மேலும் அறிய

பின்னலாடைத் தொழிலை காப்பாற்றக்கோரி அமைச்சர் பியூஸ்கோயலுக்கு மதுரை எம்.பி. கடிதம் !

’’ஜவுளி தொழிற் சங்கிலியை சந்தையின் கோரப் பிடிக்குள் அரசு விட்டு விடுவது அல்லது பெரும் தொழிலகங்கள் வசம் இத்தொழில் விட்டு விடப்படுவது சரியல்ல’’

தமிழ்நாட்டில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் பின்னலாடை நிறுவனங்களும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விசைத்தறிகளின்  உரிமையாளர்களும் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். நூல் விலை உயர்வும், அதனால் ஏற்படும் விளைவுகளும் மாநிலத்தின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்து விடும் என்பதால் இந்த சிக்கலுக்கு தமிழ்நாடு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும், என கோரிக்கை வழுத்து வருகிறது. இந்நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தி திருப்பூர் பின்னலாடைத் தொழிலை காப்பாற்றக்கோரி ஒன்றிய அமைச்சர் பியூஸ்கோயலுக்கு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
 
 
அதில், திருப்பூர் பின்னலாடைத் தொழில் மிகக் கடுமையான நெருக்கடியில் உள்ளது. நவம்பர் 1, 2021 அன்று நூல் விலை கிலோவுக்கு 50 ரூபாய் உயர்ந்து இருப்பது நெருக்கடியை மிக சிக்கலாக்கி உள்ளது. உள்நாட்டுச் சந்தைக்கும், ஏற்றுமதிக்குமான உற்பத்தியில் ஈடுபட்டு வருகிற குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை இது உருவாக்கியுள்ளது. திருப்பூரில் 4000 தொழிலகங்கள் உள்ளன. 4 லட்சம் பேருக்கு வாழ்வளித்து வருகிறது. ஆகவே தொழில் நெருக்கடி சமூகப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து பிழைப்பிற்காக வந்திருக்கிற தொழிலாளர்களின் வாழ்வுரிமை அபாயத்தில் இருக்கிறது. நூல் விலை கடந்த 13 மாதங்களாகவே தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் 10 ரூபாயில் இருந்து 15 ரூபாய் என உயர்ந்து வந்தது. கடைசி அடி போல நவம்பர் 1 இல் செய்யப்பட்ட ரூ50 உயர்வு அமைந்திருக்கிறது. எல்லா வகையான நூல்களும் விலை உயர்வை சந்தித்துள்ளன.

பின்னலாடைத் தொழிலை காப்பாற்றக்கோரி  அமைச்சர் பியூஸ்கோயலுக்கு மதுரை எம்.பி. கடிதம் !
 
ஏற்கெனவே பின்னலாடை தொழில் பல சவால்களை சந்தித்து இருக்கிற நேரம் இது. பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி, சந்தை சுருக்கம், கோவிட் ஊரடங்கு ஆகியன உதாரணங்கள். மேலும் கொள்கலன், போக்குவரத்து கட்டணம் ஆகியனவும் உயர்ந்துள்ளன. 20 அடி கொள்கலன் அளவிலான போக்குவரத்து கட்டணம்  3000 இருந்து 12000 டாலர் வரையிலும், 40 அடி கொள்கலன் அளவுக்கு 17000 டாலர் வரையிலும் அமெரிக்காவால் உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற ரசாயன உட் பொருள் விலைகளும் கடந்த 3 மாதங்களில் 40% முதல் 50 % வரை உயர்ந்துள்ளன. ஆகவே நூல் விலை உயர்வு அடி மேல் விழுந்துள்ள அடியாகும். பஞ்சு விலை உயர்வே நூல் விலை உயர்வுக்கு காரணம் என்று சொல்லப்பட்டாலும் அது உண்மை அல்ல. இரண்டு விலைகளுக்குமான விகிதம் பெரும் இடைவெளி கொண்டதாக உள்ளது. திருப்பூர் தொழிலகங்கள் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் உள்ள 5.63 லட்சம் விசைத்தறி, 1.89 லட்சம் கைத்தறிகளும் பாதிப்பிற்கு ஆளாகின்றன. விவசாயத்திற்கு அடுத்தாற்போல் அதிக வேலை உருவாக்கம் செய்கிற துறை இந்த துறையாகும்.

பின்னலாடைத் தொழிலை காப்பாற்றக்கோரி  அமைச்சர் பியூஸ்கோயலுக்கு மதுரை எம்.பி. கடிதம் !
 
ஆகவே ஜவுளி தொழிற் சங்கிலியை சந்தையின் கோரப் பிடிக்குள் அரசு விட்டு விடுவது அல்லது பெரும் தொழிலகங்கள் வசம் இத்தொழில் விட்டு விடப்படுவது சரியல்ல. ஆகவே அரசு தலையிட வேண்டும். நூல் விலையை கட்டுப்படுத்த வேண்டும். தங்கு தடையில்லாமல் நூல் கிடைக்க வழி செய்ய வேண்டும். ஜவுளித் தொழிலைப் பாதிக்கிற ஒன்றிய அரசின் கொள்கைகள் மாற வேண்டும்.  உரிய நேரத்தில் அரசு தலையிட்டால் மட்டுமே இந்த தொழிலை அரசால் காப்பாற்ற முடியும்“ என இந்த கோரிக்கையோடு ஒன்றிய ஜவுளித் தலைவர் அமைச்சர் பியூஸ்கோயலுக்கு மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கடிதம் அனுப்பியுள்ளார்.

பின்னலாடைத் தொழிலை காப்பாற்றக்கோரி  அமைச்சர் பியூஸ்கோயலுக்கு மதுரை எம்.பி. கடிதம் !
 
திருப்பூர் நகரத்தில் தொழில் முனைவோர் - தொழிலாளர்கள் கை கோர்த்து இக் கோரிக்கைகளுக்காக களம் காண்கிறார்கள். அவர்களின் போராட்டம் நியாயமானது. வெல்லட்டும். அவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் நிச்சயமாக எதிரொலிப்போம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் என டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
"வசனம் பேசினால் மட்டும் போதாது மு.க.ஸ்டாலின் அவர்களே.." முதலமைச்சரை இபிஎஸ் விளாசியது ஏன்?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS And OPS Meets Modi: தமிழ்நாடு வரும் மோடி! EPS, OPS போடும் ப்ளான்! பாஜக கூட்டணியில் மாற்றம்?Annamalai BJP : அண்ணாமலை பதவி நீக்கம்? சீனுக்கு வந்த நயினார்! ஆட்டம் காட்டும் அமித்ஷாIrfan Controversy | ”அசிங்கமா இல்லையா..” இழிவுபடுத்திய இர்பான்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்Ponmudi | ”பட்டாவ வாங்க மாட்டோம்” பெண்கள் வாக்குவாதம் கடுப்பான பொன்முடி | Villupuram | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Nithyananda: அடடே… 2 கின்னஸ் பரிசுக்குச் சொந்தக்காரரா நித்தியானந்தா? எதில் உலக சாதனை?
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
Japan Earthquake: உலுக்கப்போகும் நிலநடுக்கம்! 3 லட்சம் மக்கள் உயிருக்கு ஆபத்து: ஜப்பான் அரசு வெளியிட்ட பகீர் அறிவிப்பு!
"வசனம் பேசினால் மட்டும் போதாது மு.க.ஸ்டாலின் அவர்களே.." முதலமைச்சரை இபிஎஸ் விளாசியது ஏன்?
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
லிவ் இன் ரிலேஷன்ஷிப்புக்கு மறுப்பு! காதலன் தற்கொலை! உடனே காதலி எடுத்த விபரீத முடிவு
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
Nithyananda: பிரபல சாமியார் நித்தியானந்தா மரணம்? இதுதான் காரணமா? சகோதரி மகன் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
ஸ்ருதி நாராயணனிடம் பேசியது பிரபல தமிழ் இயக்குநரின் மேனேஜர்...வீடியோ போட்டு கிழித்த சனம் ஷெட்டி
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Aadhav Arjuna: மனைவி, மச்சான்..! ஆதவ் அர்ஜுனாவை சுத்து போடும் குடும்பம் - ”எங்க அப்பா பணத்துல தப்பு பண்றாரு”
Jana Nayagan: அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...
அடேங்கப்பா.. ஓடிடி-லயே இத்தனை கோடிகளா.? வசூல் வேட்டையை தொடங்கிய ‘ஜன நாயகன்‘...
Embed widget