மேலும் அறிய

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - 5ஆம் பிரகாரத்தில் பிடாரி அம்மன் சுவாமி தரிசனம்

திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இந்த தீபத் திருவிழாவையொட்டி கோவிலின் காவல் தெய்வமாக விளங்கும் பிடாரி அம்மன் உற்சவம் அண்ணாமலையார் கோவிலின் 5ஆம் பிரகாரத்தில் இன்று நடைபெற்றது. இதனையொட்டி அண்ணாமலையார் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பிடாரி அம்மன் திருக்கோவிலில் பிடாரி அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், அபிஷேகதூள் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனைகள் செய்யப்பட்டது. கொரோனா தொற்று காரணமாக அண்ணாமலையார்‌ கோவிலில் பக்தர்கள் குறைந்த அளவே அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - 5ஆம் பிரகாரத்தில் பிடாரி அம்மன் சுவாமி தரிசனம்

 

மேலும் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி மாட வீதியில் வலம் வரும் பிடாரியம்மன் உற்சவம் கொரோனா தொற்றால் பக்தர்களை அதிக அளவு அனுமதிக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.இதனால் அண்ணாமலையார் கோயிலின் 5 ஆம் பிரகாரத்தில் கோயில் ஊழியர்கள் பிடாரி அம்மனை சுமந்தவாறு தொடர்ந்து இரண்டாம் முறையாக ஐந்தாம் பிரகாரத்தில் உற்சவம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக்கொடி மரத்தில் வரும் 10 ஆம் தேதி காலை 6.30 மணி முதல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற உள்ளது. அதன்பிறகு, 10 நாட்கள் சுவாமிகளின் உற்சவம் நடைபெறும். கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள 5 ஆம் பிரகாரத்தில் சுவாமிகளின் வீதியுலா நடைபெறும். மாட வீதியில் நடைபெறும் உற்சவம் மற்றும் மகா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - 5ஆம் பிரகாரத்தில் பிடாரி அம்மன் சுவாமி தரிசனம்

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு மூலவர் சன்னதியில் பரணி தீபமும் மற்றும் மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீபம் ஏற்றப்படும் சில நிமிடங்களுக்கு முன்பாக, மகாதீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, ஆண் - பெண் சமம் என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் அர்த்தநாரீஸ்வரர் காட்சிக் கொடுக்க உள்ளார். இந்நிகழ்வு ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவதை பக்தர்கள் தரிசிக்க, தடை விதிக்கப்பட்டு உள்ளது. அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டதும், ஜோதி வடிவமாக அண்ணாமலையாரே காட்சி கொடுப்பதால் மூலவர் சன்னதி அடைக்கப்படும். பின்னர் மறுநாள், மூலவர் சன்னதி திறக்கப்பட்டு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை ஆகியவை வழக்கம்போல் நடைபெறும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா - 5ஆம் பிரகாரத்தில் பிடாரி அம்மன் சுவாமி தரிசனம்

இதையடுத்து, கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளால் அய்யங்குளத்தில் 3 நாட்கள் நடைபெறும் தெப்பல் உற்சவமானது இந்தாண்டும் அண்ணாமலையார் கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்த குளத்தில் 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தெப்பல் உற்சவத்தை தொடர்ந்து, வெள்ளி ரிஷப வாகனத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவம் வரும் 23 ஆம் தேதி நடந்ததும் விழா நிறைவடையும். தற்போது கொரோனா வைரஸ்  தொற்று காரணமாக கோயிலுக்குள் கோவிலின் கட்டளை தாரர்கள் மற்றும்  உபயதாரர்கள் எனவும்  கோவிலில் குறைந்தளவு பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் திருவண்ணாமலை மாவட்ட  துணை காவல் கண்காணிப்பாளர் கிரன் சுருதி தலைமையில் 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து நாளை இரவு 9 ஆம் தேதி அண்ணாமலையார் திருக்கோவிலின் முதற்கண் கடவுளான விநாயக பெருமான் உற்சவம் நடைபெற உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Embed widget