மேலும் அறிய

ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி  உள்ளிட்ட பகுதிகளில் தேங்காய்ப்பூ விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நம் முன்னோர்கள், உண்ட  உணவை இயற்கையான தாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் கொண்டிருந்தனர். அதன் காரணமாக அவர்கள் நோய்வாய்ப்படுவது என்பது அறியதாக இருந்து வந்தது. காலப்போக்கில் நாகரீக வளர்ச்சி என்ற பெயரில் இயற்கைக்கு மாறான உணவுக்கு நாம் மாறிப் போனோம். அதன் விளைவாக நாளுக்கு நாள் புது புது வியாதிகளை கூடாரமாக நமது உடலை மாற்றி, நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாய் மருத்துவமனைக்கு செல்லாத நாள் இல்லை என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறான சூழலின், தற்போது பாரம்பரியம், இயற்கை சார்ந்த உணவு முறை என மீண்டும் பழமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஒரு சில ஈடுபட்டு வருகின்றனர். ஆர்கானிக் பொருட்களை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டியுள்ளார்.


ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

இந்த நிலையில்தான் நாம் சிறுவயதில் வீடுகளில் முற்றிய தேங்காயை உடைத்து எடுக்கும்போது அதில் சில சமயம் தேங்காய் பூ என்று சொல்லக்கூடிய தேங்காயின் கரு காணப்படும். அவற்றை அண்ணன் தங்கை அக்கா என போட்டி போட்டுக் கொண்டு சாப்பிட்ட ஒன்று தற்போது காலப்போக்கில் மருகி தற்போது தேங்காய்  பூ வை காண்பது எண்பது அரிதான செயலாகிவிட்டது. சில சமயங்களில் கோயிலில் தேங்காய் உடைக்கும்போது தேங்காயில் பூ இருந்தால் அதனை நல்ல சகுனமாக நாம் கருதுவுதுண்டு. அறிவியல் பூர்வமாக பார்த்தால் தேங்காய்ப் பூ என்பது நன்கு முற்றிய தேங்காயில் இருந்து உண்டாகுகின்ற தேங்காயின் கருவளர்ச்சி தான் இந்த தேங்காய்ப் பூ. 


ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

தேங்காயிலும், தேங்காய் தண்ணீரிலும், இளநீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதோ. அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய்ப்பூவில் உண்டு. அதில் உள்ள மூலக்கூறுகள் பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களுக்கும் மருந்தாக அமைகிறது. அதிக பணிச்சுமை மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்போது தேங்காய்ப் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத சக்தி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும். எல்லாவற்றுக்கும் மேலாக 300-க்கும் மேற்பட்ட நோய்கள் இந்த தேங்காய் பூவை உண்பதால் சரியாகும் என சித்த மருத்துவம்  கூறுகிறது.


ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

தேங்காய் பூவினை சிலர் ருசித்திருப்பார்கள். சாலையில் தள்ளுவண்டியில் அடுக்கி விற்கப்பட்டு வரும் தேங்காய்ப் பூவைப் பார்த்துக் கொண்டே ‘இது எதற்காக’ என்ற கேள்வியுடனே சிலர் கடந்து சென்றுகொண்டிருக்கின்றனர். தற்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் முற்றிய தேங்காயில் இருந்து முளைவிட்ட தேங்காய்களை கொள்முதல் செய்து மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் விற்பனை செய்து வருகின்றனர். 30 ரூபாய்க்கு ஒரு தேங்காய் எண்ணெய் கொள்முதல் செய்வதாகும் அதனை தேங்காய் அளவை பொறுத்து 40,60, 80 வரை விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் தேங்காய் பூவின் மருத்துவ குணம் அறிந்து ஏராளமானோர் போட்டி போட்டு அதனை வாங்கிச் சென்று உண்டு வருகின்றனர். மேலும் சிலர் அதன் சுவையை அறிவதற்காக வாங்கி அதனை சுவைத்து வருகின்றனர்.

 


ருசி மட்டுமில்ல.. ஆரோக்கியம் அதிகம்! வியாதிகளை தூரவிரட்டும் தேங்காய்ப்பூ!!

இதுகுறித்து பொதுமக்கள் சிலர் கூறுகையில், தங்கள் சிறுவயதில் தேங்காய் பூவை சாப்பிட்டு உள்ளதாகவும் அப்போது இதன் மருத்துவ குணம் எல்லாம் தங்களுக்கு தெரியாது, அதன் சுவைக்காக சாப்பிட்டது உண்டு, ஆனால் தற்போது இதில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று தெரியும் போது, எங்களுக்கு தேங்காய் பூ கிடைப்பதில்லை என்றும், வெளியூர் செல்லும்போது சாலையோரங்களில் தற்போது இவைகள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் இதனை கிடைக்கும் இடத்தில் எல்லாம் வாங்கி உண்டு வருவதாக தெரிவித்தனர். எது எப்படியோ, ஆர்கானிக் அரிசி, செக்கு எண்ணெய், கருப்பட்டி வெல்லம், பழைய சோறு கஞ்சி, என்று பாரம்பரிய உணவு என  தற்போது மீண்டும் வரும் பட்டியலில் இந்த தேங்காய் பூவும் சேர்ந்துள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
இயற்கை கொடுத்த சர்ப்ரைஸ்! நாவல் பழங்களின் அதீத விளைச்சலுக்குப் பின்னுள்ள தாவரவியல் உண்மை!
வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் தஞ்சாவூரில் நாளை கருத்து கேட்புக் கூட்டம்
வேளாண் பட்ஜெட்டுக்கு விவசாயிகளிடம் தஞ்சாவூரில் நாளை கருத்து கேட்புக் கூட்டம்
மண்ணையும் காத்து, மனிதர்களையும் காக்கும் உயிர்ம வேளாண்மை! கலெக்டர் சொன்ன முக்கிய அட்வைஸ்!
மண்ணையும் காத்து, மனிதர்களையும் காக்கும் உயிர்ம வேளாண்மை! கலெக்டர் சொன்ன முக்கிய அட்வைஸ்!
மயிலாடுதுறை விவசாயிகளே அலர்ட்! 1 லட்சம் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி – எப்போது, எங்கே நடக்கிறது?
மயிலாடுதுறை விவசாயிகளே அலர்ட்! 1 லட்சம் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி – எப்போது, எங்கே நடக்கிறது?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
தவெகவிற்கு NO.! அதிமுகவில் இருந்து எகிறப்போகும் எஸ்.பி. வேலுமணி.? எந்த கட்சியில் இணைய திட்டம்.?
Senthil Balaji: திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
திமுக MLA செந்தில் பாலாஜி எங்கே? நட்சத்திர ஓட்டல்களில் நடந்த ரகசிய மீட்டிங் - காவல்துறை தீவிரம்
TVK Government : ’துணை முதலமைச்சர் கனவில் இருந்த செந்தில்பாலாஜி’ மண் அள்ளிக் கொட்டிய தவெக..!
’துணை முதலமைச்சராகும் முயற்சி’ திட்டம் தீட்டிய செந்தில்பாலாஜி..!
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
ஒரே சார்ஜில் 120 கி.மீட்டர் மைலேஜ்! பட்ஜெட் விலையில் அசத்தும் Sprinto HS இ ஸ்கூட்டர் - எவ்ளோ?
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
பார்த்திபனை திட்டியது சுந்தர்ராஜனா? பாண்டியராஜனா? அவரே தந்த விளக்கம்
Anitha Radhakrishnan : ’திமுக அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி’ விரைவில் கைது ?
Anitha Radhakrishnan : ’திமுக அனிதா ராதாகிருஷ்ணன் முன் ஜாமீன் மனு தள்ளுபடி’ விரைவில் கைது ?
Honda 7 Seater: டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
டாடா., மஹிந்த்ராவின் 7 சீட்டர்களுக்கு போட்டியாக ஹோண்டா..! ஹைப்ரிட்டில் கலக்குமா? விலை?
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
திரைக்குப் பின்னால் ஒரு பேரரசு: எறும்புப் புற்றின் வியப்பூட்டும் சமூகக் கட்டமைப்பும், வேலைப் பகிர்வும்!
Embed widget