மேலும் அறிய

Crime: கடற்கரையில் கொலை செய்யப்பட்ட 3 பெண்கள்.. இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்..

ஈக்வடார் நாட்டில் கடற்கரைக்கு சுற்றுலாச் சென்ற 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈக்வடார் நாட்டில் கடற்கரைக்கு சுற்றுலாச் சென்ற 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈக்வடார் நாட்டில் உள்ள குயின்ண்டே அருகே எஸ்மரால்டாஸ் கடற்கரையில் நாய் ஒன்று ஒரு குறிப்பிட்ட இடத்தை மோப்பம் பிடித்ததையும், சுற்றி சுற்றி வந்ததையும் மீனவர்கள் கவனித்தனர். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று அங்கு என்ன உள்ளது என பார்த்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீச உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  துர்நாற்றம் வந்த இடத்தை தோண்டி பார்த்தப்போது அங்கு 3 இளம்பெண்கள் கொன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் , கொலை செய்யப்பட்டவர்கள் டொமிங்கோவைச் சேர்ந்த டெனிஸ் ரெய்னா,யூலியானா மசியாஸ்,நயேலி டாபியா  என்பது தெரிய வந்தது. 

இதனையெல்லாம் விட தங்களுக்கு ஆபத்து நேரப்போகிறது என்பதை உணர்ந்த இந்த 3 பேரில் இரண்டு பேர் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். டெனிஸ் தனது நண்பர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், “ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன், எனக்கு ஏதாவது நடந்தால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்” என கூறியுள்ளார். 

இதேபோல் நான்கு வயது மகளைக் கொண்ட டாபியா தனது சகோதரிக்கு, தனது  இருப்பிடத்தை குறிப்பிட்டு வாட்ஸ்அப் செயலில் செய்தி அனுப்பியுள்ளார். அதில் சும்மா உனக்கு நான் தகவல் தெரிந்து கொள்வதற்காக அனுப்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த 3 பெண்களும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்தனர்.  பெண்கள் கடற்கரைக்கு கொண்டு வந்த ஆடைகள் மற்றொரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கைகள் கட்டப்பட்டு, வாயும் மூடப்பட்டிருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் ஒரு மொபைல் ஃபோனையும் மீட்டெடுத்துள்ளனர். இது நிச்சயம் கொலையாளிகளை கண்டறிய உதவும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுஞ்செய்தி அனுப்பியது வைத்து பார்த்தால் இந்த கொலைகள் ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இவர்களில் மசியாஸ் ஒரு பாடகி என்பது,  ரெய்னா ஒரு பொறியியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. .

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அமைச்சரை தடுத்து நிறுத்திய நபர் அதிர்ந்த கோவி. செழியன் மயிலாடுதுறையில் பரபரப்பு | Govi Chezhiaanமாமன் மச்சான் தகராறு மச்சானை கொன்ற மர்மநபர்கள் ஓட ஓட வெட்டிய CCTV காட்சி | Jolarpettai Murder | Family Fightநெருங்கும் பீகார் தேர்தல் பாஜகவுக்கு சவால் விடும் INDIA 4 மாநிலங்களில் இடைத்தேர்தல் | Bihar Electionரவியால் ஏற்பட்ட பிரச்சனைகெனிஷாவின் அதிரடி முடிவுஷாக்கான ஆர்த்தி | Kenishaa vs Aarti

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு  - ஏற்பாரா விஜய்.?
அதிமுக, பாஜக-வின் அல்டிமேட் பிளான்; கூட்டணி அமைக்க தவெக-விற்கு அழைப்பு - ஏற்பாரா விஜய்.?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
Anna University Case: அண்ணா பல்கலை., பாலியல் வழக்கு - ஞானசேகரன் குற்றவாளி என தீர்ப்பு, தண்டனை என்ன?
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி.,  வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
RajyaSabha Election DMK Candidates: மாநிலங்களவை எம்.பி., வேட்பாளர்களை அறிவித்த திமுக - வைகோ அவுட், கமல் இன்
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Fifth-Generation Fighter Jet: நாங்களே செய்றோம் - ரூ.15,000 கோடி, சொந்தமாக 5வது தலைமுறை போர் விமானம் - இந்தியா அதிரடி
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
Harry Potter: 90ஸ் கிட்ஸ்களா - புதிய ஹாரிபாட்டர் ரெடி, இனி இந்த புள்ள தான் ஹெர்மாய்னி - ரிலீஸ் எப்போ?
அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை..கிடைத்தது அனுமதி.. காஞ்சிபுரம் மக்கள் ஹேப்பி
அரக்கோணம் - செங்கல்பட்டு இரட்டை ரயில் பாதை..கிடைத்தது அனுமதி.. காஞ்சிபுரம் மக்கள் ஹேப்பி
Australian Model's Record: 6 மணி நேரம், 583 ஆண்கள்; ஆஸ்திரேலிய மாடல் அழகி படைத்த ‘அந்த‘ சாதனை - பின்னர் நடந்த விபரீதம்.!!
6 மணி நேரம், 583 ஆண்கள்; ஆஸ்திரேலிய மாடல் அழகி படைத்த ‘அந்த‘ சாதனை - பின்னர் நடந்த விபரீதம்.!!
Trump Offers Canada: இதுக்கு ஒத்துக்கிட்டா அது Free; குசும்புக்கார ட்ரம்ப் கனடாவிற்கு கொடுத்திருக்கும் Offer என்ன தெரியுமா.?
இதுக்கு ஒத்துக்கிட்டா அது Free; குசும்புக்கார ட்ரம்ப் கனடாவிற்கு கொடுத்திருக்கும் Offer என்ன தெரியுமா.?
Embed widget