மேலும் அறிய

Guru Poornima 2022 : இன்று குரு பூர்ணிமா.. எதையெல்லாம் செய்து வழிபடுவது சிறப்பு?

குரு பூர்ணிமா தினத்தன்று அன்று ஏழை எளியோருக்கு பருப்பு தானம் செய்வதன் மூலம் பண நெருக்கடியில் இருந்து மீண்டு வரலாம் என நம்பப்படுகிறது

நாம் அனைவரும் நம்முடைய வாழ்நாள் முழுவதும் இந்த நால்வரை என்றுமே மறக்கக்கூடாது. அவர்கள் மாதா, பிதா, குரு, தெய்வம். நம்மை பெற்றவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் நம்மை நல்வழியில் நடத்தி நலமும் வளமும் பெற வழிகாட்டியை இருக்கும் குருமார்கள். அப்பேற்பட்ட தெய்வத்திற்கு நிகரான குருக்களின் முக்கியத்துவத்தை நினைவு கூறும் வகையில் ஆடி மாதம் பௌர்ணமி திதி அன்று கொண்டாடப்படும் தினம் தான் குரு பூர்ணிமா. இந்த ஆண்டு ஜூலை 13ம் தேதி, புதன்கிழமை இந்த தினம் கொண்டாடப்படுகிறது. நம்மை சரியான பாதையில் வழிநடத்தும் தன்நலமற்ற தேவதைகளான ஆசிரியர்களுக்கு நன்றி கூறுவது அவசியம். 

ஆதி கடவுள் மகா விஷ்ணுவின் அம்சமானவர்  மகரிஷி வேத வியாஸ். அவர் மகா விஷ்ணுவிடம் இருந்து  வேதங்களை பெற்று அதனை ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்கு வேதங்களாக பிரித்தார். அவற்றை எளிய முறையில் மக்களுக்கு புரியும் வகையில் 18 புராணங்களாக தொகுத்து வழங்கினார். அந்த மகா குருவின் பிறந்த நாளான ஆடி மாதம் பௌர்ணமி திதி நாள் தான் குரு பூர்ணிமா தினமாக கொண்டப்படுகிறது. 

பண நெருக்கடிக்கு தீர்வு :

குரு பூர்ணிமா தினத்தன்று அன்று ஏழை எளியோருக்கு பருப்பு தானம் செய்வதன் மூலம் பண நெருக்கடியில் இருந்து மீண்டு வரலாம். மஞ்சள் நிறத்திலான இனிப்பு வகைகளை தானம் செய்வதன் மூலம் குரு பலம் பெறுவார். அதனால் உங்களுடைய பொருளாதார நிலையை மேலும் மேம்படும் என நம்பப்படுகிறது

வாழ்வில் வெற்றி பெற :

ஸ்ரீ லட்சுமி நாராயணன் கோயிலுக்கு சென்று துருவிய தேங்காய் கொடுத்து அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் வெற்றி பெரும். இந்த புனிதமான நாளில் விஷ்ணு பகவானையும் வழிபடுதல் மிகவும் சிறப்பு. குரு பூர்ணிமா தினத்தன்று மஞ்சள் நிற ஆடைகள் மற்றும் இனிப்புகளை தானம் செய்வது நல்ல பலனை கொடுக்கும் என நம்பப்படுகிறது

திருமண தடை விலக:

குரு பூர்ணிமா தினத்தன்று மஞ்சள் நிற இனிப்புகள் மற்றும் மஜால் உடைகள் தானம் செய்து வழிபாடு செய்வதன் மூலம்  ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் நீங்கும். திருமண தடைகள் விலக இந்த நன்னாளில் குரு யந்திரத்தை வைத்து முறையாக வழிபடுங்கள். இந்த பிராத்தனையை செய்வதன் மூலம் கூடிய விரைவில் நல்ல பொருத்தமான வரன் அமைந்து திருமண நிச்சயமாகும் என நம்பப்படுகிறது.

தென் இந்தியாவை விடவும் வட இந்திய பகுதிகளில் குரு பூர்ணிமா அனுசரிக்கும் வழக்கம் அதிகமாக உள்ளது

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்
Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
“அண்ணே, அவன தூக்குங்கண்ணே“, அமைச்சருக்கே கேட் போட்ட திமுகவினர் - திணறிய கே.என். நேரு
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பிசிஓடி பெண்களுக்கு குழந்தைப்பேறில் தாமதம் ஏன்? தடுப்பது எப்படி? மருத்துவர் வழிகாட்டல்!
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
பகுதிநேர ஆசிரியர்கள் கைது; துண்டு சீட்டு தொலைஞ்சிருச்சா? முதல்வரை கிழித்தெடுத்த ஈபிஎஸ்
Duraimurugan : ‘உயிர் இருக்கும் வரை நானே திமுகவின் பொதுச்செயலாளர்’ ஆவேசமான  துரைமுருகன்..!
‘உயிர் இருக்கும் வரை நானே பொதுச்செயலாளர்’ ஆவேசமான துரைமுருகன்..!
Minister on Buses: பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
பொது வேலைநிறுத்தம்; தமிழ்நாட்டில் நாளை பேருந்துகள் இயங்குமா.? அமைச்சர் கூறுவது என்ன தெரியுமா.?
Ramadoss Vs Anbumani: ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
ராமதாசுக்கு முழு அதிகாரம், அன்புமணி மீது நடவடிக்கை - பரபரப்பை கிளப்பிய பாமக செயற்குழு
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
Cuddalore Train Accident: பறிபோன மாணவர்கள் உயிர்.. கடலூர் விபத்திற்கு காரணமான ரயில் எங்கிருந்து எங்கே சென்றது?
மதுரை மேயர் மாற்றம்? அமைச்சர்கள் பிடிஆர் மூர்த்தி இடையே பனிப்போர்- களத்தில் இறங்கிய முதல்வர்!
மதுரை மேயர் மாற்றம்? அமைச்சர்கள் பிடிஆர் மூர்த்தி இடையே பனிப்போர்- களத்தில் இறங்கிய முதல்வர்!
Embed widget