மேலும் அறிய

3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் வெறும் மூன்றே நாட்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர். 

கடந்த 25 வருடங்களாக சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கான பணிகளை செய்துவரும் ஈஷா, காவேரி கூக்குரல் திட்டத்தின் மூலம் தமிழக, கர்நாடக மாநிலத்தில் காவிரி வடிநில பகுதிகளில் உள்ள  விவசாய நிலங்களில், 242 கோடி மரங்களை நடுவது என்ற மாபெரும் செயலை செய்து வருகிறது. அதில் தமிழகத்திற்கான இந்த ஆண்டின் இலக்கு 1 கோடி மரங்கள் நடுவது. அதில் தற்போது நடவுக்காலம் துவங்கியுள்ளதால், மரக்கன்றுகள் நடும் பணியை ஈஷா வேளாண் காடுகள் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கோவை, திருப்பூர், மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 37 மாவட்டங்களில் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மரக்கன்றுகள் நடும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!
இதன்மூலம், சுமார் 165 விவசாயிகளின் நிலங்களில் 2 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு சாதனை படைத்துள்ளனர். குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மகோகனி, ரோஸ்வுட் போன்ற பண மதிப்புமிக்க டிம்பர் மரங்களை விவசாயிகள் தங்களின் பொருளாதார தேவைகளுக்காக நட்டுள்ளனர்.  
அதன்படி மதுரை மாவட்டத்தில் பாலமேடு அருகில் உள்ள சத்திரவெள்ளாலப்பட்டியை சேர்ந்த திரு.ராமசாமி என்பவர் 1650 டிம்பர் மரங்களை நடவு செய்துள்ளார். மண்ணுக்கேற்ற மரங்களை தேர்வு செய்வதில் தொடங்கி எந்தெந்த மரங்களுக்கு எவ்வளவு இடைவெளி விட்டு நட வேண்டும் என்பது வரை முழுமையான ஆலோசனைகளை காவேரி கூக்குரல் இயக்க தன்னார்வலர்கள் விவசாயிகளின் நிலங்களுக்கே நேரில் சென்று இலவசமாக வழங்கினர். விவசாயிகளுக்கான மரக்கன்றுகளை 3 ரூபாய்க்கு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!
 மதுரை, திருவண்ணாமலை, தஞ்சாவூர், சேலம் மாவட்டங்களின் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இதற்கு முன்பு வேளாண் விஞ்ஞானி திரு.நம்மாழ்வார், திரு.நெல் ஜெயராமன், திரு.மரம் தங்கசாமி ஆகியோரின் நினைவு மற்றும் பிறந்த நாட்களில் இதேபோல், லட்சக்கணக்கில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் முன்னெடுத்தது. இவர்கள் மூவரும் ஈஷாவின் பல்வேறு சுற்றுச்சூழல் பணிகளில் ஆரம்பம் முதல் உறுதுணையாக இருந்து வழிகாட்டிகளாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

3 நாட்களில் 2 லட்சம் மரங்கள்.. காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் தமிழகம் முழுவதும் மரக்கன்று நட்ட விவசாயிகள்!
காவேரி கூக்குரல் இயக்கமானது காவேரி நதிக்கு புத்துயிரூட்டுவதற்காகவும், அதை சார்ந்துள்ள விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் சத்குரு அவர்களால் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வியக்கத்தின் மூலம் கடந்த ஆண்டு மட்டும் 2.1 கோடி மரங்களை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MLA Kamaraj: அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
Sasikala on ADMK : ‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
Senthilbalaji : ’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
Thirumavalavan: ”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

குடிபோதையில் 3 சிறுவர்கள் 17 வயது சிறுவன் கொடூரக் கொலை வீடியோ எடுத்த பகீர் சம்பவம்
ஆரம்பமே அதிரடி! 717 டாஸ்மாக் CLOSE! உத்தரவிட்டார் CM விஜய்
”பாஜக-வே பரவாயில்லை”தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3ம் இடம் பதவியேற்பு விழா சர்ச்சை | Vande Mataram in Vijay Oath
”தமிழக கஜானா காலியா?நிர்வாகம் தெரிஞ்சா போதும்”CM விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி! | MK Stalin Slams Vijay
CM-ஆக பதவியேற்ற முதல் நாளே மரபுகளை உடைத்த விஜய் இது வழக்கமே இல்ல..! | TVK CM Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MLA Kamaraj: அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
அமமுகவின் ஒரே எம்எல்ஏ-வை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிய டிடிவி தினகரன்; என்ன நடக்குது.?
Sasikala on ADMK : ‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
‘திமுகவுடன் கைக்கோர்த்ததால் தான் இந்த நிலை’ அதிமுக பற்றி சசிகலா பரபரப்பு அறிக்கை..!
Senthilbalaji : ’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
’செந்தில்பாலாஜி – எஸ்.பி.வேலுமணி ரகசிய சந்திப்பு’ பேசப்பட்டது என்ன..?
Thirumavalavan: ”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
”அதிமுக - திமுக இணைந்து என்னை முதலமைச்சராக்க முயற்சி” திருமாவளவன் ஓபன் டாக்
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
NEET Paper Leak: முதல் முறையாக நீட் தேர்வு ரத்து; சிபிஐ விசாரணைக்கு உத்தரவு- நடந்தது என்ன? பரபர பின்னணி!
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
Rahul Gandhi: 10 ஆண்டுகளில் 89 முறை லீக்; 48 மறு தேர்வு, நீட் தேர்வு ஓர் ஏலம்- ராகுல் காந்தி கடும் கண்டனம்
EPS vs CVS : சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்கள்.! எஸ்பிவி, சிவிஎஸ்யை போட்டு பொளந்த அதிமுக
சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்கள்.! எஸ்பிவி, சிவிஎஸ்யை போட்டு பொளந்த அதிமுக
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
CM Vijay Speech: சட்டமன்றத்தில் CM விஜயின் முதல் உரை - குட்டிக்கதை சொல்லி அப்லாஸ் வாங்கிய முதலமைச்சர்
Embed widget