மேலும் அறிய

இன்னும் 2 நாள் தான்.. இதை மட்டும் செய்யலைனா வங்கி கணக்கு முடங்கிடும். எந்த வங்கி தெரியுமா.?

வங்கி கணக்கில் பல லட்சம் ரூபாய் பணம் இருந்தாலும் அதில் இருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத நிலையானது ஏற்படவுள்ளது. டிசம்பர் 1ஆம் தேதிக்குள் வங்கியில் e-KYC அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கி சேவை முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கைக்குள் உலகம்- ஒரு நொடியில் பண பரிமாற்றம்

நாளுக்கு நாள் மாறி வரும் நவீன காலத்திற்கு ஏற்ப வீட்டிற்குள் இருந்தே உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் அந்த பொருட்களையும் வாங்க முடியும். அப்படி கைக்குள் உலகம் வந்து விட்ட நிலையில், ஒரு சில நொடிகளில் பணத்தை வரவு வைக்கவும், பணத்தை அனுப்பவும் முடிகிறது. அந்த அளவிற்கு வங்கிகளில் பண பரிமாற்றம் எளிமையாக மாறிவிட்டது. மேலும் ஒவ்வொரு மாதமும் ஊழியர்களுக்கு சம்பளம், வாங்கிய கடனுக்கு இஎம்ஐ கட்டுவது என வங்களின் சேவையும் மக்களோடு ஒன்றிணைந்துவிட்டது. இந்த நிலையில் வங்கியில் உள்ள உங்கள் பணத்தில் ஒரு ரூபாய் கூட எடுக்க முடியாத நிலை உருவானால் என்ன ஆகும். அப்படி ஒரு நிலை தான் டிசம்பர் 1ஆம் தேதி முதல் உருவாகப்போகிறது.

வங்கி கணக்கு முடங்கும் அபாயம்

வங்கி கணக்கில் இருந்து பணபரிமாற்றம் செய்யமுடியாமல் முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வங்கியில் e-KYC அப்டேட் செய்யாத வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு முடக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) தங்களது வாடிக்கையாளர்களுக்கு அலர்ட் விடுத்துள்ளது. கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்ட பஞ்சாப் வங்கி வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், வரும் நவம்பர் 30, 2025-க்குள் e-KYC புதுப்பிக்கப்படாத நிலையில், அவர்களின் சேமிப்பு கணக்குகள் தற்காலிகமாக முடக்கப்படும் என்று வங்கி அறிவித்துள்ளது. இதன் காரணமாக வங்கியில் இருந்து பணம் எடுப்பது, பணம் செலுத்துவது முற்றிலும் முடங்கும் நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களுக்கு பஞ்சாப் வங்கி எச்சரிக்கை

எனவே இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வங்கிக்கு சென்று வாடிக்கையாளர்களின் அடையாளமாக உள்ள ஆதார் அட்டை, பான் அட்டை, வீட்டின் முகவரி சான்று, வாடிக்கையாளரின் புகைப்படம், வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் ஆகியவை எடுத்துச் செல்ல வேண்டும். அப்போது e-KYC jதிவேற்றம் செய்யப்படும். அல்லது வீட்டில் இருந்தே e-KYC செய்வதற்கான வாய்ப்பையும் வங்கி நிர்வாகம் அளித்துள்ளது. அதன் படி,  PNB ONE மொபைல் ஆப் வழியாகவோ, இணைய வங்கி சேவை மூலமாகவோ KYC வீட்டில் இருந்து செய்யலாம். இது மட்டுமில்லாமல் வங்கியில் KYCக்காக நம்முடைய ஆவணங்களை அளித்தோமா.? இல்லையா.? என பலருக்கு குழப்பம் இருக்கும். எனவே e-KYC செய்து விட்டோமா என்பதையும் ஈசியாக தெரிந்து கொள்ளலாம். 

 

KYC பதிவேற்றம் செய்வது எப்படி.?

பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணைய வங்கி தளத்தில் உள்நுழைந்து ‘Personal Settings’ அல்லது ‘Profile’ பகுதியில்  KYC என்ற குறியீட்டை கிளிக் செய்வதன் மூலம் ஏற்கனவே e-KYC செய்யப்பட்டு விட்டதா என தெரியவரும். அதில் KYC பதிவேற்றம் செய்யவில்லையென்றால் அது தொடர்பான அலர்ட் விடுக்கும்.KYC பதிவேற்றம் முடிந்திருந்தால் ‘KYC Updated’ என அந்த இணைய தள பக்கத்தில் குறிப்பிடப்படும்.

KYC எதற்காக.?

பணமதிப்பு, மோசடி, நிதி குற்றங்களை தடுப்பதற்காக KYC அவசியமானதாக உள்ளது. தற்போது உள்ள காலத்தில் சமூகவலைதளங்கள் மூலம் பண மோசடி அதிகரித்துள்ளது. எனவே இதனை தடுக்கவும் KYC முக்கியமானதாக உள்ளது. 

தலைப்பு செய்திகள்

Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
தமிழக தொழில் துறை 17-க்கு சரிவு.. ஆர்.பி. உதயகுமார் த.வெ.க., மீது கொந்தளிப்பு !
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
Gold Silver Rate Today: நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! மாலையில் திடீரென அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை; இப்போது விலை என்ன.?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
மதுரையில் தவறான நட்பால் பெண் கொலை: பரிதவிக்கும் குடும்பம்!
Embed widget