Watch Video: கனவுலாம் இல்லை, வந்தாச்சு பறக்கும் கார்..! சோதனைகளில் அபாரம், விலை? வீடியோ வைரல்..
Watch Video: பறக்கும் காரின் சோதனை முயற்சிகள் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Watch Video: பறக்கும் காரின் விலை சுமார் 2.5 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
பறக்கும் கார்:
தொடர்ந்து அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல்களுக்கு மருந்தாகக் கூறப்படும், எதிர்கால அம்சங்களை கொண்ட வாகனம், அதன் முதல் பயணத்தை தொடங்கியுள்ளது. அலெஃப் ஏரோநாட்டிக்ஸின் ரூ. 2.5 கோடி ($300,000) மதிப்புள்ள வாகனத்தை தெருக்களில் ஒரு சாதாரண காரைப் போலவே ஓட்ட முடியும். ஆனால் அதன் பானட்டில் விமானத்தில் இருக்கக் கூடிய ப்ரொப்பல்லர்களும், எந்த நேரத்திலும் புறப்பட அனுமதிக்கும் பூட்டும் உள்ளன. அமெரிக்காவை தளமாகக் கொண்ட அந்த நிறுவனம், பறக்கும் காரின் முதல் வீடியோவை வெளியிட்டுள்ளது.
பறக்கும் கார் இயங்குவது எப்படி?
விநியோகிக்கப்பட்ட மின்சார உந்துவிசையைப் பயன்படுத்தி, புரொப்பல்லர் பிளேடுகளை ஒரு வலை அடுக்குடன் மூடுவதால், கார் தரையில் இருந்து மேலே உயர்ந்து பறக்கிறது. நியூயார்க் போஸ்ட்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி , நிறுவனம் சோதனைக்காக ஒரு முன்மாதிரியைப் பயன்படுத்தியது, இது அலெஃப் மாடல் ஜீரோவின் அல்ட்ராலைட் எடிஷனாகும்.
ALEF’S FLYING CAR MOVES CLOSER TO REALITY WITH SUCCESSFUL TESTS
— Mario Nawfal (@MarioNawfal) February 22, 2025
California-based startup Alef Aeronautics is pushing ahead with its Model A flying car, aiming for production by early 2026.
The vehicle, which can drive like a car and take off vertically, is undergoing flight… pic.twitter.com/laQQi7Y9xu
இந்த சாதனையை 1903 ஆம் ஆண்டு ரைட் பிரதர்ஸின் கிட்டி ஹாக் வீடியோவுடன், அலெஃப்பின் தலைமை நிர்வாக அதிகாரி ஜிம் டுகோவ்னி ஒப்பிட்டுள்ளார். மேலும், "இந்த ஓட்டுதல் மற்றும் விமான சோதனை ஒரு நிஜ உலக நகர சூழலில் தொழில்நுட்பத்தின் ஒரு முக்கிய சான்றாகும்" என குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ வைரல்:
திறந்தவெளி மற்றும் குடியிருப்புகள் நிறைந்த பகுதி என இரண்டு சூழல்களிலும், இந்த கார் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ரிமோட் மூலம் காரை இயக்கி பறக்கச் செய்துள்ளனர். அதுதொடர்பான வீடியோக்கள் வெளியானதில் இருந்து நெட்டிசன்கள் மிகவும் உற்சாகமடைந்துள்ளனர். சிறுவயதில் திரைப்படங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளில் கண்ட கார் தற்போது நிஜ உலகத்திலேயே வந்துவிட்டது. இதில் ஒருமுறையாவது பயணித்து, அந்த அனுபவத்தை உணர வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எப்போது பயன்பாட்டிற்கு வரும்?
வணிக நடவடிக்கைகளுக்காக, 110 மைல்கள் பறக்கும் வரம்பையும் 200 மைல்கள் ஓட்டும் வரம்பையும் கொண்ட இரண்டு இருக்கைகள் கொண்ட அலெஃப் மாடல் ஏ பறக்கும் காரை அறிமுகப்படுத்த அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த வாகனம் தானியக்க விமான திறன்களையும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 3,300 முன்கூட்டிய ஆர்டர்களைப் பெற்றுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள், அலெஃப் மாடல் இசட் என்ற புதுப்பிக்கப்பட்ட பதிப்பை வெளியிட அலெஃப் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இது நான்கு பேர் ஓட்டக்கூடிய பறக்கும் செடானாக இருக்கும். இது அதிகபட்சமாக 200 மைல்கள் பறக்கும் மற்றும் 400 மைல்கள் ஓட்டும் வரம்பைக் கொண்டிருக்கும்.

