மேலும் அறிய

Tax On Parboiled Rice: புழுங்கல் அரிசி மீதான ஏற்றுமதி வரி 20 சதவிகிதமாக அதிகரிப்பு.. மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் புழுங்கல் அரிசிக்கு 20 சதவிகித வரி விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் இருந்து புழுங்கல் அரிசி ஏற்றுமதியை கட்டுப்படுத்தும் வகையில்,  20 சதவிகித வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு வரி:

அத்தியாவசியப் பொருட்களுக்கு உள்நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அண்மையில் வெங்காயம் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களுக்கு கூடுதல் ஏற்றுமதி வரி விதித்து உத்தரவிட்டது. அந்த வரிசையில் தற்போது புழுங்கல் அரிசியின் ஏற்றுமதிக்கு 20 சதவிகித வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  

என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்திய மக்கள் பெரும்பாலும் பயன்படுத்தும் பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்த ஒரு மாதத்திற்குப் பிறகு, இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே மத்திய அரசு இந்த விவகாரம் குறித்து ஆலோசித்து வந்த நிலையில், தற்போது 20 சதவிகித வரிவிதிப்பு குறித்து அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் அரிசிக்கு செலுத்தும் வரி அதிகரிக்கும் என்பதால், பிற நாடுகளுக்கான ஏற்றுமதி குறையும் சூழல் உருவாகியுள்ளது. அதோடு, இந்தியாவில் அரிசி விலை ஏற்கனவே 11 வருடங்களில் இல்லாத அளவிலான உச்சத்தில் இருக்கும் வேளையில்,  இந்த தடை மற்றும் வரி விதிப்பு உள்நாட்டில் விலை உயர்வை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி மீதான கட்டுப்பாடுகள் நவம்பர் மாதம் வரையில் தொடரும் என சில மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காரணம் என்ன?

எதிர்பாராத விதமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொட்டிய கனமழை மற்றும் இயற்கை பேரிடர்கள் காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள்நாட்டிலேயே விளைபொருட்களின் தேவை அதிகரித்துள்ளது. அதேநேரம், சீனாவிலும் மழை வெள்ளம் காரணமாக அந்நாட்டின் அரிசி உற்பத்தி அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், அங்கு தேவை அதிகரித்து இருக்கும் சூழலை கருத்தில் கொண்டு, அதிகப்படியான அர்சி ஏற்றுமதி செய்யப்படலாம் என அரசு கணித்துள்ளது. இதுபோன்ற பல்வேறு காரணங்களை கருத்தில் கொண்டு தான், புழுங்கல் அரிசிக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

அரிசி ஏற்றுமதியில் இந்தியா:

சர்வதேச அளவில் புழுங்கல் அரிசியை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் இந்தியா மிகவும் முக்கியமானது. 2022 ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மொத்த அரிசி ஏற்றுமதியில் புழுங்கல் அரிசியின் ஏற்றுமதி மட்டும் 7.4 மில்லியன் டன்களாக உள்ளது. இந்த நிலையில் இந்திய அரசு விதித்துள்ள புதிய வரியால், சர்வதேச சந்தையில் அரிசியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஓட்டுமொத்த தென்கிழக்கு நாடுகளிலும் அரிசி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.  

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
ஏறிய வேகத்தில் குறைந்தது தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ...
Kerala Bumper Lottery: வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
வரலாற்றில் முதல்முறை; ரூ.30 கோடி முதல் பரிசு, மொத்தம் ரூ.125 கோடி- கேரளா பம்பர் லாட்டரி விவரம்!
Gold rate today : மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
மீண்டும் உயர்ந்தது தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.?
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!
Flipkart அலறவிட வரும் Nothing Phone 4b... ! ரூ.5000 தள்ளுபடி, 6000 mAh அசுர பேட்டரியுடன் மாஸ் என்ட்ரி!

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
Thirumavalavan: ரெண்டு சீட்டு வச்சுகிட்டு இவ்ளோ ஆட்டமா? மனம் நொந்து பேசிய திருமாவளவன்!
TVK vs ADMK:
TVK vs ADMK: "ஆற்றாமையில் அழுகல்.. தீர்ந்துபோன சக்தி.." இபிஎஸ்-ஐ சரமாரியாக விமர்சித்த தவெக!
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
இளைஞர் பட்டாளம் இல்லாத அதிமுக.. புது ரத்தம் பாய்ச்சுவாரா எடப்பாடி பழனிசாமி? காத்திருக்கும் சவால்
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
TamilNadu Power Shutdown: சென்னை, கோவை உட்பட பல மாவட்டங்களில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின் தடை: முழு விவரம்!
Palani temple land scam : ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
ரூ.100 கோடி பழனி கோயில் நில மோசடி நடந்தது எப்படி.? பரபரப்பு Time Line-ஐ வெளியிட்ட திமுக
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
IND vs ENG: தொடரை வெல்லுமா இந்தியா? பேட்டுடன் உள்ளே இறங்கிய கில் படை! சேசிங்கில் அசத்துமா இங்கிலாந்து?
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
உஷார்! கோவையில் நாளை (17-07-2026) 7 மணி நேரம் மின்தடை- எங்கெங்கே? இதோ லிஸ்ட்!
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
பள்ளிகளில் கட்டாய பாலியல் கல்வி; மத்திய அரசு சொன்ன முக்கிய தகவல்- பாலியல் வன்கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா?
Embed widget