மேலும் அறிய

Uttarkhand Tunnel Collapses: சுரங்கம் தோண்டும் பணியில் விபத்து: சிக்கிய 40 பேரின் நிலை என்ன? உத்தரகாண்டில் பரபரப்பு!

உத்தர காண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த இடத்தில் தொழிலாளர்கள் 40 பேர் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Uttarkhand Accident: உத்தர காண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதை இடிந்த விழுந்த இடத்தில் தொழிலாளர்கள் 40 பேர் சிக்கி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சுரங்கப்பாதை இடிந்த விழுந்து விபத்து:

உத்தரகாண்ட் மாநிலத்தில் ரிஷிகேஷ் - கர்னாபிரயாக் இடையே ரயில்வே திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதோடு, உத்தர்காசி மாவட்டத்தில் பிரம்மகால் - யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வழக்கம்போல், சுரங்கம் அமைக்கும் பணியில் சுமார் 50க்கும் மேற்பட்டார் ஈடுபட்டு இருந்தனர்.  அப்போது, இன்று அதிகாலை 4 மணியளவில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. நான்கரை கிலோ மீட்டர் நீளம் உள்ள சுரங்கப்பாதையின் 150 மீட்டர் நீளமான பகுதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு பணியில் இருந்த 40 பேர் சிக்கி உள்ளதாக தெரிகிறது. 

40 பேர் சிக்கி தவிப்பு:

இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், மாவட்ட நிர்வாககும், உத்தரகாசி காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்டு பணிகளில் ஈடுபட்டார். மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புப் படை, சுரங்கப்பாதை அமைக்கும் அமைப்பான தேசிய நெடுங்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக லிமிடெட் ஊழியர்களும் சம்பவ இடத்தில் இருக்கின்றனர். சுரங்கப்பாதையில் மேல் பகுதியை இயந்திரங்கள் மூலம் துளையிடப்பட்டுள்ளது. இயந்திரங்கள் மூலம் வெட்டப்பட்ட பகுதியில் இருந்து ஆக்ஸிஜன் குழாய்கள் உள்ளே அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தற்போதைய நிலவரப்படி, இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்டு இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகலாம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

சுரங்கப்பாதையின் கட்டுமானப் பணிகளை கவனித்து வரும்  அதிகாரிகளின் கூற்றுப்படி, "சுரங்கப்பாதையில் சுமார் 40 பேர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை பத்திரமாக மீட்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை சம்பவ இடத்தில் உள்ளனர். இதுவரை உயிர்சேதம் எதுவும் இல்லை. விரைவில் அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்போம். அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பு இருக்கின்றனர்" என்று தெரிவித்தனர்.


மேலும் படிக்க

PM Modi Celebrate Diwali: ஹிமாச்சல் பறந்த பிரதமர் மோடி..! பாதுகாப்புப் படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாட்டம்..

தலைப்பு செய்திகள்

ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 12 பேருக்குப் பிறகு முன்னாள் டிடிபி தலைவர் கைது!
சபரிமலை தங்கக் கவச விவகாரம்: 12 பேருக்குப் பிறகு முன்னாள் டிடிபி தலைவர் கைது!
நீட், வினாத்தாள் கசிவு: மோடி, ராகுல் காந்தி அதிரடி முடிவுகள்! இன்றைய டாப் செய்திகள்.
நீட், வினாத்தாள் கசிவு: மோடி, ராகுல் காந்தி அதிரடி முடிவுகள்! இன்றைய டாப் செய்திகள்.
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Thoothukudi Lock-up Death : 'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
'தூத்துக்குடி இளைஞர் அருணாச்சலம் இறந்தது எப்படி?’ தொடக்க முதல் இறுதி வரை..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
Mannargudi MLA S. Kamaraj : ’மன்னார்குடி MLA காமராஜை தகுதிநீக்கம் செய்யவேண்டும்’ சபாநாயகரிடம் அமமுக பரபரப்பு மனு..!
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரயில்வேயில் 4098 ஜூனியர் இன்ஜினியர் பணி: ஆக.14 முதல் விண்ணப்பிக்கலாம்- தகுதி, தேர்வு விவரம்
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
ரஜினி நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்? சூப்பர்ஸ்டார் கைவிட்ட 3 மெகா ஹிட் படங்கள்!
Embed widget