மேலும் அறிய

ATM Card Tips: ஏடிஎம்மில் பணம் எடுத்தால் கைது - உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கை அணுகுவது எப்படி? விவரங்கள் இதோ..!

ATM Card Tips: குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால் அவரது வங்கிக் கணக்கை அணுகுவது எப்படி என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.

ATM Card Tips:  உயிரிழந்தவரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி பணம் எடுத்தால், கைது நடவடிக்கை பாயும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

உயிரிழந்தவரின் வங்கிக் கணக்கை அணுகுவது எப்படி?

குடும்ப உறுப்பினரின் இறப்பு என்பது துக்கத்தையும் அதிர்ச்சியையும் தரவல்லது. அந்த துயரோடு இறந்தவர்களின் வங்கிக் கணக்குகள், முதலீடுகள், கடன்கள் போன்ற நிதி விவகாரங்களைக் கண்டறிவது, அவற்றை ஒன்று சேர்ப்பது மற்றும் அவற்றை நிர்வகிப்பது ஆகியவையும் குடும்ப உறுப்பினர்களுக்கு மிகவும் சிரமமான் காரியமாக மாறுகிறது. வங்கி ஏடிஎம் கார்ட் இருக்கும், ஆனால் அதன் பின் நம்பர் தெரிய வாய்ப்பில்லை. ஃபிக்ஸட் டெபாசிட், பங்குச் சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடுகள் உள்ளதா என்பதை அறிந்து கொள்வதும் கடினமாகிறது. ஒருபுறம் மனிதனைக் காணவில்லை என்ற வேதனையும் மறுபுறம் நிதிப் பரிவர்த்தனைகளைப் பற்றிய கவலையும் மனதை ரணமாக்கலாம். 

உயிரிழந்தவரின் ஏடிஎம் கார்ட் மூலம் பணம் எடுக்கலாமா? 

இறந்தவரின் ஏடிஎம் கார்டு இருந்தால், அந்த கார்டில் இருந்து பணம் எடுக்க முடியுமா, முடியாதா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. மற்றவர்களுக்கு இது தேவையில்லாத வேலையாக இருந்தாலும் , பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த விஷயத்தில் தெளிவு அவசியமாகிறது. இறந்த நபரின் ஏடிஎம் கார்டில் இருந்து பணம் எடுப்பது சட்டவிரோதமானது, குற்றம். நீங்கள் ஒரு குடும்ப உறுப்பினராக இருந்தாலும் அல்லது நாமினியாக இருந்தாலும், இறந்தவரின் கணக்கில் பணத்தை அணுக சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். தவறினால் உங்கள் மீது கைது நடவடிக்கை பாயலாம்.

உயிரிழந்தவரின் பணத்தை எடுப்பதற்கான சட்ட நடைமுறை:

வங்கியில் தகவல் தெரிவிப்பது: முதல் நடவடிக்கையாக கணக்கு வைத்திருப்பவரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைக்கு தெரிவிக்கவும். நாமினி அல்லது நாமினி இல்லாவிட்டாலும், அத்தகைய தகவலை வழங்கலாம்.

நாமினி இருந்தால்: இறந்தவரின் கணக்கு விவரங்களில் நாமினியின் பெயர் இருந்தால், கணக்கு வைத்திருப்பவரின் இறப்பு குறித்தும் வங்கிக்கு நாமினி தெரிவிக்க வேண்டும். தகுந்த அடையாள ஆவணங்களுடன் அவர் தான் நாமினி என்பதை நிரூபிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகள் இருந்தால், அவர்கள் அனைவரும் உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

வங்கிக் கணக்கை அணுக தேவையான ஆவணங்கள்:    

  •    கணக்கு வைத்திருப்பவரின் இறப்புச் சான்றிதழ்        
  • பாஸ்புக், செக்புக், டிடிஆர் போன்ற பிற ஆவணங்கள்  
  • பரிந்துரைக்கப்பட்ட ஆதார் அட்டை, பான் கார்டு

இந்த ஆவணங்களை வங்கி கிளையில் சமர்ப்பித்த பிறகு, வங்கி அதிகாரிகள் அவற்றை ஆய்வு செய்வார்கள். அந்த நடைமுறை முடிந்த பிறகு, உயிரிழந்தவரின் கணக்கில் இருந்து நாமினி பணம் எடுக்க அனுமதி வழங்கப்படுகிறது.

சொத்து பரிமாற்றம்:

வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்கு முன், அந்த நபருக்குச் சொந்தமான சொத்துக்கள் சட்டப்பூர்வ வாரிசு அல்லது நாமினிக்கு மாற்றப்பட வேண்டும்.

சட்ட நடவடிக்கைகள்:    

விதிகளைப் பின்பற்றாமல் உயிரிழந்தவரின் கணக்கிலிருந்து பணம் எடுப்பது சட்டவிரோதமாகக் கருதப்படுகிறது. அத்தகைய செயல்களில் ஈடுபட்டால் கடும் அபராதம் விதிக்கப்படலாம் அல்லது சிறைக்கு அனுப்பப்படலாம். 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget