மேலும் அறிய

திருவாரூர்: குறுவை சாகுபடி மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

விவசாயிகள் தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருப்பினும் கொள்முதல் குறைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி மூலமாக ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு வருடம் தோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது இந்த வருடம் மே 24ஆம் தேதியே திறக்கப்பட்டது. இதனை நம்பி திருவாரூர் மாவட்டம் முழுவதும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு விவசாயிகள் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். இது கடந்த ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகமாகும். மேலும் விவசாயிகள் கடுமையான உரம் விலை ஏற்றம் போன்றவற்றின் காரணமாக ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்து இந்த குறுவை நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் தமிழக அரசு குறுவை நெற்பயிர்களை கொள்முதல் செய்வதற்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 306 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறந்தது குறிப்பிடத்தக்கது.


திருவாரூர்: குறுவை சாகுபடி மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தினால் ஆண்டுதோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டது. தற்போது திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறுவை நெற்பயிர் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 306 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக இதுவரை குறுவை நெற்பயிர்கள் ஒரு லட்சத்து 66,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டை விட குறைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிற் சாகுபடி பணிகளில்  ஈடுபட்டிருந்தனர். அதேசமயம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 


திருவாரூர்: குறுவை சாகுபடி மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை நெற்பயிற் சாகுபடி செய்யப்பட்டிருப்பினும் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17% இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் கடந்த ஒரு மாதமாக திருவாரூர் மாவட்டத்தில் அடிக்கடி பெய்த கனமழையின் காரணமாக நெல்மணிகளின் ஈரப்பதம் என்பது அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருப்பினும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வெயிலானாலும் சரி... வெள்ளமானாலும் சரி... பலன் தரும் பணப்பயிர்: வெட்டிவேர் சாகுபடி
வெயிலானாலும் சரி... வெள்ளமானாலும் சரி... பலன் தரும் பணப்பயிர்: வெட்டிவேர் சாகுபடி
நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்
நெல் தரிசில் உளுந்து சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்
நெல் வயலில் களையை போக்கி உயர் விளைச்சலை பெற விவசாயிகளுக்கு யோசனை!!
நெல் வயலில் களையை போக்கி உயர் விளைச்சலை பெற விவசாயிகளுக்கு யோசனை!!
Kisan Credit Card: வட்டிக்குக் கடன் வாங்குவதை நிறுத்துங்கள்! - அரசு வழங்கும் KCC கார்டு - விண்ணப்பிப்பது எப்படி?
வட்டிக்குக் கடன் வாங்குவதை நிறுத்துங்கள்! - அரசு வழங்கும் KCC கார்டு - விண்ணப்பிப்பது எப்படி?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
USA Iran WAR: ”ஈரான் நிறைய கொடுத்தாங்க, நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்” ட்ரம்ப் போட்ட ரூல்ஸ்
USA Iran WAR: ”ஈரான் நிறைய கொடுத்தாங்க, நான் முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்” ட்ரம்ப் போட்ட ரூல்ஸ்
IPL 2026: பாதி ஐபிஎல் ஓவர் - கட்டுக்கடங்காத பஞ்சாப், பரிதாபத்தில் கொல்கத்தா - புள்ளிப்பட்டியல் நிலவரம்
IPL 2026: பாதி ஐபிஎல் ஓவர் - கட்டுக்கடங்காத பஞ்சாப், பரிதாபத்தில் கொல்கத்தா - புள்ளிப்பட்டியல் நிலவரம்
MK Stalin: தேர்தல் நேரத்தில் உள்ளடி! கலக்கத்தில் வேட்பாளர்கள்! அமைச்சர்கள் மீது அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: தேர்தல் நேரத்தில் உள்ளடி! கலக்கத்தில் வேட்பாளர்கள்! அமைச்சர்கள் மீது அப்செட்டில் மு.க.ஸ்டாலின்!
வரும் 27ல் சித்திரை தேரோட்டம்: தஞ்சை பெருவுடையார் கோயில் தேர் அலங்காரம் நிறைவு
வரும் 27ல் சித்திரை தேரோட்டம்: தஞ்சை பெருவுடையார் கோயில் தேர் அலங்காரம் நிறைவு
Lungi Ngidi: தலையில் பலத்த அடி! சுருண்டு விழுந்த லுங்கி ங்கிடி.. உள்ளே வந்த ஆம்புலன்ஸ் நிசப்தமான மைதானம்
Lungi Ngidi: தலையில் பலத்த அடி! சுருண்டு விழுந்த லுங்கி ங்கிடி.. உள்ளே வந்த ஆம்புலன்ஸ் நிசப்தமான மைதானம்
வேட்பாளரை தாக்கியவர்களை கைது செய்யுங்கள்... சாலைமறியல் செய்த நாதகவினர் 225 பேர் கைது
வேட்பாளரை தாக்கியவர்களை கைது செய்யுங்கள்... சாலைமறியல் செய்த நாதகவினர் 225 பேர் கைது
TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?
TN Election Vote Counting: வாக்காளர்களே! ஓட்டுக்கள் எப்படி எண்ணப்படுகிறது தெரியுமா?
Eps Alert : ”வதந்திகளை பரப்புவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள், உஷாரா இருங்க”- அதிமுகவினருக்கு இபிஎஸ் அலர்ட்
”வதந்திகளை பரப்புவதில் திமுகவினர் கை தேர்ந்தவர்கள், உஷாரா இருங்க”- அதிமுகவினருக்கு இபிஎஸ் அலர்ட்
Embed widget