மேலும் அறிய

Crime: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷன்.. 1.27 கோடி பறித்துச் சென்ற கும்பல் - சிக்கியது எப்படி?

2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாகவும், 85 இலட்ச ரூபாய் கொடுத்தால் 1 கோடி ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தரப்படும் எனவும், இதன் மூலம் 15 சதவீதம் கமிஷன் கிடைக்கும் எனவும் கூறியுள்ளனர்.

கோவை தெலுங்குபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (44). இவர் பெரிய கடை வீதியில் தங்க விற்பனை கடை நடத்தி வருகிறார். இவருக்கு கோவையில் உள்ள தனியார் வங்கியில் வேலை செய்து வரும் வேதா சங்கர் என்பவர் மூலம் ரியல் எஸ்டேட் செய்து வரும் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற சின்ன குட்டி (44) என்பவர் அறிமுகமாகியுள்ளார்.

2000 ஆயிரம் நோட்டுகளை மாற்ற கமிஷன்:

அப்போது தனக்குத் தெரிந்த நிலகோட்டையைச் சேர்ந்த மீனா (33), தேனியைச் சேர்ந்த பாண்டியன் (52) ஆகியோரிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருப்பதாகவும், 85 இலட்ச ரூபாய் கொடுத்தால் 1 கோடி ரூபாய்க்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் தரப்படும் எனவும் கூறியுள்ளனர். இதன் மூலம் உங்களுக்கு 15 சதவீதம் கமிஷன் கிடைக்கும் என குட்டி ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

இதனை நம்பிய பிரகாஷ் 500 ரூபாய் நோட்டுகளாக 1 கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு, 500 ரூபாய் நோட்டுகளுடன் பொள்ளாச்சி அருகே உள்ள அம்பராம்பாளையம் தர்கா அருகில் வந்துள்ளார். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த குட்டி, மீனா, பாண்டியன் உள்ளிட்ட ஆறு பேர் மூன்று காரில் வந்துள்ளனர். காரில் வந்தவர்கள் பிரகாஷை தாக்கி, அவரிடம் இருந்த ஒரு கோடியே 27 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மற்றும் பணம் எண்ணும் இயந்திரம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு, கொலை மிரட்டல் விடுத்து தப்பித்து சென்றனர்.

6 பேர் கைது:

இது குறித்து பிரகாஷ் ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் மீனா, பாண்டியன், அழகர்சாமி, சௌமியன், கவாஸ்கர், குட்டி ஆகிய ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.


Crime: 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற கமிஷன்.. 1.27 கோடி பறித்துச் சென்ற கும்பல் - சிக்கியது எப்படி?

கைது செய்தது எப்படி?

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், “தங்க நகை வியாபாரி பிரகாசை தொடர்பு கொண்ட இந்த கும்பல் தங்களிடம் 2000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக இருப்பதாகவும், ரூ.85 லட்சம் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் 2000 நோட்டுகளை தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் பிரகாசை நேரில் சந்தித்து 2000 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருக்கும் வீடியோவையும் காண்பித்துள்ளனர். இதனை உண்மை என நம்பிய பிரகாஷ் பணத்துடன் சென்ற போது, பணம் பறிப்பு சம்பவம் நடந்தது. 

6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்த காரின் பதிவெண்ணை கொண்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் மதுரை அருகே உள்ள உசிலம்பட்டியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனடியாக தனிப்படை காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று 6 பேரையும் கைது செய்தனர். சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.

வங்கியிலேயே 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற அரசு உரிய அவகாசம் கொடுத்துள்ளது. எனவே இது போன்ற மோசடி நபர்களை நம்பி யாரும் ஏமாற வேண்டாம். இந்த பணத்திற்கான உரிய ஆவணங்களை தங்க நகை வியாபாரி பிரகாசிடம் கேட்டுள்ளோம். இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவர்கள் ஆவணங்களை சரிபார்த்து நீதிமன்றம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget