மேலும் அறிய

தொழில் தொடங்கும் ஆசையா? சென்னை மாநகராட்சி வழங்கும் கடனுதவி திட்டம் பற்றி தெரியுமா? இதோ முழுவிபரம்!

சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய வங்கி இருப்பை விட நான்கு மடங்கு வரை எந்தவித அடமானமும் இல்லாமல் கடனைப்பெறலாம். இதன் மூலம் ரூ. 1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெறத் தகுதியுடையவர்கள் என அறிவிப்பு.

இன்றைய சூழலில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள நபர்கள் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 2 லட்சம் வரை சென்னை மாநகராட்சி மூலம் கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்றின் பாதிப்பு மக்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கியதோடு, பலருக்கு வேலையின்மையும் ஏற்பட்டது. வேலையில்லாத காரணத்தில் ஏதாவது  தொழில் தொடங்கி வாழ்வில் முன்னேறலாம் என்று நினைத்தால் கூட எங்கு சென்று கடனுதவி பெறமுடியும்? அதற்கு யாரை சூரிட்டியாகப்போட முடியும் என்பது போன்ற பல்வேறு எண்ணங்கள் நம் மனதில் ஓடும். மேலும் வங்கிகளில் கடன் உதவி தருவார்களா? எப்படி அணுகுவது போன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாகவும், பொருளாதாரத்தில் நலிவடைந்தவருக்கு சிறு தொழில் தொடங்குவதற்கான கடனுதவி வழங்குவதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. இதன்படி, கடனுதவி பெற தகுதிபெற்றவர்கள் யார்? எப்படி அனைத்து விபரங்களையும் தெரிந்துக்கொள்வது என நாமும் இங்கு அறிந்துக்கொள்வோம். 

தொழில் தொடங்கும் ஆசையா? சென்னை மாநகராட்சி வழங்கும் கடனுதவி திட்டம் பற்றி தெரியுமா? இதோ முழுவிபரம்!

சென்னையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் (TNULM) கீழ் ரூ.5,000 முதல் ரூ.2 லட்சம் வரை கடனுக்காக நிதியுதவி வழங்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் செய்திக்குறிப்பின் வாயிலாகத் தெரிவித்துள்ளது. இதில் தெருவோர வியாபாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் பின் தங்கிய வகுப்பினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.

இதோடு மட்டுமின்றி சுய உதவிக்குழுக்கள் மற்றும் அதன் உறுப்பினர்கள், நகர்ப்புறத்தில் உள்ள ஏழைகள் தொழில் தொடங்க ரூ. 2 லட்சம் முதல் ரூ. 10 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சுய உதவிக்குழுக்கள் தங்களுடைய வங்கி இருப்பை விட நான்கு மடங்கு வரை எந்தவித அடமானமும் இல்லாமல் கடனைப் பெறலாம் எனவும் இதன் மூலம் ரூ. 1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கடன் பெறத் தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை தொடங்குவதற்குப் பெறப்படும் கடனுக்கான வட்டிக்கு அரசு மானியம் வழங்கப்படும் எனவும் சென்னை மாநகராட்சி அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள கடனுதவி திட்டம் குறித்து முழுமையாகத் தெரிந்துக்கொள்ளவும், கடன் பெற விரும்பும் பொதுமக்கள் 9444094247, 9444094248 அல்லது 9444094249 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்துக்கொள்ளலாம்.  மேலும் திட்ட மேலாளர், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்,  100, அண்ணாசாலை,  கிண்டி, சென்னை- 600 03 என்ற அலுவலக முகவரிக்கு நேரடியாகச் சென்று கேட்டறிந்துக்கொள்ளலாம் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.