மேலும் அறிய

கரூர் அருகே விபரீதம்.. நீச்சல் கற்றுக்கொள்ள சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..

அப்போது உடன் இருந்த இளமுருகன் தவறி 25 அடி ஆழமுள்ள தண்ணீரில் விழுந்தார். அவர்களின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்க முயற்சி செய்தனர்.

கரூர் அருகே கிணற்றில் நீச்சல் கற்றுக் கொள்ள சென்ற சிறுவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை மீட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

கரூர் மாவட்டம் பாகநத்தத்தை அடுத்து அவுத்திபாளையம் கிராமத்தை சார்ந்தவர் சரவணன். இவருக்கு இளமுருகன் (வயது 8) என்ற மகனும், ஓவியா (வயது 14) என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு பள்ளி விடுமுறை என்பதால் மூக்கணாங்குறிச்சி கிராமத்தை அடுத்த தம்மநாயக்கன்பட்டியில் உள்ள அவர்களது பெரியம்மாமணி என்பவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இன்று மதியம் பெரியம்மா மணி, இளமுருகனையும், ஓவியாவையும் அழைத்துக் கொண்டு அருகில் உள்ள சுப்பிரமணி என்பவரின் தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் நிச்சல் பழகி கொண்டிருந்தனர். 

அப்போது உடன் இருந்த இளமுருகன் தவறி 25 அடி ஆழமுள்ள தண்ணீரில் விழுந்தார். அவர்களின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து சிறுவனை மீட்க முயற்சி செய்தனர். ஆனால், சிறுவனை மீட்க முடியாததால் கரூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து அங்கு சென்ற தீயணைப்பு துறையினர் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக தேடி சிறுவனின் உடலை மீட்டனர். உடலை பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த வெள்ளியணை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


கரூர் அருகே விபரீதம்.. நீச்சல் கற்றுக்கொள்ள சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..

 

கரூர் விவசாய கொலை வழக்கில் கல்குவாரி உரிமையாளரின் ஜாமீன்  மனு தள்ளுபடி.

விவசாயி கொலை வழக்கில் கல்குவாரி உரிமையாளரின் ஜாமீன் மனு ஐ-கோர்ட் கிளையில் தள்ளுபடி ஆனது. கரூர் மாவட்டம் காளிபாளையம் வெட்டுக்காடு தோட்டத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் 49. விவசாயியான இவர் அப்பகுதியில் உரிமம் காலாவதியான குவாரி செயல்படுவது குறித்து புகார் அளித்துள்ளார். இதனால் கடந்த செப்டம்பர் 10 டூவீலரில் சென்ற ஜெகநாதனை வேன் ஏற்றி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார், ஓட்டுநர் சக்திவேல், கல்குவாரி ஊழியர் ரஞ்சித், ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

 


கரூர் அருகே விபரீதம்.. நீச்சல் கற்றுக்கொள்ள சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு..

இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு கல்குவாரி உரிமையாளர் செல்வகுமார் ஐ-கோர்ட் மதுரை கிளையில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி டிவி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் வக்கீல் நம்பிசெல்வன் ஆஜராகி, மனுதாரர் மீதான குற்றச்சாட்டு தீவிரமானது. வழக்கு விசாரணை நிலவில் நிலுவையில் உள்ளது. ஜாமீன் வழங்கினால் விசாரணை பாதிக்கும் என்றார். அதே நேரம் கொலையான ஜெகநாதனின் தாய் வள்ளியாத்தாள் தரப்பில் ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து இணையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை அடுத்து செல்வகுமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

தலைப்பு செய்திகள்

Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
Karnataka: நாளை கல்யாணம்.. குடும்பத்தோடு விஷம் குடித்த மணப்பெண்.. 3 பேர் உயிரிழந்த சோகம்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
விழுப்புரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்: ஆம்னி பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கிய போதை கும்பல்!
" நீ எப்படி என் தங்கச்சிய லவ் பண்ணுவ " நண்பனின் தங்கையை காதலித்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!
ஆட்சியர் அலுவலகமா? தவெக கட்சி அலுவலகமா? மயிலாடுதுறையில் விஜய் பிறந்தநாளில் வெடித்த பரபரப்பு!

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
''அப்பாவை காணோம்'' என்ற முதல்வர் விஜய்; ’’கோர்ட்டில் கணவனை காணோம்’’ என்று பதிலடி கொடுத்த உதய்!
CM Vijay Speech: ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த ADMK, காங்., MLA-க்கள்
ஸ்டாலினுக்கு குட்டிக் கதை சொன்ன CM விஜய்.. அவையில் வயிறு குலுங்கி சிரித்த அதிமுக, காங்., MLA-க்கள்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: ’’தொட மாட்டோம், தொட்டா விடமாட்டோம், தொட்டவங்கள..’’ அடுக்கு மொழி, ஆவேசத்தால் அரங்கை தெறிக்கவிட்ட முதல்வர் விஜய்
CM Vijay Speech: எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
எங்க ஆட்சிக்கே ஸ்கெட்ச்சா..! சட்டசபையில் ரெண்டு திராவிட கட்சிகளையும் ரவுண்டு கட்டிய விஜய்
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: திமுகவினரை சூடாக்கிய அந்த ஒற்றை வார்த்தை... சம்பவம் செய்த முதல்வர் விஜய்.. கலவரமான சட்டசபை!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
CM Joseph Vijay: 40 நாட்களில் என்ன கிழித்தோம்? ... பாயிண்டுகளை அள்ளி வீசிய விஜய்.. அரண்ட எதிர்க்கட்சிகள்!
விரைவில் Item சாங், சூட்டிங் ஸ்பாட் போல டயலாக், சிஎம் விஜய் பேச்சில் 10 ரீல்ஸ் தேறும்- இறங்கி அடித்த உதயநிதி
விரைவில் Item சாங், சூட்டிங் ஸ்பாட் போல டயலாக், சிஎம் விஜய் பேச்சில் 10 ரீல்ஸ் தேறும்- இறங்கி அடித்த உதயநிதி
UDHAYANIDHI VS VIJAY : தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
தைரியம் இருந்தா பார்ட்டி பெயரை சொல்லுங்க..சிஎம் விஜய்க்கு சவால் விட்ட உதயநிதி- சட்டசபையில் நடந்தது என்ன.?
Embed widget