மேலும் அறிய

திருவாரூர்: குறுவை சாகுபடி மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

விவசாயிகள் தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருப்பினும் கொள்முதல் குறைந்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை சாகுபடி மூலமாக ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 

திருவாரூர் மாவட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி உள்ள மாவட்டமாகும். இங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரமாக விவசாயமும் கால்நடைகளும் இருந்து வருகிறது. பெரும்பாலும் இந்த மாவட்ட விவசாயிகள் சம்பா நெற்பயிற் சாகுபடிகளில் மட்டும் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 75 ஆண்டுகளுக்கு பிறகு வருடம் தோறும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரானது இந்த வருடம் மே 24ஆம் தேதியே திறக்கப்பட்டது. இதனை நம்பி திருவாரூர் மாவட்டம் முழுவதும் எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு விவசாயிகள் ஒன்றரை லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை நெற்பயிர் சாகுபடி பணிகளை மேற்கொண்டனர். இது கடந்த ஆண்டுகளை விட 25 சதவீதம் அதிகமாகும். மேலும் விவசாயிகள் கடுமையான உரம் விலை ஏற்றம் போன்றவற்றின் காரணமாக ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை செலவு செய்து இந்த குறுவை நெற்பயிர் சாகுபடி செய்துள்ளனர். அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் தமிழக அரசு குறுவை நெற்பயிர்களை கொள்முதல் செய்வதற்காக திருவாரூர் மாவட்டம் முழுவதும் 306 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறந்தது குறிப்பிடத்தக்கது.


திருவாரூர்: குறுவை சாகுபடி மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறக்கப்பட்ட காரணத்தினால் ஆண்டுதோறும் அக்டோபர் ஒன்றாம் தேதி திறக்கப்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த வருடம் செப்டம்பர் ஒன்றாம் தேதியே திறக்கப்பட்டது. தற்போது திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறுவை நெற்பயிர் அறுவடை பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் முழுவதும் உள்ள 306 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக இதுவரை குறுவை நெற்பயிர்கள் ஒரு லட்சத்து 66,000 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.இது கடந்த ஆண்டை விட குறைவாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிற் சாகுபடி பணிகளில்  ஈடுபட்டிருந்தனர். அதேசமயம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஒரு லட்சத்து 96 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 


திருவாரூர்: குறுவை சாகுபடி மூலம் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டை விட அதிக பரப்பளவில் குறுவை நெற்பயிற் சாகுபடி செய்யப்பட்டிருப்பினும் ஒரு லட்சத்து 66 ஆயிரம் மெட்ரிக் டன் மட்டுமே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லின் ஈரப்பதம் 17% இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் கடந்த ஒரு மாதமாக திருவாரூர் மாவட்டத்தில் அடிக்கடி பெய்த கனமழையின் காரணமாக நெல்மணிகளின் ஈரப்பதம் என்பது அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக பெரும்பாலான திருவாரூர் மாவட்ட விவசாயிகள் தனியார் நெல் கொள்முதல் நிலையங்களில் தங்களது நெல்லை விற்பனை செய்துள்ள காரணத்தினால் இந்த ஆண்டு அதிக பரப்பளவில் விவசாயிகள் குறுவை நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருப்பினும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
விளைச்சல் தந்த வேதனை: விலையின்றி மரங்களிலேயே அழுகும் மாங்காய்கள் – கண்ணீரில் கும்பகோணம் விவசாயிகள்!
விளைச்சல் தந்த வேதனை: விலையின்றி மரங்களிலேயே அழுகும் மாங்காய்கள் – கண்ணீரில் கும்பகோணம் விவசாயிகள்!
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை: அன்புமணி வலியுறுத்தல்!
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை: அன்புமணி வலியுறுத்தல்!
நெல் சாகுபடி செஞ்சா ரூ. 5 லட்சமா? விவசாயிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி – முழு விவரம் உள்ளே!
நெல் சாகுபடி செஞ்சா ரூ. 5 லட்சமா? விவசாயிகளுக்கு அடித்தது பம்பர் லாட்டரி – முழு விவரம் உள்ளே!

வீடியோ

Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Jagadeeswari : என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
என் பேரு கீழே இருக்கு..? கீர்த்தனா பேரு எப்படி மேலே வந்தது? - கலெக்டரை மேடையிலேயே வறுத்தெடுத்த தவெக அமைச்சர்
TVK Candidates: இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியல்..! பழசு Vs புதுசு, களம் எப்படி இருக்கு?
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
டம்மியாக்கிய இபிஎஸ்.! எஸ்.பி.வேலுமணி டீம் அடுத்த திட்டம் என்ன.? காலை 11 மணிக்கு முக்கிய முடிவு
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
”எங்க பொண்ண அதே மலையில் இருந்து தள்ளி கொன்றுங்க சார்” புனே கொலையாளியின் பெற்றோர் வேதனை
Best Hybrid Cars: ஹைப்ரிட் கிங்..! லிட்டருக்கு 27KM மைலேஜ், டொயோட்டாவுடன் மல்லுக்கட்டும் மாருதி - யார் பெஸ்ட்?
ஹைப்ரிட் கிங்..! லிட்டருக்கு 27KM மைலேஜ், டொயோட்டாவுடன் மல்லுக்கட்டும் மாருதி - யார் பெஸ்ட்?
Student admissions in colleges : மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
மாணவர்களுக்கு குஷி.! கல்லூரிகளில் கூடுதல் பாடப்பிரிவு, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி- வெளியான அரசாணை
Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?
CM Vijay: திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
திடீரென மெரினாவில் இறங்கி மாரத்தானில் ஓடிய முதலமைச்சர் விஜய்..! போதைப்பொருள் விழிப்புணர்வு
Embed widget