மேலும் அறிய

"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!

"5 ஆண்டுகளுக்கு அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களுக்கு உள்ளது. அதை, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் குறைக்க முடியாது" என ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசியுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேர்தலை அமல்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை தொடர்ந்து, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பாஜக, ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை முன்மொழிந்து வருகிறது. மக்களவை தேர்தல் அறிக்கையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்பது, பா.ஜ.க.வின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகும். 

நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?

இதுதொடர்பாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து இருந்தது. இந்தக் குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான தனது ஆய்வறிக்கயை அண்மையில் சமர்ப்பித்தது. அதில், முதல் கட்டமாக மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதை தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த பரிந்துரைகளை ஏற்று கொண்டு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தலை கோரும் 129 அரசியலமைப்பு திருத்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் அறிமுகம் செய்தார். வாக்கெடுப்பின் மூலமே மசோதா அறிமுகம் செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரியதை தொடர்ந்து, வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மசோதாவை அறிமுகம் செய்ய 269 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 198 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதுதொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக எம்.பி. டி.ஆர். பாலு, "129வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2024ஐ நான் எதிர்க்கிறேன்.

"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்"

எங்களின் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியது போல், இது கூட்டாட்சிக்கு எதிரானது. 5 ஆண்டுகளுக்கு அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை வாக்காளர்களுக்கு உள்ளது. அதை, ஒரே நாடு ஒரே தேர்தல் மூலம் குறைக்க முடியாது. இதை கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்" என்றார்.

பின்னர் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு கேட்டிருக்கிறார். இந்த மசோதாவை கூட்டு நாடாளுமன்ற குழுவுக்கு அனுப்ப நாங்கள் தயாராக இருக்கிறோம்" என்றார்.

இந்த மசோதாவுக்கு காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget