மேலும் அறிய

Crime: கடற்கரையில் கொலை செய்யப்பட்ட 3 பெண்கள்.. இறப்பதற்கு சில மணி நேரம் முன்பு நடந்த அதிர்ச்சி சம்பவம்..

ஈக்வடார் நாட்டில் கடற்கரைக்கு சுற்றுலாச் சென்ற 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈக்வடார் நாட்டில் கடற்கரைக்கு சுற்றுலாச் சென்ற 3 பெண்கள் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈக்வடார் நாட்டில் உள்ள குயின்ண்டே அருகே எஸ்மரால்டாஸ் கடற்கரையில் நாய் ஒன்று ஒரு குறிப்பிட்ட இடத்தை மோப்பம் பிடித்ததையும், சுற்றி சுற்றி வந்ததையும் மீனவர்கள் கவனித்தனர். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று அங்கு என்ன உள்ளது என பார்த்துள்ளனர். அப்போது அந்த இடத்தில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீச உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்  துர்நாற்றம் வந்த இடத்தை தோண்டி பார்த்தப்போது அங்கு 3 இளம்பெண்கள் கொன்று புதைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் , கொலை செய்யப்பட்டவர்கள் டொமிங்கோவைச் சேர்ந்த டெனிஸ் ரெய்னா,யூலியானா மசியாஸ்,நயேலி டாபியா  என்பது தெரிய வந்தது. 

இதனையெல்லாம் விட தங்களுக்கு ஆபத்து நேரப்போகிறது என்பதை உணர்ந்த இந்த 3 பேரில் இரண்டு பேர் இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு தங்கள் குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர். டெனிஸ் தனது நண்பர் ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், “ஏதோ நடக்கப் போகிறது என்று நான் உணர்கிறேன், எனக்கு ஏதாவது நடந்தால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன் என்பதை நினைவில் வைத்துக்கொள்” என கூறியுள்ளார். 

இதேபோல் நான்கு வயது மகளைக் கொண்ட டாபியா தனது சகோதரிக்கு, தனது  இருப்பிடத்தை குறிப்பிட்டு வாட்ஸ்அப் செயலில் செய்தி அனுப்பியுள்ளார். அதில் சும்மா உனக்கு நான் தகவல் தெரிந்து கொள்வதற்காக அனுப்புகிறேன் என தெரிவித்துள்ளார். இந்த 3 பெண்களும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் புதைக்கப்பட்டிருந்தனர்.  பெண்கள் கடற்கரைக்கு கொண்டு வந்த ஆடைகள் மற்றொரு இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் கைகள் கட்டப்பட்டு, வாயும் மூடப்பட்டிருந்ததற்கான அடையாளங்களும் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. 

மேலும் சம்பவ இடத்தில் இருந்து போலீசார் ஒரு மொபைல் ஃபோனையும் மீட்டெடுத்துள்ளனர். இது நிச்சயம் கொலையாளிகளை கண்டறிய உதவும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் ஈக்வடார் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறுஞ்செய்தி அனுப்பியது வைத்து பார்த்தால் இந்த கொலைகள் ஏப்ரல் 4 ஆம் தேதி நடந்திருக்கலாம் என சொல்லப்படுகிறது. இவர்களில் மசியாஸ் ஒரு பாடகி என்பது,  ரெய்னா ஒரு பொறியியல் மாணவி என்பது குறிப்பிடத்தக்கது. .

தலைப்பு செய்திகள்

நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
நீதிமன்றத்தில் ரத்தக் களறி! 15 நாள் சிறை தண்டனையால் ஆத்திரம் - நீதிபதி முன் கையை அறுத்துக் கொண்ட கைதி!
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல் !
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
இன்றைய முக்கியச் செய்திகள்: தமிழ்நாட்டை உலுக்கும் சம்பவங்கள் - மாவட்ட வாரியாக இதோ..
"என் உயிருக்கு ஆபத்து... காப்பாற்றுங்கள்"– எஸ்பி அலுவலகத்தில் கதறி அழுத மனைவி! பரபரப்பு பின்னணி!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
நானே களத்துல இறங்குறேன்..! காவிரி விவகாரம் - கர்நாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கும் CM விஜய்?
CJP Protest: மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
மைலேஜ் அரசியல்வாதிகள், ஸ்டண்ட் போராளிகள் - கவலையில் மாணவர்கள், கரையும் கோரிக்கைகள்
PM Modi: நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
நள்ளிரவில் வீடியோ வெளியிட்ட பிரதமர் மோடி - அமைச்சர் ராஜினாமாவா? இன்று முக்கிய முடிவு என அறிவிப்பு
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
Sonam Wangchuk: நீட் முறைகேடு.. 26 நாட்கள் உண்ணாவிரதம் நிறைவு.. சோனம் வாங்சுக் அறிவிப்பு!
JanaNayagan Collection: விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
விஜயின் ஜனநாயகன் பாக்ஸ் ஆஃபிஸில் தெறித்ததா? முதல் நாள் வசூல் எவ்வளவு? எத்தனை கோடிகள்?
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
Kia Syros EV: குட்டி மின்சார பீஸ்டை இறக்கிய கியா..! 526KM ரேஞ்சுக்கு இந்த விலை ஓகேவா? அம்சங்கள், வசதிகள்
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: முதலமைச்சர் விஜய்க்கு மு.க.ஸ்டாலினின் 6 கேள்விகள்! என்னென்ன?
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
MK Stalin: சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்.. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்!
Embed widget