மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் மும்முரமடைந்துள்ள குறுவை சாகுபடி பணிகள்

தஞ்சை மாவட்டத்தில் 43 ஆயிரம் ஹெக்டேருக்கு குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை சுமார் 26 ஆயிரம் ஹெக்டேர் வரை நடவுப்பணிகள் முடிந்துள்ளது.

குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் கோடைக்காலத்திலேயே தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து ஆறுகள், வாய்க்கால்களில் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு மே மாதம் 24ம் தேதியே மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தொடர்ந்து கல்லணையிலிருந்து 27ம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் ஆறு, வாய்க்கால்களில் வர தொடங்கி உள்ளது. இதையடுத்து விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளில் மும்முரம் அடைந்துள்ளனர்.


தஞ்சை மாவட்டத்தில் மும்முரமடைந்துள்ள குறுவை சாகுபடி பணிகள்

இதை ஒட்டி தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே விவசாயிகள் தங்கள் குலதெய்வ கோயிலுக்கு வருகை தந்து விதை நெல், ஏர் கலப்பை, மாட்டு வண்டி ஆகியவற்றுடன் ஊர்வலமாக செல்லப்பன்பேட்டை பகுதியில் உள்ள வயலுக்கு சென்று அங்கும் வழிபாடு நடத்தினர். பின்னர் ஏர் கலப்பை பூட்டி வயலை உழுது விதை நெல்லை விதைத்தனர். இதற்கு பொன்னேர் பூட்டுதல் என்று பெயர். கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகியவற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் கடைமடை வரை சென்று சேர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதன்படி தஞ்சை மாவட்டத்தில் 43 ஆயிரம் ஹெக்டேருக்கு குறுவை சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை சுமார் 26 ஆயிரம் ஹெக்டேர் வரை நடவுப்பணிகள் முடிந்துள்ளது. 16 ஆயிரம் ஹெக்டேரில் நாற்றங்கால் பணிகள் நிறைவடைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்திற்கு 363 டன் விதை நெல் தேவை. இதில் 275 டன் கொடுக்கப்பட்டுள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் மும்முரமடைந்துள்ள குறுவை சாகுபடி பணிகள்

உரம் 4456 டன் யூரியா, 1284 டன் டிஏபி, 712 டன் பொட்டாஷ் இருப்பு உள்ளது. இதனால் உரம், விதை நெல்லுக்கு தட்டுப்பாடு கிடையாது. இதனால் இந்தாண்டு குறுவை சாகுபடி இலக்கை மிஞ்சும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தஞ்சை மாவட்டம் ஆலக்குடி, வல்லம், கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் உட்பட பல்வேறு பகுதிகளிலும் விவசாயிகள் டிராக்டரை கொண்டு வயலை உழுது குறுவை சாகுபடிக்கு தயார்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், இந்த ஆண்டு நல்ல மழை பெய்து குறுவை, சம்பா, தாளடி என்று முப்போக நெல் சாகுபடி நடைபெற வேண்டும். மேலும் கரும்பு, எள், வாழை, பருத்தி, கடலை உட்பட அனைத்து பயிர்களும் நன்கு விளைந்து விவசாயிகள் வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும் என்று  பொன்னேர் பூட்டி வழிபாடு நடத்தப்பட்டது. தடையின்றி தண்ணீர், உரம் கிடைத்தால் இலக்கை மிஞ்சி சாகுபடி செய்யப்படும் என்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
ABP Premium

வீடியோ

அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah
ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
Indigo Flights: இண்டிகோ விவகாரம்.. ”சாரி.. ரூல்ஸ உடைக்கணும்னுலா எதுவும் செய்லிங்க” - சேர்மேன் சொன்ன காரணம்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
98 அடி உயர மெகா சுனாமி வரப்போகுது.. 2லட்சம் பேர் இறக்க போறாங்க... எச்சரித்த அரசு- அலறும் மக்கள்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
தேர்தலுக்கு தயாரான அதிமுக.! விருப்ப மனு தாக்கல் - முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இபிஎஸ்
Amit Shah: SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
SIR - யார் பதிலளிப்பது.?; காங்கிரஸ் மீது விமர்சனம்; நாடாளுமன்றத்தில் அமித் ஷா பேசியது என்ன.?
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
MG Discounts: NO.1 EV விண்ட்சர் உட்பட.. ரூ.4 லட்சம் வரை தள்ளுபடிகளை அறிவித்த எம்ஜி - கார்களின் லிஸ்ட்
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Egg Yolk: ஆத்தி..! முட்டையின் மஞ்சள் கரு சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Brain Intelligence: IQ, EQ, SQ மற்றும் AQ என்றால் என்ன? மூளையின் செயல்திறன் எவ்வாறு கணக்கிடப்படுகிறது தெரியுமா?
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: இன்றே கடைசி நாள், அதிமுக விருப்பமனு, 2வது டி20 போட்டி - 11 மணி வரை இன்று
Embed widget