மேலும் அறிய

மயிலாடுதுறை: 8-ம் வகுப்பு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழப்பு! கொலையா? தற்கொலையா? காவல்துறையினர் தீவிர விசாரணை!

மயிலாடுதுறை அருகே 8-ம் வகுப்பு மாணவன் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு காவல் சரகத்துக்கு உட்பட்ட புரசங்காடு கிராமத்தில் நேற்று மாலை காணாமல் போன எட்டாம் வகுப்பு மாணவன், ராஜன் வாய்க்கால் கரையோரம் முட்புதரில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவனின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் மணல்மேடு காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுவன் காணவில்லை என புகார்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள விலாசம் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்செல்வன். எட்டாம் வகுப்பு மாணவன். சிறுவயதிலேயே தாயை இழந்த அருள்செல்வன், புரசங்காடு கிராமத்தில் வசிக்கும் தனது தாத்தா கேசவ பெருமாள் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.

வழக்கம்போல் வீட்டில் இருந்த மாணவன் அருள்செல்வன் காணமால் போய் உள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் அருள்செல்வன் கிடைக்கவில்லை. இதனால் அவரது உறவினர்கள் மணல்மேடு காவல் நிலையத்தில் அருள்செல்வனை காணவில்லை என புகார் அளித்தனர். அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் சென்று கொண்டிருந்ததால், சிறுவன் ஆற்றில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சிய உறவினர்கள் மற்றும் காவல்துறையினர், தீயணைப்புப் படையினரின் உதவியுடன் இரவு முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

ராஜன் வாய்க்கால் அருகே கண்டெடுக்கப்பட்ட சடலம்

இந்நிலையில், இன்று காலை ராஜன் வாய்க்கால் கரையோரம் உள்ள ஒரு முட்காட்டில் சிறுவன் அருள்செல்வன் சந்தேகத்திற்கு இடமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாகக் கிடப்பது தெரியவந்தது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக மணல்மேடு காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மணல்மேடு காவல்துறையினர், மாணவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கொலையா? தற்கொலையா? - தீவிர விசாரணை

சந்தேகத்திற்குரிய முறையில் இறந்துள்ள மாணவன் அருள்செல்வனின் மரணம் குறித்து மணல்மேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவனின் சடலம் மீட்கப்பட்ட இடம், சம்பவம் நிகழ்ந்த விதம் ஆகியவற்றைக் கொண்டு, இது கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும், அல்லது மன உளைச்சல் காரணமாகத் தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

மேலும், சிறுவன் கடைசியாக யாருடன் பேசினான், அவன் மாயமானதற்கு முன்பு இருந்த மனநிலை என்ன, குடும்பச் சூழ்நிலை அல்லது பள்ளிக்கூடத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தனவா? என்ற விவரங்களையும் காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

பொதுமக்கள் மத்தியில் அச்சம்

சிறுவனின் சந்தேக மரணம் குறித்துப் பேசிய புரசங்காடு கிராம மக்கள், "அருள்செல்வன் மிகவும் துறுதுறுவென இருக்கும் சிறுவன். இப்படி ஒரு விபரீத முடிவை அவன் எடுத்திருக்க வாய்ப்பில்லை. எனவே, அவன் மரணத்தில் மர்மம் நிறைந்திருக்கிறது. காவல்துறையினர் முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி உண்மைக் காரணத்தைக் கண்டறிய வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.

மாணவன் உடலின் பிரேதப் பரிசோதனை அறிக்கையும், காவல்துறையின் தொடர் விசாரணையும் மட்டுமே இந்த மர்ம முடிச்சினை அவிழ்க்க உதவும். பள்ளி மாணவனின் இந்த எதிர்பாராத மரணம் மயிலாடுதுறை வட்டாரத்தில் பெரும் சோகத்தையும், பொதுமக்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்

இதுபோன்ற சூழலில் மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில சட்ட உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 மன அழுத்தத்தை சாதாரணமாக எண்ணாமல் மன அழுத்தம் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget