மேலும் அறிய

Pugar Petti: மதுரை: மழை, வெயிலில் மலைபோல் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்: நேரடி கொள்முதல் நிலையத்தில் அரங்கேறும் அவலம்!

”எனினும் கிராமத்தினரிடம் பேசியுள்ளேன். அவர்கள்  ஆட்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றால் நாங்களே ஆட்கள் ஏற்பாடு செய்து பணிகளை விரைவாக முடிக்கிறோம்” என நுகர்பொருள் வாணிப கழக மதுரை மண்டல மேலாளர் நம்மிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

தொடர் உழைப்பிற்கு பின் கிடைக்கும் விவசாயப் பயிர்களை மூட்டைகளில் கட்டிப்போட்டாலும், பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு, பொருட்கள் வீணாகும் அவலம் தொடர்கிறது. இதனை போக்கும் விதமாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் சேமிப்பு கிட்டங்கி கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதல்வர் மூலம் திறக்கப்பட்டது. 
 
மதுரை கப்பலூர் பகுதியில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில்  12000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 4 மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு தளங்களும் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு பக்கம் பழையபடி நெற் பயிர்கள் தூத்தி, எடை போடாமல் மூட்டைகளாகவும், திறந்த வெளியில் குவியலாகவும் கொட்டிக் கிடப்பது விவசாயிகளை வேதனைக்கு தள்ளுகிறது.


Pugar Petti: மதுரை: மழை, வெயிலில் மலைபோல் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்:  நேரடி கொள்முதல் நிலையத்தில் அரங்கேறும் அவலம்!
 
இது குறித்து ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் பா.ஸ்டாலின் ABP Nadu-விடம் கூறும்போது," ஒவ்வொரு விவசாயியும் நஷ்டத்தை நினைக்காமல் விவசாயம் செய்து கஷ்டப்பட்டு நெல்லை களத்திற்கு கொண்டு வருகிறான். ஆனால் நேரடி கொள் முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு அதனை கொண்டு செல்வதில் பல்வேறு சிக்கல் ஏற்படுகிறது. நெல் கொள்முதலில் சுணக்கம் ஏற்படும்போது,  திடீர் என மழை பெய்தால் ஆண்டு முழுதும் விவசாயிகள் உழைப்பு வீணாகிறது. எனவே அதிகாரிகள் நெல் கொள்முதல் செய்வதை விரைவுபடுத்த வேண்டும்.  இல்லை எனில் இதுதொடர்பாக உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர உள்ளேன் என தெரிவித்தார்.

Pugar Petti: மதுரை: மழை, வெயிலில் மலைபோல் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்:  நேரடி கொள்முதல் நிலையத்தில் அரங்கேறும் அவலம்!
மேலும் மதுரை மாவட்டம் மேலூர் வெள்ளலூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி தனக்கொடி கூறும்போது," மேலூர் பகுதியில் தனியாமங்கலம், கட்டகாளபட்டி, உறங்கான்படி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. எங்கள் கிராமத்திலும் டி.என்.சி.எஸ்.சி., மூலம்  நெல் மூட்டைகள் வாங்கப்படுகிறது. 200க்கும் மேற்பட்ட டோக்கன்கள் போடப்பட்டும் நெல்லை தூத்தி, எடை போட்டு எடுத்துச் செல்லவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். நெல் குவியல் கிடப்பதை பார்க்கும் போது கஷ்டமாக உள்ளது" என்று வேதனை தெரிவித்தார்.

Pugar Petti: மதுரை: மழை, வெயிலில் மலைபோல் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்:  நேரடி கொள்முதல் நிலையத்தில் அரங்கேறும் அவலம்!
இது தொடர்பாக தகவல் கேட்க நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத்தை தொடர்பு கொண்டு பேசினோம். அவர் கூறும்போது, " வெள்ளலூர் பகுதிக்கு மட்டும் மூன்று தூத்தும் மிஷின்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் 30 நாட்களில் செய்ய வேண்டிய பணி 10 நாட்களில் செய்து முடிக்க முடியும். ஆனால் லோடு மேன் பிரச்னையால் கொள்முதல் செய்யும் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. கிராம பகுதி மக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் விரைவாக பணிகள் முடிந்துவிடும். கிட்டதட்ட 160 செண்டர்கள் உள்ளன.

Pugar Petti: மதுரை: மழை, வெயிலில் மலைபோல் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகள்:  நேரடி கொள்முதல் நிலையத்தில் அரங்கேறும் அவலம்!
எல்லா இடங்களுக்கும் லோடு மேன்களை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்வது சிரமம். எனவே நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அந்தந்த பகுதி மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலவளவு, கொங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இப்படியான ஒத்துழைப்பு கிடைப்பதால் பணிகள் விரைவாக முடிந்து பக்கத்து பகுதிகளுக்கு சென்று  மூட்டைகள் எடுக்க முடிகிறது. எனினும் வெள்ளாலூர் உள்ளிட்ட கிராமத்தினரிடம் பேசியுள்ளேன். அவர்கள்  ஆட்கள் ஏற்பாடு செய்யவில்லை என்றால் நாங்களே ஆட்கள் ஏற்பாடு செய்து. பணிகளை விரைவாக முடிக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget