மேலும் அறிய

Virudhunagar ; சூழலியல் சீர்கேட்டை மாற்ற மாணவர்கள் ஒன்றுகூடல்: அரச மரம் நடும் திட்டத்தின் முக்கியத்துவம்!

வேப்ப மரமும், அரச மரமும் இணைந்து வெளியிடக்கூடிய காற்று, நம்முடைய உடலுக்கும் மன நலத்திற்கும் மிகச் சிறந்தது. 

சூழலியல் சீர்கேடுகளை மாற்ற மாணவர்கள் மக்கள் இயக்கமாகத் திரள வேண்டும் - ஒரு கிராமம் ஓர் அரசமரம் திட்ட துவக்க விழாவில் காவேரி கூக்குரல் தமிழ்மாறன் பேச்சு.
 
ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டம்
 
விருதுநகர் மாவட்டத்தில், சூழலியல் சீர்கேடுகளை மாற்ற மாணவர்கள் மக்கள் இயக்கமாகத் திரள வேண்டும் என சிவகாசியில் நடைபெற்ற "ஒரு கிராமம் ஓர் அரசமரம்" திட்ட துவக்க விழாவில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசினார். பேரூர் ஆதீனத்தின் 24-ஆவது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஈஷா காவேரி கூக்குரலின் வழிகாட்டுதலில் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் அரச மரம் நடும் ‘ஒரு கிராமம் ஒரு அரச மரம் திட்டம்’ மாவட்ட வாரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்திற்கான திட்ட துவக்க விழா சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் நடைபெற்றது.
 
வேப்ப மரமும், அரச மரமும்
 
இவ்விழாவில் பேரூர் ஆதீனத்தின் 25-வது குரு மகாசன்னிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் முதல் மரக்கன்றை நட்டு விருதுநகர் மாவட்டத்திற்கான மரம் நடும் பணிகளை துவங்கி வைத்தார். அப்போது அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி முதல்வர் C.அசோக், சிவகாசி பசுமை மன்றத்தின் நிறுவனர் ரவி அருணாச்சலம், செல்வக்குமார், ஈஷா காவேரி கூக்குரல் தன்னார்வலர்கள் உடனிருந்தனர். இவ்விழாவில் பேசிய பேரூர் ஆதீனம், “ஒரு அரச மரம் நம்முடைய ஊருக்கு வருவதால் என்ன நன்மை என்று நீங்கள் நினைக்கலாம், இருக்கக்கூடிய மரங்களிலேயே அதற்குத்தான் 'அரச மரம்' என்று பெயர். ஏனென்றால் அதிலிருந்து வெளிப்படக்கூடிய காற்று அதிக அளவிலான ஆக்ஸிஜன் கொண்டது. நம்மவர்கள் அரச மரம் இருந்தால் பக்கத்திலேயே ஒரு வேப்ப மரத்தையும் வைப்பார்கள். அந்த வேப்ப மரமும், அரச மரமும் இணைந்து வெளியிடக்கூடிய காற்று, நம்முடைய உடலுக்கும் மன நலத்திற்கும் மிகச் சிறந்தது. 
 
பெண்களின் கருப்பை பிரச்னை
 
அரச மரத்தைச் சுற்றி வரும்போது நமக்குத் தூய்மையான காற்று கிடைக்கிறது, பெண்களின் கருப்பை தொடர்பான பிரச்னைகள் நீங்கி உடல்நலம் மேம்படுகிறது. முன்பெல்லாம் பள்ளிக்கூடங்கள் அரசு மரத்தடியிலும் ஆல மரத்தடியிலும் தான் நடந்தன. கல்வியைக் கொடுத்ததும் இந்த மரங்கள்தான். இன்று ஒரு செடி வைத்தால் அது தற்காலிகப் பயனைத் தரும். ஆனால் இந்த 'அரச மரம்' என்பது நம்முடைய சந்ததிகளுக்கு மிகப்பெரிய நன்மையைத் தரும். ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் இந்த நல்ல திட்டத்தை விருதுநகர் மாவட்டத்தில் கொண்டு சேர்த்திருக்கிறது.  இதற்காக ஈஷா 'காவேரி கூக்குரல்' இயக்கத்தின் தன்னார்வலர்கள் எடுத்துக்கொள்ளும் முயற்சி பாராட்டுக்குரியது.“ எனக் கூறினார். 
 
