மேலும் அறிய

திருமணத்திற்கு மீறிய உறவால் 72 வயது முதியவருக்கு நேர்ந்த கதி... கரூரில் பரபரப்பு

கரூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனை குறித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடு படுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரூர் அருகே மூதாட்டியை கொலை செய்த வழக்கில் 72 வயது முதியவருக்கு, ஆயுட்கால சிறை தண்டனையும், 200 ரூபாய் அபராதமும் விதித்து மகிளா நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கரூர் மாவட்டம் இடையபட்டியை அடுத்த சேவப்பூரில் வசித்தவர் பழனியம்மாள். இவரது கணவர் இவரை விட்டு பிரிந்து சென்று வேறு திருமணம் செய்து கொண்டு திண்டுக்கல்லில் வசித்து வருகிறார்.

 


திருமணத்திற்கு மீறிய உறவால் 72 வயது முதியவருக்கு நேர்ந்த கதி... கரூரில் பரபரப்பு

இந்நிலையில் பழனியம்மாளுக்கும், ராமசாமி (வயது 72) என்கிற மணி நாயக்கருக்கும் 20 ஆண்டு காலம்  பழக்கம் ஏற்பட்டு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஆண்டு பழனியம்மாளின் உறவினர் சங்கர் என்பவர் அவரது வீட்டில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இது ராமசாமிக்கு பிடிக்காததால் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

கடந்த 03.08.2021 அன்று பழனியம்மாளின் மகள் கொழுந்தாயி ஆடி 18 யை முன்னிட்டு அவரது வீட்டிற்கு வந்துள்ளார். அதற்கு அடுத்த நாள் அதிகாலை 1.30 மணியளவில் பழனியம்மாள் வீட்டிற்கு வந்த ராமசாமி, சங்கர் அவரது வீட்டில் தங்கி இருப்பது தொடர்பாக சண்டை போட்டுள்ளார்.




திருமணத்திற்கு மீறிய உறவால் 72 வயது முதியவருக்கு நேர்ந்த கதி... கரூரில் பரபரப்பு

அப்போது ராமசாமி கெட்ட வார்த்தைகளால் திட்டி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பழனியம்மாளை கழுத்தில் வெட்டி விட்டு தப்பியோடி விட்டார். மகள் கொழுந்தாயி மற்றும் சங்கர் கண்ணெதிரே நடந்த இந்த கொலை சம்பவம் தொடர்பாக கொழுந்தாயில் அதிகாலை 2.30 மணியளவில் பாலவிடுதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

இது தொடர்பான வழக்கு கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளி ராமசாமிக்கு கெட்ட வார்த்தையால் திட்டிய குற்றத்திற்காக 3 மாதம்  சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுட்கால சிறை தண்டனையும், 100 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


கரூரில் கஞ்சா தேடுதல் வேட்டையில் மூன்று குற்றவாளிகள் கைது

கரூர் மாவட்டம் முழுதும் மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில் கஞ்சா விற்பனை குறித்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு, கஞ்சா விற்பனையில் ஈடு படுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட கரூர் மற்றும் தாந்தோணிமலை பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ய முயன்றதாக மூன்று பேர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.




திருமணத்திற்கு மீறிய உறவால் 72 வயது முதியவருக்கு நேர்ந்த கதி... கரூரில் பரபரப்பு

அந்த வகையில், கரூர் மக்கள் பாதை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நோக்கில், பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்றதாக பெரியகுளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ். தாந்தோணிமலை ராயனூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் வகையில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக இதே பகுதியை சேர்ந்த நவீன், வ உ சி நகர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக கார்த்திக்கேயன் ஆகிய மூன்று பேர் மீது கரூர் மற்றும் தாந்தோணிமலை போலீசார் வழக்கு பதிந்து அவர்களிடம் இருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget