மேலும் அறிய

பருத்தி விவசாயிகள் வேதனை: சப்பாத்தி பூச்சி தாக்குதல்! உதவ முன்வருமா அரசு?

வைத்தீஸ்வரன் கோயில் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி செடியில் சப்பாத்தி பூச்சியின் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

காவிரி கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக இருந்து வருகிறது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் மட்டுமே. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கோடைப் பயிராகப் பருத்தி பயிரிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது பருத்திச் செடிகளில் சப்பாத்தி பூச்சியின் தாக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். 

ஏற்கெனவே பருவநிலை மாற்றத்தால் மகசூல் பாதிக்கப்பட்ட நிலையில், இந்த நோய் தாக்குதல் விவசாயிகளுக்குக் கூடுதல் செலவையும், வருவாய் இழப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இதனால், பருத்திக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பருத்தி விவசாயிகள் வேதனை: சப்பாத்தி பூச்சி தாக்குதல்! உதவ முன்வருமா அரசு?

சீர்காழியில் பருத்தி சாகுபடி - விவசாயிகள் முதலீடு

சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளான வைத்தீஸ்வரன் கோவில், செங்கமேடு, மருவத்தூர், புங்கனூர், கற்கோயில், தொழுதூர், எடக்குடி வடபாதி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கோடைப் பயிரான பருத்தியைச் சாகுபடி செய்துள்ளனர். பருத்தி சாகுபடிக்கு ஏக்கருக்கு 20,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை செலவு செய்து வருகின்றனர். இந்தப் பகுதி விவசாயிகள் தற்போது முதல் போகம் அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பருவநிலை மாற்றத்தால் தொடர் பாதிப்புகள்

கடந்த மாதத்தில் விட்டுவிட்டு பெய்த தொடர் மழையால், பருத்தி காய்கள் கொட்டி, மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்தனர். மழையின் தாக்கம் குறைந்த நிலையில், தற்போது அறுவடைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், எதிர்பாராத வகையில் மற்றொரு இன்னலில் விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.


பருத்தி விவசாயிகள் வேதனை: சப்பாத்தி பூச்சி தாக்குதல்! உதவ முன்வருமா அரசு?

சப்பாத்தி பூச்சி தாக்குதல் - விவசாயிகளின் அச்சம்

தற்போது, சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பருத்திச் செடிகளில் சப்பாத்தி பூச்சியின் தாக்கம் (மீலிபக் எனப்படும் சப்பாத்தி பூச்சி) மிக அதிகமாக உள்ளது. இந்தப் பூச்சிகள் பருத்திச் செடிகளின் இலைகள், தண்டுகள் மற்றும் காய்களின் சாற்றை உறிஞ்சிவிடுவதால், செடிகள் பலவீனமடைந்து காய்ந்து விடுகின்றன. மேலும், இந்தப் பூச்சிகள் ஒருவித பிசுபிசுப்பான திரவத்தை வெளியேற்றுவதால், செடிகள் கருப்பு நிறப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டு, ஒளிச்சேர்க்கை தடைபடுகிறது. இதனால், பருத்தியின் தரம் குறைந்து, மகசூலும் வெகுவாகக் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


பருத்தி விவசாயிகள் வேதனை: சப்பாத்தி பூச்சி தாக்குதல்! உதவ முன்வருமா அரசு?

"கடந்த மாதம் மழையால் பாதிக்கப்பட்டு, இப்போதுதான் ஓரளவு மீண்டு வந்தோம். இந்த நிலையில், சப்பாத்தி பூச்சியின் தாக்குதல் எங்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இந்தப் பூச்சியைக் கட்டுப்படுத்த கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. ஏற்கெனவே செலவு அதிகம், இப்போது இதுவும் சேர்ந்துகொண்டது" என்று வைத்தீஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு விவசாயி வேதனையுடன் தெரிவித்தார்.

செலவுகளும், சவால்களும்

சப்பாத்தி பூச்சியைக் கட்டுப்படுத்த பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளிக்க வேண்டியுள்ளதால், விவசாயிகளுக்குக் கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்தப் பூச்சிகள் வேகமாகப் பரவும் தன்மை கொண்டவை என்பதால், அவற்றை உடனடியாகக் கட்டுப்படுத்தாவிட்டால், முழு பயிரும் நாசமாகும் அபாயம் உள்ளது. இது விவசாயிகளின் வருவாயைப் பெருமளவு பாதிக்கும். "பருத்திக்கு போதிய விலை கிடைக்காத இந்த நேரத்தில், இந்த நோய் தாக்குதலுக்கு மேலும் செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. எங்களுக்குக் கடன் சுமைதான் மிஞ்சும்" என்று மற்றொரு விவசாயி வேதனை தெரிவித்தார்.


பருத்தி விவசாயிகள் வேதனை: சப்பாத்தி பூச்சி தாக்குதல்! உதவ முன்வருமா அரசு?

அரசுக்கு அவசர கோரிக்கை

பருத்திக்கு உரிய விலை இல்லாததால், உற்பத்திச் செலவைக் கூட ஈடுகட்ட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், சப்பாத்தி பூச்சி தாக்குதல் அவர்களுக்கு இரட்டை அடியாக அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்சினையில் தலையிட்டு, விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முக்கியமாக, பருத்திக்கு உரிய ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும், சப்பாத்தி பூச்சியைக் கட்டுப்படுத்தத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், வேளாண்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் வந்து, பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்து, விவசாயிகளுக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். விவசாயிகளின் கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், இது இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும் எனவும் வேதனை தெரிவித்து வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஆண்ட்ராய்டு போன் இருந்தா போதும்.. கிராமத்திலேயே வேலை, கைநிறைய ஊக்கத்தொகை! நாகை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு!
ஆண்ட்ராய்டு போன் இருந்தா போதும்.. கிராமத்திலேயே வேலை, கைநிறைய ஊக்கத்தொகை! நாகை ஆட்சியரின் சூப்பர் அறிவிப்பு!
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
அமைச்சர்கள் சொன்ன 'அந்த' வார்த்தை.. குறைதீர் கூட்டத்தை மொத்தமாகப் புறக்கணித்த விவசாயிகள்.. பின்னணி என்ன?
விளைச்சல் தந்த வேதனை: விலையின்றி மரங்களிலேயே அழுகும் மாங்காய்கள் – கண்ணீரில் கும்பகோணம் விவசாயிகள்!
விளைச்சல் தந்த வேதனை: விலையின்றி மரங்களிலேயே அழுகும் மாங்காய்கள் – கண்ணீரில் கும்பகோணம் விவசாயிகள்!
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை: அன்புமணி வலியுறுத்தல்!
மேகதாது அணை விவகாரத்தில் புதிய நடுவர் மன்றம் தேவையில்லை: அன்புமணி வலியுறுத்தல்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
தெலுங்கர்னா ஓகே வா..! என்னயா சப்பகட்டு இது? தவெக அரசின் முடிவால் கொதிக்கும் தமிழர்கள் - வாபஸ்?
TN Weather Update: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? வானிலை அறிக்கை
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Suzuki Burgman Street Review: 56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
56 கிமீ மைலேஜ்; பெரிய சேமிப்பு இடம்; ஆனா.. புதிய சுசூகி பர்க்மேன் ஸ்ட்ரீட்ட வாங்கலாமா.? வேண்டாமா.? ரிவ்யூவ்
Embed widget