மேலும் அறிய

கிடுகிடுவென்று நடக்கும் குறுவை சாகுபடி பணிகள்... ஆறுகளில் முழு கொள்ளளவு தண்ணீர் திறப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சை மாவட்டத்தில் 95 ஆயிரம் ஏக்கரை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் சாகுபடி 1 லட்சம் ஏக்கரை தாண்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தஞ்சாவூர்: மேட்டூர் அணையில் இருந்து கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெண்ணாறு, கல்லணைக்கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாகுபடி பணிகளிலும் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடகம் மற்றும் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்திலிருந்து கபினி, கே.ஆர்.எஸ். அணைகளிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ளதால், அணைக்கு வரும் உபரி நீரை அப்படியே திறந்துவிடுமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

முதலில் 6 ஆயிரம் கனஅடி திறக்கப்பட்டு பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. கடந்த இருநாட்களாக மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடி நீர் டெல்டா பாசனத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கல்லணைக்கு காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், 9,370 கன அடி கொள்ளளவு கொண்ட வெண்ணாற்றில் 9,300 கன அடியும், 3,380 கன அடி கொண்ட கல்லணைக் கால்வாயில் 3,000 கன அடியும் என முழு கொள்ளளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அதே போல் 10,691 கன அடி கொண்ட காவிரியில் 9300 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், கொள்ளிடத்தில் 4700 கன அடி தண்ணீரும், கோவிலடி வாய்க்கால், பிள்ளை வாய்க்காலில் தலா 5 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வெண்ணாற்றில் முழு கொள்ளளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் கடைமடைப் பகுதியான திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால், ஏரி குளங்களுக்கும், கல்லணைக் கால்வாயில் முழு கொள்ளளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், ஏரிகள், குளங்களில் நீரை நிரப்பி வைக்க முடியும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் இன்னும் மும்முரம் காட்டி வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு குறுவை சாகுபடி 1 லட்சத்து 96 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான விதை நெல், உரம் மற்றும் வேளாண் இடுபொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது நடவுப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தற்போது வரை தஞ்சை மாவட்டத்தில் 95 ஆயிரம் ஏக்கரை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெற்றுள்ளன. இன்னும் ஓரிரு நாட்களில் சாகுபடி 1 லட்சம் ஏக்கரை தாண்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை மாதம் 31ம் தேதி வரை குறுவை சாகுபடி நடைபெறும் என்பதால் தஞ்சை மாவட்டத்திற்கு இலக்கான 1லட்சத்து 96 ஆயிரம் ஏக்கரை தாண்டி சாகுபடி பணிகள் நடைபெறும் என கூறப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது குறுவை சாகுபடிக்காக பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் நாற்று விடுதல் பணிகளிலும், பலர் பாய் நாற்றங்கால் முறையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சாகுபடி பணிகள் மும்முரம் அடைந்துள்ளதால் தொடர்ந்து வேலை கிடைக்கும் என்பதால் விவசாயத் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget