மேலும் அறிய

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்னை - முதல்வர் தீர்த்து வைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்னையை முதல்வர் தீர்த்து வைக்க விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தல்

தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்னை தொடர்பாக தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு கரும்பு விவசாயிகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தஞ்சாவூர் மாவட்டம் திருமண்டங்குடி திருஆருரான் சர்க்கரை ஆலை விவகாரம் தொடர்பாக, தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு கரும்பு விவசாயிகள் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும். விவசாயிகள் தொடர்ந்து பல கட்டங்களாக போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கான கரும்பு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு தெரியாமலேயே அவர்கள் பெயரில் பெற்றுள்ள கடன்களை, புதிய ஆலை நிர்வாகத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும். விவசாயிகளுக்கு கடன் பாக்கி இல்லை என்று சான்றிதழ் வழங்க வேண்டும். இந்த பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்னை - முதல்வர் தீர்த்து வைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

இது குறித்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் மத்திய அரசு, மாநில அரசு விலை நிர்ணயம், லாபப் பங்குத் தொகை, வட்டித் தொகை என, 85 கோடி ரூபாய்க்கும் அதிகமாக விவசாயிகளுக்கு நிலுவை தொகை தரவேண்டியுள்ளது. இந்த நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும்.  

மேலும் திருமண்டங்குடி திருஆருரான் கரும்பாலை நூதனமான முறையில் மோசடி செய்து விவசாயிகள் பெயரில் கடன் பெற்றுள்ளது. விவசாயிகள் பெயரில் உள்ள கடன்களை ரத்து செய்து, கரும்பு ஆலை நிர்வாகத்தின் பெயருக்கு மாற்ற வேண்டும்.  

புதிதாக ஆலையை வாங்கியுள்ள கார்ல்ஸ் டிஸ்டிலரீஸ் நிறுவனம் விவசாயிகளை மோசடியான முறையில் கரும்புத் தொகைக்கு 57 விழுக்காடு மட்டும் பெற்றுக் கொள்வோம் என மிரட்டி கையொப்பம் பெற்று வருகிறது. அதையும் 5 தவணைகளாக ஓராண்டுக்குள் பெற்றுக் கொள்வோம் என கையெழுத்து போடும்படி விவசாயிகளை வலியுறுத்தி வருகிறது.
 
எனவே, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை திருஆருரான் சர்க்கரை ஆலை நிறுவன அதிபர் ராம் தியாகராஜனை கைது செய்து வழக்கு தொடர வேண்டும். புதிதாக ஆலையை நிர்வகித்து வரும் கார்ல்ஸ் நிறுவனம் விவசாயிகளிடம் மிரட்டி கையெழுத்து வாங்கும் போக்கை தவிர்க்க வேண்டும்" என்றனர்.


திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை பிரச்னை - முதல்வர் தீர்த்து வைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

இதற்கிடையில் திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாயை இந்த ஆலையை தற்போது விலைக்கு வாங்கியுள்ள கால்ஸ் டிஸ்லரீஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் தினசரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,  தமிழகம் முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாகவும், புயல் எச்சரிக்கை தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையிலும் காத்திருப்பு தொடர் போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகை தாமதமாவதால், நாளையிலிருந்து தமிழகம் முழுதும்  மாவட்டம்தோறும் கலெக்டர் அலுவலகம் முன்பாக போராட்டங்கள் துவங்க உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
விஜய் ஒரு Spoiler .! அதிமுக- பாஜக கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல்.? போட்டுடைத்த பியூஸ் கோயல்
Pongal Gift: பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.5000.!! பொதுமக்களுக்கு ஜாக்பாட் அடிக்குமா.? இன்று தமிழக அரசு முக்கிய முடிவு
America Offer illegal Immigrants: இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
இலவச விமானப் பயணச்சீட்டு, 3000 டாலர்கள், அபராதம் ரத்து; ட்ரம்ப் அதிரடி ஆஃபர்; யாருக்கு தெரியுமா.?
Bottle Water New Regulations: பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
பாட்டில் குடிநீருக்கு புதிய விதிமுறைகள்; FSSAI கெடுபிடி; ஜனவரி 1 முதல் இதெல்லாம் கட்டாயம்
Embed widget