மேலும் அறிய

திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை; முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை காண்பித்து தரிசனம் செய்யலாம்.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் முதியவர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்காக தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகம் முறையான அறிவிப்பு செய்யாததால் முதியவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றமடைந்து வருகின்றனர்.


திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை;  முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அறுபடை வீடுகளுள் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு  சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கடந்த மார்ச் 9-ந் தேதி முதல் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசனம் என இரண்டு வழியாக மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சஇதனால் விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து நின்று தரிசனம் செய்து வருகின்றனர். 


திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை;  முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

இந்நிலையில் முதியவர்கள் எளிதாக சென்று சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் சார்பில் தனி பாதை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முதியவர்கள்  சண்முக விலாசம் மண்டபத்தில் உள்ள துலாபாரம் வாசல் அருகே இருக்கைகள் அமைத்து அமர்ந்து செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  இந்த பாதையில் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட  முதியவர்கள் தங்கள் வயதை உறுதிப்படுத்தும் வகையில் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினை காண்பித்து  தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது. 


திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை;  முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

இருந்தபோதிலும் இந்த செயல் திட்டம் நடைமுறைப்படுத்தபடாததால் பல்வேறு பகுதியிலும் வந்திருக்கக்கூடிய முதியவர்கள் அந்த வழிப்பாதையில் தரிசனம் செய்வதற்காக நீண்ட நேரம் காத்திருந்து வருகின்றனர். மேலும் அங்கு இருக்கக்கூடிய பணியாளர்களும், ஊழியர்களும் முறையான பதில் அளிக்காததால் நீண்ட நேரம் காத்திருந்து ஏமாற்றம் அடைந்து மீண்டும் பொது தரிசனத்தில் சென்று காத்திருந்து தரிசனம் செய்யும் நிலை இருப்பதாக முதியவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


திருச்செந்தூர் கோவிலில் முதியவர்களுக்கு தனிப்பாதை;  முறையான அறிவிப்பில்லை என பக்தர்கள் புகார்

எனவே உரிய நடைமுறைகளை செயல்படுத்துவதற்கு  முன் அதற்கான முன்னறிவிப்புகளை முறையாக செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாள்தோறும் அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை காரணமாக அடிப்படை வசதிகளை செய்து தர கோவில் நிர்வாகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் பக்தர்களும் முன்வைக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget