மேலும் அறிய

`எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது நல்லது தான்!’ ஷாக் ஆன மக்கள்! காரணம் சொன்ன ஓனர்!

சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளர்.. அவர் பேசியவற்றுள் இருந்து முக்கியமானவற்றை இங்கே கொடுத்துள்ளோம்.

சமீபத்தில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தங்கள் வாகனங்களின் அப்டேட்டை மேற்கொண்டு அதிக பயன்பாட்டை ஊக்குவிக்கவுள்ளதாக அறிவித்திருந்தது. இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான சந்தை வளர்ந்து வரும் நிலையில் அதில் தனியாக இடத்தைப் பிடிக்க சிம்பிள் எனர்ஜி நிறுவனம் முயன்று வருகிறது. இந்நிலையில் சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான சுஹாஸ் ராஜ்குமார் சமீபத்தில் நேர்காணல் ஒன்றை அளித்துள்ளர்.. அவர் பேசியவற்றுள் இருந்து முக்கியமானவற்றை இங்கே கொடுத்துள்ளோம்...  

சுஹாஸ் ராஜ்குமார், `நாங்கள் தற்போது புதிதாக ஆய்வுகளுக்கும் மேம்பாட்டுக்குமான இடத்தை அதிகரித்து சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பிலான இடத்தில் செயல்படுவதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் நிறுவனத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையும் 50 என்பதில் இருந்து அதிகரித்து சுமார் 200 என்ற அளவை எட்டியுள்ளது. வரும் ஜூன் மாதத்திற்குள், இந்த எண்ணிக்கையை 350 என உயர்த்தவும் முடிவு செய்துள்ளோம்’ எனத் தெரிவித்துள்ளார். 

`எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது நல்லது தான்!’ ஷாக் ஆன மக்கள்! காரணம் சொன்ன ஓனர்!
சுஹாஸ் ராஜ்குமார்

தொடர்ந்து பேசிய சுஹாஸ் ராஜ்குமார், `நாங்கள் உருவாக்கியுள்ள வாகனங்களின் திறனைச் சுமார் 96 சதவிகிதம் என்ற அளவுக்கு மேம்படுத்தியுள்ளோம். மேலும் வாகனத்தின் வடிவமைப்பு, சமநிலை, எடை பகிர்வு முதலானவற்றை மேம்படுத்தியுள்ளோம். இந்தப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், வாகனங்களின் தயாரிப்பு சோதனை ஓட்டமாக ஏப்ரல் மாதத்திலும், உற்பத்திப் பணிகள் மே மாதத்தில் தொடங்கும். எங்கள் தொழிற்சாலையின் அளவின் படி, ஆண்டுதோறும் 5 லட்சம் வாகனங்களையும், அதிகபட்சமாக அதனை 10 லட்சம் வாகனங்கள் வரை உற்பத்தி செய்ய முடியும்’ எனக் கூறியுள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், `நாடு முழுவதும் 3 வகையிலான பயனாளர்கள் இருக்கின்றனர். ப்ரீமியம், நடுத்தர, மாஸ் மார்க்கெட் ஆகிய மூன்று வகைகளில், நாங்கள் ப்ரீமியம் வகைப் பயனாளர்களுக்கு வாகனங்களைத் தயாரிக்கிறோம். எனினும் எங்களிடம் 70 ஆயிரம் முதல் 90 ஆயிரம் வரையிலான விலை மதிப்புக்கும் வாகனங்கள் இருக்கின்றன. ஆனால் மாஸ் மார்க்கெட்டுக்கான விலை 40 ஆயிரம் முதல் 60 ஆயிரம் ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த இரண்டு வகையினருக்கும் ஏற்ற வாகனங்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டின் முடிவில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார். 

`எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடிப்பது நல்லது தான்!’ ஷாக் ஆன மக்கள்! காரணம் சொன்ன ஓனர்!

எலக்ட்ரிக் வாகனங்கள் எளிதில் தீப்பிடித்துக் கொள்வதாக எழுந்துள்ள புகாரைப் பற்றி பேசியுள்ள சுஹாஸ் ராஜ்குமார், `இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படுவது நல்லது. ஏனெனில் இதன்மூலம் மக்கள் ஆராய்ச்சி பற்றியும், பேட்டரியின் தன்மை பற்றியும், அதன் பாதுகாப்பு குறித்தும் சிந்திக்கத் தொடங்குவார்கள். சிம்பிள் எனர்ஜி, அல்ட்ராவைலெட், ஏதெர் முதலான நிறுவனங்கள் பாதுகாப்பான வாகனங்களை உருவாக்க முயன்று வருவது இதன்மூலம் மக்களுக்குத் தெரியும். மேலும், இந்த விழிப்புணர்வு காரணமாக இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான துறை மேலும் வளரும்’ என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Goa Cylinder Blast: அடக்கடவுளே..! நைட் க்ளப்பில் வெடித்த சிலிண்டர் - தீ விபத்தில் 23 பேர் பலியான சோகம்
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Virat Kohli: எப்போதும் அரசன்தான்.. 2025 விராட் கோலிக்கு எப்படி? இவ்வளவு ரன்களா?
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Tata Sierra: போட்டியாளர்களுக்கு செம்ம டஃப் கொடுக்கும் சியாரா - லோ & மிட் ஸ்பெக் விலைகளை அறிவித்த டாடா
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Madurai Hc ; மதுரை மேம்பாலத்திற்கு பாண்டிய மன்னர் பெயர் வைக்க மனு: நீதிமன்றம் அதிரடி!
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Rohit Sharma: ஹிட்மேனுக்கு ஹிட் அடித்ததா 2025? ரோகித் சர்மா சம்பவங்கள் எப்படி?
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
Embed widget