குறைந்தபட்சம் 5 அரச மரங்களையாவது நட வேண்டும்
 
ஈஷா காவேரி கூக்குரல் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசுகையில், "சத்குரு, 2004-ஆம் ஆண்டு பசுமை கரங்கள் இயக்கத்தினை துவங்கிய போது, ஒரு கிராமத்தில் 5 அரச மரங்கள் வைத்தால் அது அங்குள்ள மக்களின் உடல் மற்றும் மன நிலையில் பெரிய மாற்றத்தினை உருவாக்கும் எனக் கூறினார். பேரூர் ஆதீனத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவர்களுடன் இணைந்து இந்த “ஒரு கிராமம் அரச மரம்” திட்டத்தினை மாவட்டம் தோறும் துவங்கி செயல்படுத்தி வருகிறோம். இதுவரை கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் இந்த திட்டம் துவங்கப்பட்டு இதுவரை 3,888 கிராமங்களில் அரச மரங்கள் நடப்பட்டுள்ளன. தற்போது விருதுநகர் மாவட்டத்தில் துவங்கி உள்ளோம். தமிழகத்தின் 33,000-க்கும் மேற்பட்ட கிராமங்களிலும் குறைந்தபட்சம் 5 அரச மரங்களையாவது நட வேண்டும் என்பதே எங்களது நோக்கம். 
 
நாட்டு மரங்களை நட்டு வளர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும்
 
தமிழகத்தில் அழிந்து வரும் அரிய வகை மரங்களை மீட்டெடுத்து, விருதுநகர் மாவட்டத்தைப் பசுமையாக்கும் சிவகாசி பசுமை மன்றத்தின் செல்வகுமார் அவர்களின் பணி போற்றுதலுக்குரியது. உலகளவில் 40 சதவீத நிலம் பாலைவனமாகிவிட்டதாக ஐநா சபை எச்சரித்துள்ளது. அடுத்த 30 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 30 சதவீதம் குறையும் அபாயம் உள்ளது. இந்தச் சூழலியல் சீர்கேடுகளை மாற்றியமைக்க மாணவர்கள் ஒரு மக்கள் இயக்கமாகத் திரள வேண்டும். நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் யாரோ நட்ட மரத்திலிருந்து கிடைக்கிறது. அதேபோல் அடுத்த தலைமுறைக்காக நாம் எதை விட்டுச் செல்லப்போகிறோம் என்று சிந்திக்க வேண்டும். குறிப்பாக, சிவகாசி போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளில் ஒவ்வொரு மாணவரும் மண்ணுக்கேற்ற அரசமரம் போன்ற நாட்டு மரங்களை நட்டு வளர்க்க உறுதிமொழி ஏற்க வேண்டும். உங்களின் இந்தச் சிறு முயற்சிதான் எதிர்காலப் பஞ்சத்தைத் தடுக்கும் மிகப்பெரிய மாற்றமாக அமையும்'. எனக் கூறினார்.
 
 

தலைப்பு செய்திகள்

இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
இனிப்பில் உதிக்கும் பிரம்மாண்ட தொழில்: இந்திய விவசாயத்தின் கம்பீரமான கரும்பு சாம்ராஜ்யம்!
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
இது தான் மாற்றமா.? லஞ்சம் வாங்கிய கணவனை நீக்கிட்டு மனைவிக்கு பொறுப்பு.! TVK- வை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்
FCRA Bill: உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
உங்க சந்தோஷம் தான் முக்கியம்..! DMK-விற்காக FCRA மசோதாவை தாமதப்படுத்த BJP முடிவு? காரணம் என்ன?
ARR AMEEN CAR ACCIDENT : விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
விபத்தில் சிக்கிய ஏ.ஆர்.ரகுமான் மகன் ஓட்டிய கார்.! சென்னையில் நள்ளிரவில் நடந்தது என்ன.?
CM Vijay: தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..! தனித்தீர்மானம் கொண்டு வரும் CM விஜய் - ஒருமனதாக நிறைவேறுமா?
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
RB Udhaykumar: ”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
”CM விஜய்க்கு தெரிந்தது எல்லாமே த்ரிஷா மட்டும் தான்” - ADMK ஆர்.பி. உதயகுமார் அநாகரீக பேச்சு
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Embed widget