மேலும் அறிய

மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியை கொள்ளையடித்த 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை

மரியசெல்வம் உள்ளிட்ட 5 பேருக்கு தலா 10 ஆண்டுகளும் முத்துக்குமாருக்கு 9 ஆண்டுகளும் கூல்மணி என்கிற மணிகண்டனுக்கு 7 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்

மன்னார்குடி அருகே துப்பாக்கி முனையில் வங்கி கொள்ளை வழக்கில் ஏழு பேருக்கு சிறை தண்டனை விதித்து மன்னார்குடி நீதிமன்றம் தீர்ப்பு..
 
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த அசேஷத்தில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில் வாடிக்கையாளர்கள் குறைந்த அளவே இருப்பதை பல நாட்களாக நோட்டமிட்ட அடையாளம் தெரியாத நபர்கள், கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி மதிய உணவு நேரத்தில்  திடீரென துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் தரையில் சுட்டும், வங்கி மேலாளர் கோவிந்தராஜனை துப்பாக்கி முனையில் மிரட்டியும் 5.58 லட்சம் ரொக்கம் மற்றும் லாக்கரில் இருந்த 2.51 லட்சம் மதிப்புள்ள 84 கிராம் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியை கொள்ளையடித்த 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
 
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மன்னார்குடி போலீசார் போலீசார் அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகணன் உத்தரவின் பேரில் 4 தனிப்டைகள் அமைத்து கொள்ளையில் ஈடுபட்டவர்களை புலனாய்வு செய்து தேடினர். தொடர் புலனாய்வில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை முதலில் கைது செய்தனர்.
 
அவர்கள் அளித்த தகவலின் பேரில் தூத்துக்குடியை சேர்ந்த மரியசெல்வம் (35), முத்துக்குமார் (31), மீரான்மைதீன் (32), சுடலைமணி (31), திருவாடானையை சேர்ந்த ராஜா (35), மதுரை கருப்பாயூரணி பகுதியை சேர்ந்த அயூப்கான் (29), மதுரை தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த கூல் மணி என்கிற மணிகண்டன் (25) ஆகிய 7 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியை கொள்ளையடித்த 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
 
இதுகுறித்த வழக்கு மன்னார்குடி சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கு விசாரனை முடிவடைந்து நேற்று இரவு சார்பு நீதிமன்ற நீதிபதி ஏ.பிரேமாவதி தீர்ப்பளித்தார். இதில் மரியசெல்வம், மீரான் மைதீன், சுடலைமணி, ராஜா, அயூப்கான் ஆகிய 5 பேருக்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அளித்து திர்பளித்தார். மேலும் முத்துக்குமாருக்கு 9 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், கூல்மணி என்கிற மணிகண்டனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆர்.எஸ்.ஜெய்சங்கர் ஆஜராகி வாதாடினார். 

மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் வங்கியை கொள்ளையடித்த 5 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை
தண்டனை உறுதி செய்யப்பட்டதை அடுத்து  குற்றவாளிகளில் மணிகண்டன் தவிர 6 பேர் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கூல்மணி என்கிற மணிகண்டன் புதுக்கோட்டை சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டார். மன்னார்குடியில் பட்டப்பகலில் துப்பாக்கி முனையில் வங்கி நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் மூன்றாண்டுகள் கழித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
தேனி: சொத்து தகராறில் மகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை 3 ஆண்டுகளுக்குப் பின் கைது!
5 சிலைகள்... 800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
5 சிலைகள்...800 ஆண்டுக்கால ரகசியம்! காரைக்கால் போலீசாரின் அசாத்திய ஆபரேஷன்; டி.ஐ.ஜி சத்யா சுந்தரம் வியப்பு!
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
மகளிடம் அத்துமீறிய போதை ஆசாமியை நடுத்தெருவில் வச்சு வெளுத்த தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்
கள்ளக் காதலுடன் பிறந்த 9 மணி நேர சிசுவை கொன்று ஏரியில் வீசிய தாய்

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vietnam Boat Tragedy: தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
தமிழர் உட்பட 15 இந்தியர்கள் பலி.! வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த கோர விபத்தில் சோகம்.!
ADMK: பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
பழிபோட்ட எடப்பாடி..! எனக்கு பாஜக, உனக்கு தவெக.. கம்பி நீட்டும் மணிகள்? அதிமுகவின் அடுத்த பேட்ச் ரெடி
Mojtaba Threatening Statement: 'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
'எங்கள் தேசம் பழிவாங்கக் காத்திருக்கிறது'; ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபாவின் அறிக்கையால் பரபரப்பு
US Iran War: ‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
‘1000 ஏவுகணைகள் ரெடியா இருக்கு“-வார்னிங் விட்ட ட்ரம்ப்; டெஹ்ரானில் திடீரென வெடித்த குண்டு; பதற்றம்
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
இனி தமிழ்த்தாய் வாழ்த்து தான் முதல்ல பாடணும்.. விஜய் கோரிக்கையை ஏற்ற மத்திய அரசு.. வெளியான அறிவிப்பு!
Trump Vs Iran: ”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
”நான் கொல்லப்பட்டால், ஈரானை சிதைச்சிடுங்க” ராணுவத்திற்கு ட்ரம்ப் கொடுத்த சேதி
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? - தமிழக வானிலை அறிக்கை
Upcoming Turbo Petrol Cars: புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
புதுசா படையெடுக்கும் டர்போ பெட்ரோல் கார்கள் - பட்ஜெட்? எந்தெந்த வேரியண்ட்கள் எப்போ?
Embed widget