மேலும் அறிய

மயிலாடுதுறை: விவசாயம், மண்பாண்டத் தொழிலுக்கு இலவசமாக வண்டல் மண், களிமண்! ஆட்சியரின் அறிவிப்பு

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 1750 ஏரி மற்றும் குளங்களில் இலவசமாக வண்டல் மண், களிமண் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளளர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயப் பணிகள், மண்பாண்டத் தொழில் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1750 ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு ஒன்றை மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயப் பணிகள், மண்பாண்டத் தொழில் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்காக நீர்வளத் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 1750 ஏரிகள் மற்றும் குளங்களில் இருந்து வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் பெரிதும் பயனடைவார்கள். 

இலவசமாக மண் எடுக்க வழிமுறை

விவசாயிகள் மற்றும் மண்பாண்டத் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் வட்டத்திற்குட்பட்ட நீர்நிலைகளில் இருந்து மண் எடுக்க, www.wndevai.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்தவர்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதி பெற்று, இலவசமாக வண்டல் மண் மற்றும் களிமண் எடுத்துக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

விவசாயப் பயன்பாட்டிற்கான வழிமுறைகள்

விவசாயப் பயன்பாட்டிற்காக விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்கள் நிலம் தொடர்பான விவரங்களை இணையதளத்தில் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்கள் வருவாய்த் துறையினரால் முழுமையாகச் சரிபார்க்கப்பட்டு, அதன்பின்னர் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அனுமதி வழங்குவார். இது விவசாயிகளுக்கு தங்கள் நிலத்தின் வளத்தை மேம்படுத்தவும், கட்டுமானப் பணிகளுக்கும் தேவையான மண்ணை எளிதாகப் பெற உதவும். மண்ணின் பயன்பாடு நிலத்தின் சாகுபடித் திறனை அதிகரிக்கவும், நீர் சேமிப்புத் திறனை மேம்படுத்தவும் உதவும். 

மண்பாண்டத் தொழில் பயன்பாட்டிற்கான வழிமுறைகள்

மண்பாண்டத் தொழில் பயன்பாட்டிற்கு விண்ணப்பிக்கும் மண்பாண்டத் தொழிலாளர்கள், தங்கள் மண்பாண்டத் தொழிலின் உண்மைத்தன்மை சான்று மற்றும் வசிப்பிடம் குறித்து கிராம நிர்வாக அலுவலரால் சான்று அளிக்கப்பட வேண்டும். இந்தச் சான்றுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே வட்டாட்சியர் அனுமதி வழங்குவார். இது மண்பாண்டத் தொழிலாளர்களுக்குத் தேவையான மூலப்பொருளான களிமண் கிடைப்பதை உறுதி செய்யும். மேலும், இத்திட்டம் மண்பாண்டத் தொழிலின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மண் எடுக்க வேண்டிய நீர்நிலைகள் விவரம்

வண்டல் மண் மற்றும் களிமண் எடுக்க வேண்டிய நீர்நிலைகள் குறித்த விவரங்களை www.wndevai.tn.gov.in என்ற இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். மேலும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகத்திலும் நேரடியாகத் தெரிந்துகொண்டு பொதுமக்கள் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இத்திட்டம் மூலம் நீர்நிலைகளில் உள்ள வண்டல் மண் அகற்றப்படுவதால், நீர்நிலைகளின் கொள்ளளவு அதிகரிக்கும். இது மழைநீர் சேகரிப்பிற்கு உதவிகரமாக இருக்கும்.

திட்டத்தின் முக்கியத்துவம்

மயிலாடுதுறை மாவட்டம் ஒரு விவசாயத்தை பிரதானமாக கொண்ட மாவட்டம் என்பதால், இத்திட்டம் விவசாயிகளுக்குப் பெரும் பயன் அளிக்கும். வண்டல் மண் விவசாய நிலங்களின் மண் வளத்தை மேம்படுத்தி, சாகுபடி உற்பத்தியை அதிகரிக்க உதவும். மேலும், மண்பாண்டத் தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்குத் தேவையான களிமண்ணை எளிதில் பெற முடியும். இத்திட்டத்தின் மூலம் நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு, அதன் மூலம் நீர் சேமிப்புத் திறன் மேம்படும். இது கோடை காலத்தில் நிலத்தடி நீர் மட்டத்தைப் பராமரிக்கவும், விவசாயப் பாசனத்திற்குத் தேவையான நீரை உறுதி செய்யவும் உதவும்.

மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் இத்திட்டம், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும், மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியரின் இந்த அறிவிப்பு, மாவட்டத்தின் நீர்வள மேலாண்மை மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு ஒரு முக்கியமான படிநிலையாகக் கருதப்படுகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு, இத்திட்டத்தின் பலன்களைப்பெற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Car Loans: கார் லோன் வாங்கனுமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எவ்வளவு EMI?
Car Loans: கார் லோன் வாங்கனுமா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? எவ்வளவு EMI?
மதுரையில் நாளை (16.12.2025) மின்தடை.. முழு லிஸ்ட் வந்திருச்சு, ஒரு நிமிடம் பாருங்க !
மதுரையில் நாளை (16.12.2025) மின்தடை.. முழு லிஸ்ட் வந்திருச்சு, ஒரு நிமிடம் பாருங்க !
மார்கழி மாத ராசி பலன் 2025 - துலாம் ராசி
மார்கழி மாத ராசி பலன் 2025 - துலாம் ராசி
Embed widget