மேலும் அறிய

தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் - விவசாயிகள்

தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகளும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிவடையும்.

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில்  நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி உதவி ஆட்சியர் கவுரவ் குமார், வேளாண்மை துறை இணை இயக்குநர் பழனிவேலாயுதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் - விவசாயிகள்

அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிய விவசாயிகள், மாவட்டத்தில் தற்காலிக தரிசு, நிரந்தர தரிசு குறித்த விவரங்களை சேகரிக்க வேண்டும். சாத்தான்குளம் பகுதியில் கிணறுகளில் கூட தண்ணீர் இல்லை. குடிநீருக்கே கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே, தூத்துக்குடி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். உடன்குடியில் கொப்பறை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். கொப்பறை கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். உடன்குடி பகுதியில் முருங்கைக்காய் பதப்படுத்தும் மற்றும் முருங்கை பவுடர் தயாரிக்கும் கூடம் அமைக்க வேண்டும். தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும். சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும். மருதூர் மேலக்கால்வாயை விரிவாக்கம் செய்ய வேண்டும். குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகள், வியாபாரிகள் முதலீடு செய்த பணம் மற்றும் நகைகள் விரைவாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மரபு நெல் விதைகளை பயிரிட விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றனர்.


தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் - விவசாயிகள்

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் பேசினர். அப்போது, வேளாண்மைக்கு ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்களும் மிகவும் முக்கியமானதாகும். அடுத்த பருவத்துக்கு தேவையான பணிகள் இந்த காலத்தில் தான் செய்யப்படும். மாவட்ட நிர்வாகம் இந்த மூன்று மாதங்களும் வேளாண் சார்ந்த பணிகளிலேயே அதிக கவனம் செலுத்தும். விவசாயிகளின் தேவைகள், கோரிக்கைகள், பிரச்சினைகளை அதிகாரிகள் கண்டறிந்து உடனடியாக தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம் போன்றவை போதுமான அளவில் இருப்பில் உள்ளது. 2021- 22-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு திட்ட இழப்பீட்டு தொகை விடுபட்ட பயிர்களுக்கு ஓரிரு வாரங்களில் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு தேவையான குறுகிய கால கடன்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குளங்களில் வண்டல் மண், கரம்பை மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 11 பொதுப்பணித் துறை குளங்களிலும், 15 ஊரக வளர்ச்சித் துறை குளங்களிலும் மண் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. விவசாயிகள் மனு அளித்தால் உடனடியாக அனுமதி அளிக்கப்படும். விவசாய பயன்பாட்டுக்கு மட்டுமே இந்த மண்ணை பயன்படுத்த வேண்டும். இந்த திட்டம் முறையாக நடைபெற விவசாயிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மாவட்டத்தில் சூறைக்காற்றால் சில பகுதிகளில் வாழை, பப்பாளி, முருங்கை பயிர்கள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக கணக்கெடுக்கபட்டு அரசுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் - விவசாயிகள்
உடன்குடியில் கொப்பறை தேங்காய் கொள்முதல் நிலையம் அமைப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும். தமிழக பட்ஜெட்டில் முருங்கை வேளாண்மை மண்டலம் அமைக்க அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 700 எக்டேரில் அங்கக முருங்கை சாகுபடி செய்யும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் முருங்கை பதப்படுத்தும் கூடம், முருங்கை விதையில் இருந்து பவுடர் தயாரிக்கும் ஆலை போன்றவை அமைக்கப்படும். இதற்கான இடம் உடன்குடி பகுதியில் விரைவில் தேர்வு செய்யப்படும். இது தொடர்பாக ரூ.10 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.


தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் - விவசாயிகள்

தாமிரபரணி- கருமேணியாறு- நம்பியாறு இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டது. மீதமுள்ள பணிகளும் வரும் செப்டம்பர் மாதத்துக்குள் முடிவடையும். இந்த ஆண்டு பருவமழையின் போது இந்த வெள்ளநீர் கால்வாயில் தண்ணீர் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரியும் பிரச்சினை அனைத்து பகுதிகளிலும் உள்ளது. இது தொடர்பாக கால்நடை வளர்போரை அழைத்து கூட்டம் நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். குரும்பூர் தொடக்க வேளாண்மை கடன் சங்கத்தில் விவசாயிகளின் பணம் மற்றும் நகை விரைவாக கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி
குறுவை சாகுபடி தீவிரம்: முளைப்புத்திறன் இல்லாத விதைகள் விற்றால் உரிமம் ரத்து! விதை ஆய்வுத்துறை கிடுக்கிப்பிடி
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
மதுரை ஆவின் நிறுவனத்தில் காலிப் பணியிடம்... (11.06.2026) அன்று நேர்முக தேர்வில் கலந்து கொள்ளலாம் !
"விஜய் சார்.. வெரி ராங் சார்!" - ஐந்து ஏக்கர் வாக்குறுதியை கையில் எடுத்து மயிலாடுதுறையில் கொதித்தெழுந்த விவசாயிகள்!
"வராங்க.. பெஞ்சை தேச்சுட்டு போறாங்க" - அதிகாரிகளின் அலட்சியத்தை மேடையிலேயே கிழித்து தொங்கவிட்ட விவசாயிகள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai TN BJP Chief: மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
மீண்டும் மாநிலத் தலைவர் ஆகிறார் அண்ணாமலை.? நயினாரை டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; திடீர் திருப்பம்
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
அதிர்ச்சி.. என்னதான் ஆச்சு சிபிஎஸ்இக்கு? 2 நிமிடத்தில் 15 லட்சம் சைபர் அட்டாக்குகள்!
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
CTR Nirmal Kumar: நேரம் கேட்ட முதல்வர் விஜய்.. நோ சொன்ன இபிஎஸ்.. போட்டுடைத்த அமைச்சர் நிர்மல் குமார்
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Best Cars: எகிறும் விலைவாசி; 8 லட்சத்துக்குள் பெஸ்ட் ஃபேமிலி கார்கள்- மிடில் கிளாஸுக்கு சூப்பர் சாய்ஸ்!
Bullet 650 vs BSA Goldstar 650: புல்லட் 650-ஆ.? இல்ல கோல்ட் ஸ்டார் 650-ஆ? வாங்குறதுக்கு முன்னாடி எது சக்திவாய்ந்ததுன்னு பாருங்க
புல்லட் 650-ஆ.? இல்ல கோல்ட் ஸ்டார் 650-ஆ? வாங்குறதுக்கு முன்னாடி எது சக்திவாய்ந்ததுன்னு பாருங்க
Annamalai Vs Amit Shah: பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
பிளான் போட்ட அண்ணாமலை.? 'U' டர்ன் போட வைத்த அமித் ஷா; அடுத்து என்ன.?
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
TVK Vs EPS: கட்சியை அடகு வைத்து கரைத்தவர் அரசியல் பாடம் எடுப்பதா? ஈபிஎஸ்ஸை வெளுத்தெடுத்த தவெக!
Embed widget