மேலும் அறிய

திருவாரூர் மாவட்டத்தில் நீரின்றி கருகும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் - விவசாயிகள் வேதனை

திருவாரூர் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது விவசாயிகள் வேதனை

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஆண்டுதோறும் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பருவ மழை மாற்றம் மற்றும் காவிரியில் கிடைக்க வேண்டிய தண்ணீர் பிரச்சனையின் காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒருபோகம் சம்பா சாகுபடி பணிகளை மட்டும் விவசாயிகள் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் கடந்த நான்காண்டுகளாக மேட்டூர் அணை உரிய நேரத்தில் திறக்கப்பட்டதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் மீண்டும் மூன்று போகம் சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
 

திருவாரூர் மாவட்டத்தில் நீரின்றி கருகும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் - விவசாயிகள் வேதனை
 
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கோட்டூர். முத்துப்பேட்டை. திருத்துறைப்பூண்டி. பெருகவளந்தான்.திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் 60,000 ஏக்கர் பரப்பளவில் நேரடி நெல் விதைப்பிலும் நீடாமங்கலம், வலங்கைமான், நன்னிலம் உள்ளிட்ட பகுதிகளில் முப்பதாயிரம் ஏக்கர் பரப்பளவில் நடவு பணியிலும் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மேட்டூர் அணை திறக்கப்பட்டு இதுவரை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாண்டவையாரு, முல்லைஆறு, மறைக்காகோரையாறு, பாமணி ஆறு, முடிகொண்டனாரு உள்ளிட்ட ஆறுகளில் குறைந்த அளவே தண்ணீர் வருவதால் பாசனத்திற்கு பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக 50 நாட்கள் ஆன நெல் பயிர்கள் அனைத்தும் கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் ஆற்றில் வரக்கூடிய தண்ணீரை வசதியான விவசாயிகள் மற்றும் இன்ஜின் வைத்து இரைத்து பயிர்களை காப்பாற்றி வருவதாகவும் ஏழ்மையான விவசாயிகள் தண்ணீர் பாய்ச்ச முடியாத சூழல் உருவாகியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நீரின்றி கருகும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நெற் பயிர்கள் - விவசாயிகள் வேதனை
 
இதனால் நெல் பயிர்கள் அனைத்தும் கருகி வருவதாகவும் முறை வைக்காமல் ஆற்றில் தண்ணீர் வந்தால் மட்டுமே பயிர்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். ஆகையால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனைத்து ஆறுகளிலும் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் இல்லை என்றால் ஒட்டுமொத்த நெல் சாகுபடியும் கருகி அழிந்து விடும் நிலை உருவாகிவிடும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர் ஆகவே தமிழக அரசு விவசாயிகளை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் முறை வைக்காமல் தண்ணீர் திறந்து விட வேண்டும் இல்லை என்றால் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் எடுத்துள்ளனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget