மேலும் அறிய

திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம்!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று அதிகாலை முதல் கொட்டும் பணியில் தரிசனம் செய்து வருகின்றனர்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம் செய்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவையொட்டி தியாகராஜ சுவாமி தரிசனம் ஆண்டுதோறும் மார்கழி மாதம் திருவாதிரை தினத்தில் நடைபெறுவது வழக்கம். அதனையொட்டி தியாகராஜர் சுவாமி யதாஸ்தானத்தில் இருந்து ராஜநாராயண மண்டபத்தில் வைக்கப்பட்டு பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பது வழக்கம். இதற்காக திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலுக்கு வருகை தந்து திருவாதிரை திருவிழா பாத தரிசனத்தை வழிபட்டுச் செல்வது வழக்கம். இந்த நிலையில் இன்று திருவாதிரை திருவிழாவையொட்டி தியாகராஜ சுவாமி பாத தரிசனம் காலை முதல் நடைபெற்று வருகிறது.


திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம்!

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தில் திருவாதிரை திருவிழாவையொட்டி தியாகராஜசுவாமி நேற்று இரவு திருவாதிரை மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இன்று அதிகாலை நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் தியாகராஜசுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பதஞ்சலி வியாக்கிரபாத முனிவர் களுக்கும் பக்தர்களுக்கும் வலது பாதம் காட்டும் பாத தரிசனமும் தீபாரதனை நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து நடராஜர் சிவகாமி அம்மன் வீதியுலா வந்து சபாபதி மண்டபத்திற்கு எழுந்தருள செய்யப்பட்டது. இவ்விழாவில் திருவாரூர் மாவட்டம் இன்று தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் நின்று அதிகாலை முதல் கொட்டும் பணியில் தரிசனம் செய்து வருகின்றனர்.


திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தில் திருவாதிரை திருவிழா: ஆயிரக்கணக்கானோர் பாத தரிசனம்!

கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நடைபெறும் பாத தரிசன விழாவிற்கு பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்த நிலையில், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் பக்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அதன் அடிப்படையில் பாத தரிசனத்தை முன்னிட்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். நீண்ட வரிசையில் நின்று தியாகராஜர் சுவாமியை பாத தரிசனம் செய்து செல்கின்றனர். பாத தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மாவட்ட எஸ்பி விஜயகுமார் உத்தரவின் அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா தொற்று பரவாமல் இருக்கும் வகையில் பொதுமக்கள் சமூக இடைவெளி கடைப்பிடித்து முகக்கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arvind Kejriwal Vacates CM House | CM இல்லத்தில் கலங்கிய கெஜ்ரிவால் கவலையில் ஆம் ஆத்மியினர்Madurai Deputy Mayor  துணை மேயர் கொலை மிரட்டல் மதுரையில் அதிகார அத்துமீறல்?நடவடிக்கை எடுப்பாரா சு.வெVijay | பிரம்ம முகூர்த்தத்தில் பந்தக்கால் சனாதன ரூட்டெடுக்கும் விஜய்? திரிசூலம்.. எலுமிச்சை மாலை..Saibaba statues removed :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
இஸ்ரேலுக்கு எதிராக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும்: ஈரான் பகிரங்க அழைப்பு
Rajinikanth:
Rajinikanth: "பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி" - ரஜினிகாந்த்
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
ஈரான் - இஸ்ரேல்: ஒரு காலத்தில் தோழர்கள், தற்போது பரம எதிரி: இடையில் அமெரிக்கா எப்படி? இந்தியா யார் பக்கம்.?
Chennai Air Show Rehearsal: இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
இந்திய விமானப்படை தினம் - சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகை - புகைப்பட தொகுப்பு!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
30 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை.. சத்தீஸ்கரில் தொடரும் என்கவுண்டர்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
EXCLUSIVE: இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹில்புல்லா தலைவர் ஹஷெம் சைஃபுதீன்? ABP News கள ரிப்போர்ட்!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
SC சமூகத்தவருக்கு உள் ஒதுக்கீடு.. மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி!
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
காவலரை வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற கொலை குற்றவாளி: சுட்டுப்பிடித்த போலீஸ்
Embed widget