மேலும் அறிய

ரயில்வே அமைச்சக அறிவிப்பால் கடும் சரிவில் ஐ.ஆர்.சி.டி.சி: உடனே பின்வாங்கிய நிர்வாகம்!

கடந்த நிதி ஆண்டில் ரூ.299.13 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியது. கொரோனா காரணமாக இந்த வருமானம் குறைந்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ349 கோடி அளவுக்கு கட்டணம் மூலம் வருமானம் ஈட்டி இருந்தது.

ஒரு காலத்தில் இல்லை. ஒரு மாதத்துக்கு முன்பு வரை முதலீட்டாளர்களின் விருப்ப பங்காக இருந்தது ஐ.ஆர்.சி.டி.சி. ஆனால் தற்போது (அக் 29) வர்த்தகத்தில் சுமார் 25 சதவீதம் வரை வர்த்தகத்தின் தொடக்கத்தில் சரிந்தது. இந்த பங்கு உயர்வதற்கு என்ன காரணம் சொல்லப்பட்டதோ அதே காரணம்தான் சரிவதற்கும்.

இந்திய ரயில் டிக்கெட் விற்பனையில் மோனோபோலி சந்தை வைத்திருந்தது. தற்போது அதே காரணம், சந்தை மதிப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

50 சதவீத வருமானம்:

ஐஆர்சிடிசி நிறுவனம் வசூலிக்கும் கட்டணத்தில் 50 சதவீதம் அளவுக்கு மத்திய ரயில்வே அமைச்சகத்துக்கு வழங்க வேண்டும் என பங்குச்சந்தை அமைப்புக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்திருக்கிறது. வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் வருமான பகிர்வு இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறது.

கடந்த நிதி ஆண்டில் (20-21) ரூ.299.13 கோடி அளவுக்கு வருமானம் ஈட்டியது. கொரோனா காரணமாக இந்த வருமானம் குறைந்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டில் ரூ349 கோடி அளவுக்கு கட்டணம் மூலம் வருமானம் ஈட்டி இருந்தது.

ரயில்வே அமைச்சக அறிவிப்பால் கடும் சரிவில் ஐ.ஆர்.சி.டி.சி: உடனே பின்வாங்கிய நிர்வாகம்!

2014- ஆண்டுக்கு முன்பு வருமான பகிர்வு என்பது இல்லை. 2014-ம் ஆண்டு 80 சத்வீதம் நிறுவனத்துக்கும் 20 சதவீதம் மத்திய அரசுக்கு பகிரப்பட்டது. அடுத்த ஆண்டில் 50:50 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

2016-ம் ஆண்டு பண மதிப்பு நீக்கத்துக்கு ( நவ 23) பிறகு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமான சேவை கட்டணத்தை ஐஆர்சி.டி.சி நிறுத்தி வைத்திருந்தது. ஆனால் நிறுவனத்தின் வருமானம் குறைந்ததை அடுத்து 2019-ம் ஆண்டு செப்டம்பர் முதல் மீண்டும் சேவை கட்டணம் அமல்படுத்தப்பட்டது. ஏசி இருக்கைக்கு 30+ஜிஎஸ்டி ஏசி அல்லாத இருக்கைக்கு 15+ஜிஎஸ்டி என கட்டணம் நிர்ணயம் செய்யப்படுகிறது

பெரும் பாதிப்பு

இந்த நிலையில் ரயில்வே அமைச்சகத்தின் வருமான பகிர்வு திட்டம் முதலீட்டாளர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அக்டோபர் 28-ம் தேதி இந்த கடிதத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டது. அடுத்த நாள் அக் 29 இந்த பங்கின் பிரிப்பு நடவடிக்கைகள் நடந்தன. இதனால் ஒரு நிச்சயமற்ற சூழல் முதலீட்டாளர்களிடம் தெரிந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு லட்சம் கோடி ரூபாய் என்னும் சந்தை மதிப்பை இந்த பங்கு தொட்டது. ஆனால் அரசின் இந்த அறிவிப்பு ஏற்கெனவே சந்தையில் தெரியவந்ததால்தான் இந்த பங்கில் சரிவு இருக்கிறது என்றும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அக்டோபர் 29-ம் தேதி வர்த்தகத்தின் தொடக்கத்தில் அதிகபட்சம் 25 சதவீதம் சரிந்து ரூ.685-க்கு இந்த பங்கின் வர்த்தகம் இருந்தது.

