![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Stock Market Update: நாளின் முடிவில் ஏற்றத்தில் முடிவடைந்த சென்செக்ஸ் - நிஃப்டி; லாபத்தில் எந்த நிறுவனங்கள் ?
Stock Market Closing Bell Today: தேர்தலின் முடிவுகளால் நேற்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்த பங்குச்சந்தை இன்றைய நாள் முடிவில் ஏற்றத்துடன் முடிந்துள்ளது.
![Stock Market Update: நாளின் முடிவில் ஏற்றத்தில் முடிவடைந்த சென்செக்ஸ் - நிஃப்டி; லாபத்தில் எந்த நிறுவனங்கள் ? Stock Market Today 5th June 2024 BSE Sensex Nifty rise after Lok Sabha Election Results Impact Stock Market Update: நாளின் முடிவில் ஏற்றத்தில் முடிவடைந்த சென்செக்ஸ் - நிஃப்டி; லாபத்தில் எந்த நிறுவனங்கள் ?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/05/41ec0a4adacfe8d57ec72fab0f9dee2c1717581637465572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Stock Market Rise: மக்களவைத் தேர்தலின் முடிவுகளால், நேற்றைய நாளில் 6,000 புள்ளிகள் வரை வீழ்ச்சியை சந்தித்த சென்செக்ஸ் புள்ளிகள், இன்று 2, 000 புள்ளிகளுக்கும் மேல் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
தேர்தல் முடிவு தாக்கம்:
நேற்றைய நாளில் தேர்தல் முடிவின் தாக்கத்தால் , சுமார் நான்கு ஆண்டுகளில் கண்டிராத மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்த பங்குச் சந்தையானது, இன்றைய நாளில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50- ஆகியவை ஏற்றம் கண்டுள்ளது.
தற்போதைய ஆட்சியில் இருக்கும் பாஜக கட்சியானது, தொடர்ந்து ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதால், அரசு நிர்வாக கொள்கைகளில் நீட்டிப்புத் தன்மை இருக்கும் என கருத்துக்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, நேற்றைய நாளில், பெரும் சரிவைக் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள், இன்றைய நாளில் ஏற்றத்துடன் நிறைவடைந்தன.
இன்றைய நிறைவு நாளில் மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 2,303 புள்ளிகள் உயர்ந்து புள்ளிகளில் 74, 382 வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-50, 735 புள்ளிகள் உயர்ந்து 22, 620 புள்ளிகளில் வர்த்தகமானது.
லாபமடைந்த நிறுவனங்கள்
நிஃப்டி -50-ல் பட்டியலிடப்பட்ட 50 நிறுவனங்களும் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது முதலீட்டாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக ரிலையன்ஸ், ஓ. என்.ஜி. எஸ்.சி, டாட்டா ஸ்டீல், டெக் மகேந்திரா, விப்ரோ எஸ்.பி.ஐ, சன் பார்மா, டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், அப்போலோ மருத்துவமனை, ஆக்சிஸ் பேங்க் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. அனைத்து துறை குறியீடுகளும் ஆட்டோ, வங்கி, எஃப்எம்சிஜி, உலோகம், டெலிகாம் மற்றும் மீடியா ஆகியவை சுமார் 4 முதல் 6 சதவீதம் வரை ஏற்றத்துடன் முடிவடைந்தன. பிஎஸ்இ மிட்கேப் குறியீடானது 4 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 3 சதவீதமும் உயர்ந்தது.
சரிவைக் கண்ட நிறுவனங்கள்:
பிஎஸ்இ சென்செக்ஸ் குறியீட்டில் பிபிசிஎல் மற்றும் எல்&டி பங்குகள் மட்டுமே சரிவுடன் நிறைவடைந்தன.
இன்றைய நாளின் முடிவுகளில் பெரும்பாலான பங்குகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது, முதலீட்டாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், வரும் நாட்களில் பங்குச் சந்தையானது ஏற்றத்துடன் தொடர்ந்து செல்லுமா என்று கேள்விக்குறியாக உள்ளது. ஏனென்றால், பாஜக கட்சியானது தனிப்பெரும்பான்மை கட்சியாக உருவெடுக்கவில்லை. இதனால், கூட்டணி கட்சியுடன் ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளது. இதனால், தனிப்பெரும்பான்மை கட்சி ஆட்சியமைக்கும் சூழல் இல்லாத நிலை இந்த முறை ஏற்பட்டுள்ளது. இதனால் நிர்வாகங்களில் , கொள்கைகளில் உறுதித்தன்மை குறைந்த தன்மை ஏற்படும். இதனால், வரும் காலங்களில் நிச்சயமற்றத்தன்மை நிலவும் என்பதால், பங்குச்சந்தையின் போக்கு, இன்று ஏற்றத்துடன் காணப்பட்டாலும் வரும் நாட்களில் அரசு போக்கின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் ஏற்றத்துடன் இருக்குமா அல்லது இறக்கத்துடன் இருக்குமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)