிழகத்திலா இப்படி? 34 அரசு மருத்துவ கல்லூரிகளில் பேராசிரியர்கள் பற்றாக்குறை - தீர்வு எப்போது?
Embed widget