மேலும் அறிய

விஞ்ஞான வழி துணையுடன் மரபு சார்ந்த விதைகளை பயிரிட வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்

மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி மற்றும் பாரம்பரிய மரபணுக்களின் ரகங்களை கண்டறிவது தொடர்பாக நடைபெற்ற கண்காட்சியிணை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

கரூர் மாவட்டம், பாரம்பரிய இயற்கை விவசாயத்துடன், நவீன விஞ்ஞானத்தையும் சேர்த்து கால சூழ்நிலைக்கு
ஏற்றவாறு பயிர் செய்து, உணவு பாதுகாப்பையும் அளித்து, விவசாயிகளின் வளங்களையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

கரூர் தனியார் திருமண மண்டபத்தில்  வேளாண் - உழவர் நலத்துறை மூலமாக உயர்தர உள்ளூர் ரகங்களை கண்டறிந்து அவற்றை பிரபலப்படுத்துவதற்கும், வேளாண் ஆராய்ச்சியாளர்கள் அந்தந்த பகுதிக்கு ஏற்றவாறு சிறந்த ரகங்களை உருவாக்கும் வகையில், தேவையான அடிப்படை மரபணுக்களின் பாரம்பரிய ரகங்களை கண்டறிவது தொடர்பாக நடைபெற்ற கண்காட்சியினை  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் த.பிரபுசங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

 


விஞ்ஞான வழி துணையுடன் மரபு சார்ந்த விதைகளை பயிரிட வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்

 

பின்னர்  மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது, "தமிழக அரசு பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்கிவிப்பதிலும், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் பணியிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. மரபுசார் பன்முகத்தன்மை கண்காட்சி என்பது ஒரு சிறப்பான கண்காட்சி ஆகும்.  இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்த வேளாண்மை துறைக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்‌. மரபுசார் என்றாலே காலங்காலமாக நமது பூமியில் விளைவித்த பயிர்களையே பயிரிட வைக்க வேண்டும் என்பது ஒரு தரப்பின் உடைய  பார்வையாகும்‌. இன்னொரு தரப்பினர் உலகம் வளர்ந்து கொண்டு இருக்கும் அளவிற்கு நவீன அளவில் தொழில்நுட்பத்தை இணைத்து பயரிட வேண்டும் என்று பார்க்கின்றனர். மரபுசார் என்பது பாரம்பரிய விதைகளை பாதுகாத்து, பயிர் செய்வது நம்முடைய கடமையாகும்.  ஆனால், அதே நேரத்தில் மரபுசார் பயிர்களை விஞ்ஞான முறையில் குறைந்த காலத்தில் பயிர் செய்ய முன்வர வேண்டும். அடிப்படை மரபு வழியில் மாற்றங்கள் இல்லாமல் குறைந்த செலவில், குறைந்த காலத்தில் நவீன முறையில் உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்.

 

மரபு வழியில் மட்டும் சென்றால் பல்வேறு சவால்களையும், காலச் சூழ்நிலைகளால் ஏற்படும் பாதிப்பையும் சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.  அதனால், மரபு வழியில் செல்பவர்களும் விஞ்ஞான வழியில் செல்பவர்களும் இணைந்து கால சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் விதைகளை உற்பத்தி செய்து பயிரிட வேண்டும். வேளாண் பெருமக்கள் வளமுடன் வாழ்வதற்காக விஞ்ஞான வழி துணையுடன் மரபு சார்ந்த விதைகளை பயிரிட வேண்டும்.  மரபை சார்ந்து நாம் அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் அதற்காகத்தான் இந்த கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகளின் நோக்கமும் அதுதான். எனவே வரும் காலங்களில் வேளாண் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் மரபுசார் விதைகளை குறுகிய காலத்தில் விஞ்ஞானத்தையும் பயன்படுத்தி உற்பத்தி செய்து உணவு பாதுகாப்பு ஏற்படுத்துவதுடன், தங்கள் வளங்களையும் பெருக்கிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

 


விஞ்ஞான வழி துணையுடன் மரபு சார்ந்த விதைகளை பயிரிட வேண்டும் - கரூர் மாவட்ட ஆட்சியர்

 

இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய கருங்குருவை, கருப்பு கவுனி, காட்டு யானம், கிச்சிலி சம்பா, குளியடிச்சான், குள்ளக்கார், மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி உள்ளிட்ட நெல் வகைகள், பஞ்ச காவியம், பட்டு வளர்ச்சி, நாட்டு காய்கறி விதைகள், செக்கு எண்ணெய்கள், உள்ளுரில் கிடைக்கும் இடுபொருட்களை கொண்டு தயாரிக்கும் வேளாண் கருவிகள், சேங்கல் துவரை, சிறுதானியங்கள், செறிவூட்ட தென்னை நார், தொழு உரம், முரங்கை தேன் உள்ளிட்டவைகளை வகைப்படுத்தி 25-க்கும் மேற்பட்ட அரங்குகள் கண்காட்சிக்காக அமைக்கப்பட்டு இருந்தது.இந்நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் திரு. சிவசுப்பிரமணியன், அரசு வேளாண்மை கல்லூரி முதல்வர் முனைவர்.பாலசுப்பிரமணியன், வேளாண் கல்லூரி பேராசிரியர் முனைவர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முனைவர் உமாபதி, வேளாண்மை துணை இயக்குனர் திருமதி கலைச்செல்வி, வட்டாட்சியர் திரு.சிவக்குமார்  மற்றும் விவசாயி பெருமக்கள்,  அரசு வேளாண் கல்லூரி மாணவியர்கள் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

 
   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
மதுரையில் 11 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடல்.. சமூக ஆர்வலர்கள் வரவேற்பு !
மதுரையில் 11 கல் குவாரிகள் தற்காலிகமாக மூடல்.. சமூக ஆர்வலர்கள் வரவேற்பு !
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
காசும் கிடைக்கும்... கடனுக்கான மானியமும் கிடைக்கும்! புதுச்சேரி அரசின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா?
காசும் கிடைக்கும்... கடனுக்கான மானியமும் கிடைக்கும்! புதுச்சேரி அரசின் இந்த திட்டம் பற்றித் தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget