மேலும் அறிய

Loan Against Silver: மகிழ்ச்சி செய்தி.. இனி வெள்ளியை வைத்தும் கடன் பெறலாம்!

Silver Loan in Bank: ஆபரணங்கள் மீது பிரியம் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ளது. தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என பல வகையான ஆபரணங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

தங்க நகைகளைப் போல வெள்ளி நகைகளை அடமானம் வைத்தும் கடன் பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களைக் காணலாம். 

ஆபரணங்கள் மீது பிரியம் என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் உள்ளது. தங்கம், வெள்ளி, வைரம், வைடூரியம் என பல வகையான ஆபரணங்கள் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தங்கம் என்பது விலை மதிப்புமிக்க ஆபரணமாக பார்க்கப்படுகிறது. அனைவராலும் விரும்பி அணியப்படுகிறது. இதைவிட மிக முக்கியம் கடினமான காலங்களில் தங்கத்தை நாம் தனியார் அல்லது அரசுடைமை வங்கிகளில் அடமானம் வைத்து பணம் பெற முடியும். ஆனால் பிற ஆபரணங்களை வைத்து பெற முடியாது. 

இனி வெள்ளிக்கும் பணம்

இப்படியான நிலையில் தங்கம் விலை நாளுக்கு நாள் உச்சத்தை அடைந்து வருகிறது. ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்துக்கும் மேலே சென்று விட்ட நிலையில் சவரன் விலை ரூ.1 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த விலையேற்றம் நடுத்தர மக்களை கலங்கச் செய்துள்ளது. மிகச்சிறந்த முதலீடு தங்கம் என சொல்லப்பட்ட நிலையில் சிறுக சிறுக சேமித்தாலும் அதனை வாங்க முடியாத சூழல் இருப்பதாக புலம்பி தவிக்கின்றனர்.

இதனால் பலரின் கவனமும் வெள்ளி நகைகள் மீது திரும்பியுள்ளது. எனினும் கஷ்ட காலங்களில் இதனை அடமானம் வைக்க முடியாது என்றாலும், நமக்கென சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நகை இருக்கும் என பலரும் வாங்க முனைந்துள்ளனர். இந்த நிலையில் தான் ரிசர்வ் வங்கி அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

அதன்படி தங்கத்தைப் போல வெள்ளியை  அடமானம் வைத்து கடன் வாங்கலாம் என தெரிவித்துள்ளது. இதன்மூலம் தனிநபர்கள் வெள்ளி நகைகள் அல்லது நாணயங்களை அடமானம் வைத்து வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து  கடன்களைப் பெறலாம் என கூறப்பட்டுள்ளது. இதற்கான புதிய வழிகாட்டு முறைகள் ரிசர்வ வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் விலை மதிப்பற்ற உலோகக்கடன்  சந்தையில் சீரானப்போக்கு, வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதாகும். மேலும் இந்த புதிய விதிமுறைகள் 2026ம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவ்வளவு விதிமுறைகளா?

இந்த வகையில் வணிக ரீதியிலான அரசு மற்றும் தனியார் வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனம், வீட்டு வசதி நிதி நிறுவனங்கள், கிராமப்புற கூட்டுறவு வங்கி ஆகியவை வெள்ளிக்கு கடன் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  நகைகள் அல்லது நாணயங்கள் வடிவில் இருக்கும் ஆபரணங்களுக்கு மட்டுமே கடன் வழங்க முடியும் என தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சம் 10 கிலோ வெள்ளி நகைகளுக்கு ஈடாக நாம் பணம் பெற முடியும். நாணயங்களாக இருந்தால் 500 கிராம் வரை பெற முடியும். ரூ.1 லட்சம் மதிப்புள்ள வெள்ளி நகை இருந்தால் உங்களால் ரூ.85 ஆயிரம் வரை கடன் பெற முடியும் என சொல்லப்படுகிறது. 

கடன் தொகையை நிர்ணயிக்க குறிப்பிட்ட நாளில் இருந்து கடைசி 30 நாட்களின் சராசரி விலை அல்லது முந்தைய நாளின் விலை ஆகியவற்றில் எவை குறைவாக இருக்கிறதோ அது கருத்தில் கொள்ளப்படும் என கூறப்படுகிறது. கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தவில்லை என்றால், வங்கி    வெள்ளி நகைகளை ஏலம் விடலாம். முதலில் வாடிக்கையாளருக்கு அறிவிப்பு, பின்னர் பொது ஏல அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும். இரண்டு முறை ஏலம் தோல்வியடைந்தால் இருப்பு விலை 85% வரை குறையும். கடனைத் திருப்பிச் செலுத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு வாடிக்கையாளர் நகைகளை பெறவில்லை என்றால் அவை உரிமை கோரப்படாத பிணையமாக அறிவித்து வாரிசுகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
சூப்பரு.. PayTM-இல் செலவு செய்ற பணம் எங்கே போகுது? அறிந்து கொள்ள புதிய வசதி அறிமுகம்!
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
Gold and silver rate today : தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..
தொடர்ந்து உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ..

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
NEET PROTEST : நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம்.! வழக்குகள் அனைத்தும் ரத்து- அசத்திய சிஎம் விஜய்
Embed widget