ரயில்வே அமைச்சக அறிவிப்பால் கடும் சரிவில் ஐ.ஆர்.சி.டி.சி: உடனே பின்வாங்கிய நிர்வாகம்!

ரயில்வே துறை இதுபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்ததால், இந்த நிறுவனம் மட்டுமல்லாமல் பொதுத்துறை நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறையும் என பல பங்குச்சந்தை வல்லுநர்கள் அதிருப்தி தெரிவித்திருக்கிறார். ஆங்கில ஊடகங்கள் இதனை செல்ப் கோல் என எழுதி இருக்கிறது.

அரசாங்கத்துக்கு கிடைக்கப்போவது என்னமோ ரூ.200 கோடிதான். ஆனால் இந்த அறிவிப்பு காரணமாக ரூ.18000 கோடி அளவுக்கு ஒரே நாளில் சந்தை மதிப்பு சரிந்தது. தற்போது 70000 கோடி ரூபாயாக இருந்தாலும் வர்த்தகத்தின் இடையே ரூ.54,828 கோடியாக சந்தை மதிப்பு இருந்தது.

அறிவிப்பு வாபஸ்

ரயில்வே அமைச்சகத்தின் இந்த அறிவிப்பு காரணமாக பங்குகள் கடுமையாக சரிந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதனால் சரிந்த பங்குகள் மீண்டும் உயரத்தொடங்கி இருக்கின்றன. 25 சதவீதம் அளவுக்கு சரிந்த பங்கு தற்போது உயர்ந்து 5 சதவீத சரிவில் இருக்கிறது.

இதுபோன்ற விளையாட்டை பட்டியலிட்ட தனியார் நிறுவனம் எதாவது செய்தால் அந்த நிறுவனம் மீது செபி கடுமையான நடவடிக்கையை எடுக்கும். ஆனால் இங்கு என்ன முடியும்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ABP Reporter Attack | ABP REPORTER மீது தாக்குதல்”யாருங்க அடிக்க சொன்னா..?” ACTION-ல் இறங்கிய செய்தியாளர்கள்Amit Shah About ADMK alliance |  அதிமுகவுடன் கூட்டணி உறுதி ரகசியத்தை உடைத்த அமித்ஷா! கேமுக்குள் வந்த எடப்பாடி |ADMK | BJP | EPS Delhi VisitMK Stalin Vs EPS Vs Vijay | அடுத்த முதல்வர் யார்? EPS-ஐ பின்னுக்கு தள்ளிய விஜய் தட்டித் தூக்கிய ஸ்டாலின்Shruthi Narayanan | ”அந்த வீடியோல நானா...அக்கா, தங்கச்சி கூட பொறக்கல”ஸ்ருதி நாராயணன் பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MI vs GT: சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
சாத்தி எடுத்த சுதர்சன்.. ஆனா பாண்டியா படைக்கு இதெல்லாம் ஜூஜூபி.. மிரட்டுமா மும்பை?
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
களத்தில் இறங்கிய இந்தியா.. ஆபரேஷன் பிரம்மா.. மியான்மருக்கு விரைந்த NDRF வீரர்கள்!
"நான்தான் உதயநிதி உதவியாளர்".. அரசுவேலை வாங்கித்தருவதாக ரூ.2 லட்சம் ரூபாய் மோசடி
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
கூட்டாக சிக்கிய டிரம்ப் நிர்வாகம்! சிக்னல் ஆப் வழியாக டாப் சீக்ரெட் கசிந்தது எப்படி? யார் அந்த பத்திரிகையாளர்?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
பறிபோன பச்சிளம் குழந்தையின் உயிர்.. கர்ப்பிணிக்கு அனுமதி மறுத்த மருத்துவமனை.. என்ன கொடுமை இது?
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
Vijay TVK: ஸ்கெட்ச்சு ரெடி..! திமுகவின் கோட்டையை அசைக்கும் விஜய், பாஜகவிற்கு பல்ப், தவெகவின் டார்கெட் 2026
BHIM UPI: என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
என்னது.. செலவு பண்றதுக்கு ஊக்கத் தொகையா.? புதுசா இருக்கே.. மத்திய அரசின் அதிரடி பிளான்...
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
ADMK Sengottaiyan: தம்பி எடப்பாடி..! ”அதிமுகவை அண்ணன் எடுத்துக்கிறேன்” - டெல்லி கொடுத்த பூஸ்ட், செங்கோட்டையன் தலைமை?
Embed widget