![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை..! இன்று என்ன நிலவரம்..?
Gold, Silver Price : சென்னையில் இன்று சவரன் தங்கம் சவரனுக்கு ரூபாய் 64 அதிகரித்து 38 ஆயிரத்து 640க்கு விற்கப்படுகிறது.
![Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை..! இன்று என்ன நிலவரம்..? gold and silver price chennai on 20th august 2022 Gold, Silver Price : மீண்டும் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை..! இன்று என்ன நிலவரம்..?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/20/6e5a7c72a6eeb347cebb2905914c57cf1660968785461102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் 22 காரட் தங்கம் நேற்று கிராமிற்கு ரூபாய் 4 ஆயிரத்து 830க்கு விற்கப்பட்டது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 38 ஆயிரத்து 576க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சரிந்து காணப்பட்ட தங்கம் விலை இன்று சற்று ஏற்றம் கண்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, ரூபாய் 8 அதிகரித்து ரூபாய் 4 ஆயிரத்து 830க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் 64 அதிகரித்து ரூபாய் 38 ஆயிரத்து 640க்கு விற்கப்படுகிறது.
24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 5 ஆயிரத்து 232க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூபாய் 41 ஆயிரத்து 856க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 61.30க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 61 ஆயிரத்து 300க்கு விற்கப்படுகிறது.
தங்க ஆபரணங்கள்
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம். சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.
அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது.
தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. ,இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)