மேலும் அறிய

ஸ்ரீபெரும்புதூர் அருகே நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு - தனியார் நீச்சல் குளத்திற்கு சீல் வைப்பு

குளத்தில் இருந்த நீரில் அதிகளவில் குளோரைடு என்னும் திரவத்தை அதிக அளவில்  கலந்த காரணத்தினால் மட்டுமே சிறுவன் உயிரிழந்திருக்க கூடும் என  பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர். 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே படப்பை அடுத்த நீலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் (39). இவரது மனைவி தாரிகா (35), இவர்களுக்கு சஸ்வின் வைபவ்(6), சித்விக் வைபவ் (2)  என இரண்டு மகன்கள் உள்ளனர். 

இந்நிலையில், நேற்று முன்தினம் தாரிகா, சஸ்வின் வைபவிற்கு நீச்சல் பழகுவதற்கு அதே பகுதியில் உள்ள நீச்சல் குளத்திற்கு இரண்டு மகன்களையும் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சஸ்வின் வைபவ் நீச்சல் பழகிக் கொண்டிருந்த போது திடீரென நீச்சல் குளத்தில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட ஊழியர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக  உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். 

அங்கு பரிசோதனை செய்ததில் சஸ்வின் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மணிமங்கலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, நீச்சல் குளத்தில் உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததாலும் குளத்தில் இருந்த நீரில் அதிகளவில் குளோரைடு என்னும் திரவத்தை அதிக அளவில்  கலந்த காரணத்தினால் மட்டுமே சிறுவன் உயிரிழந்திருக்க கூடும் என  பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர். 

அதன் அடிப்படையில் இன்று நிகழ்வு இடத்திற்கு சென்ற குன்றத்தூர் தாசில்தார் நாராயணன், மின்வாரிய ஊழியர்களின் உதவியோடு தனியார் நீச்சல் குளத்தின் மின்சாரத்தை துண்டித்ததோடு, உரிய  பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்  சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தனியார் நீச்சல் குளம் உரிமையாளர்களான பிரபு நாகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து மணிமங்கலம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6815
Active
7644
Recovered
68
Deaths
Last Updated: Tue 10 June, 2025 at 03:08 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

2026ல் கூட்டணி ஆட்சி தான்!EPS-ஐ மதிக்காத அமித் ஷா?அதிருப்தியில் அதிமுக | Amitshah | EPS pressmeet | Annamalaiதமிழ்த்தாய் வாழ்த்தில் பிழை!தவறாக பாடிய பாஜகவினர் அ.மலை கொடுத்த REACTION | Amishah | Madurai | Annamalai | Nainar Nagendranஅமித்ஷாவின் ப்ளான் என்ன? கோபமான அதிமுக தலைகள்! EPS-க்கு கொடுத்த வார்னிங்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
இந்த முறை அதிக தொகுதிகளை கேட்போம்.. ஓப்பனாக பேசிய திருமா.. திமுக கூட்டணியில் குழப்பமா?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
பிரதமராக 11 ஆண்டுகள்.. மோடியின் செயல்பாடுகள் எப்படி இருக்கு? ஜன் மன் சர்வே சொல்வது என்ன?
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
Chennai weather: சென்னையை மிரட்டிய பேய் மழை.. இடி, மின்னலுடன் பொத்துகிட்டு ஊத்திய வானம் - வாகன ஓட்டிகள் அவதி
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
பத்ரிநாத்துக்கு பிடிச்ச டீம் RCB தானாம்.. அவரே சொல்லிருக்காரு - பாருங்க
Min. Thangam Tennarasu: “வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
“வரலாறும், உண்மையும் உங்கள் மலிவான அரசியலுக்காக காத்திருக்காது“ மத்திய அரசை வெளுத்த அமைச்சர்
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
பாமக பொதுக்குழு கூட்டம்: அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு! 10 மாவட்டங்களில் முதல் கட்டம்!
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
தப்பு நடந்துடுச்சு.. ஸ்ருதி நாராயணனை வாழவிடுங்க.. இயக்குனர் ரங்கராஜ் உருக்கம்
Siddaramaiah's Assets Freezed: மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
மூடா முறைகேடு வழக்கு; சித்தராமையாவின் சொத்துக்கள் முடக்கம் - அம்மாடி, இத்தனை கோடியா.?!
Embed widget