மேலும் அறிய

Budget 2026 Expectations: குவியும் இவி பேட்டரி கழிவுகள்.. மறுசுழற்சி அவசியம்! பட்ஜெட்டில் சிறப்பு மானியம் கிடைக்குமா?

2026 பட்ஜெட் மூலம் முறையான கொள்கைகளை வகுத்தால், இந்தியா சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பேட்டரி மூலப்பொருட்களுக்கான இறக்குமதிச் சுமையைக் குறைத்து தற்சாரபு அடையவும் வழிவகுக்கும்.

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு மிக வேகமான வளர்ச்சியை எட்டி வருகிறது. குறிப்பாக 2030-ஆம் ஆண்டிற்குள் இருசக்கர வாகன சந்தையில் 30 சதவீதமும், மூன்று வாகன சந்தையில் 50 சதவீதத்திற்கும் மேலாகவும் மின்சார வாகனங்கள் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனப் பிரிவு தற்போது 5 சதவீத அளவில் இருந்தாலும், ஆண்டுக்கு 85 முதல் 90 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்து வருகிறது. 

இந்த அசுர வளர்ச்சியின் மறுபக்கமாக, 2030-ஆம் ஆண்டிற்குள் பேட்டரி கழிவுகளின் அளவு 128 ஜிகாவாட் ஹவர் (GWh) என்ற அளவைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், பயன்பாடு முடிந்த மின்சார வாகனங்களில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவை மட்டுமே தற்போது முறையான மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன. பேட்டரி மறுசுழற்சிக்கான வலுவான கட்டமைப்பு இல்லாவிட்டால், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நாம் முன்னெடுக்கும் இந்த மாற்றம், புதியதொரு சுற்றுச்சூழல் அச்சுறுத்தலாக மாறும் அபாயம் உள்ளது.

இந்தியாவின் மறுசுழற்சி தயார்நிலை

இந்தியாவின் மறுசுழற்சி தயார்நிலையைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு 50,000 டன்களுக்கும் அதிகமான பேட்டரிகளை மறுசுழற்சி செய்யும் திறன் நம்மிடம் இருந்தாலும், அதில் 20 முதல் 25 சதவீதத் திறன் மட்டுமே தற்போது பயன்படுத்தப்படுகிறது. 2022-ஆம் ஆண்டின் பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள் (BWMR) உற்பத்தியாளர்களுக்குப் பொறுப்புகளை வழங்கினாலும், இன்னும் முறைசாரா மறுசுழற்சி நிறுவனங்களே இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றன.

சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எச்சரிப்பது போல, முறையான நிதி மற்றும் தொழில் கொள்கைகள் இல்லாவிட்டால், பேட்டரி மறுசுழற்சியில் இந்தியா பின்தங்க நேரிடலாம். சமீபத்தில் சுரங்க அமைச்சகம் பேட்டரி மூலப்பொருட்களை மீட்பதற்கான மானியத் திட்டத்தை அறிவித்துள்ளது ஒரு நல்ல தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.

மறுசுழற்சி துறையில் உள்ள முட்டுக்கட்டைகள்

மறுசுழற்சி துறையில் உள்ள முக்கிய சிக்கல்களில் ஒன்று, பேட்டரிகளிலிருந்து முழுமையான மூலப்பொருட்களை எடுப்பதற்குப் பதிலாக, இடைநிலை பொருளான 'பிளாக் மாஸ்' (Black Mass) எடுப்பதோடு பல நிறுவனங்கள் நிறுத்திக் கொள்கின்றன. மேலும், பேட்டரிகளைச் சேகரிப்பதற்கான முறையான மையங்கள் இல்லாததால், பழைய பேட்டரிகளைத் ஒன்று சேர்ப்பது என்று சவாலாக உள்ளது.

பொருளாதார ரீதியாகப் பார்க்கும்போது, மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைக் காட்டிலும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் லித்தியம் மற்றும் கோபால்ட் மலிவாகக் கிடைப்பதும், மறுசுழற்சி செய்வதற்கான அதிகப்படியான செலவும் இத்துறையின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. சீனா போன்ற நாடுகளில் நஷ்டம் ஏற்பட்டாலும் மூலோபாய ரீதியாக மறுசுழற்சி ஊக்குவிக்கப்படுகிறது. அதுபோன்ற ஒரு நிதிச் சமன்பாட்டுத் திட்டம் இந்தியாவிற்கும் அவசியமாகிறது.

 என்ன தீர்வுகள் கிடைக்கலாம்?

இந்தச் சூழலில், 2026-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட் இத்துறைக்கு ஒரு திருப்புமுனையாக அமையக்கூடும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சீனாவின் நடைமுறைகளைப் பின்பற்றி, பேட்டரிகளின் வாழ்நாளைக் கண்காணிக்கும் 'டிஜிட்டல் பேட்டரி பாஸ்போர்ட்' முறை மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவோருக்கு வரிச் சலுகை போன்ற திட்டங்களை இந்தியா அறிமுகப்படுத்தலாம். மேலும், மறுசுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களுக்கு நேரடி மானியம் வழங்குவதுடன், 'பசுமை உள்கட்டமைப்பு பத்திரங்கள்' மூலம் இத்துறைக்கான நிதியைத் திரட்டலாம். பேட்டரி மறுசுழற்சிக்கான ஒரு பிரத்யேக 'சிறப்பு மையத்தை' (Centre of Excellence) அமைப்பதன் மூலம் நவீன தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்க முடியும். மொத்தத்தில், 2026 பட்ஜெட் மூலம் முறையான கொள்கைகளை வகுத்தால், இந்தியா சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், பேட்டரி மூலப்பொருட்களுக்கான இறக்குமதிச் சுமையைக் குறைத்து தற்சாரபு அடையவும் வழிவகுக்கும்.

 

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
கள்ளக் காதலுக்காக கணவனைக் கொன்ற மனைவி !! இறுதி சடங்கில் நடத்திய நாடகம் !! சிக்கியது எப்படி ?
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
Vadivelu: திமுக ஆட்சி இல்லாத தமிழ்நாடு அழிந்து விடும்.. என் தாய் மீது ஆணை.. நடிகர் வடிவேலு பேச்சு!
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
காவ்யா மாறன் பார்த்த வேலை..! SRH நிர்வாகத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் - ”வெட்கமாக இல்லையா”
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Hybrid Cars: மிரட்டலான ஹைப்ரிட் கார் தான் வேணுமா? பட்ஜெட்டிலும், மைலேஜிலும் அசத்தும் மாடல்கள்- டக்கர் சாய்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Embed widget