மேலும் அறிய
இரும்பு தாது செம்மண் கடத்தல்: உயர் நீதிமன்றம் கடும் கேள்வி.. மாவட்ட ஆட்சியருக்கு ஆகஸ்ட் 12 கெடு !
பல கோடி மதிப்புள்ள இரும்பு தாதுக்கள் நிறைந்த செம்மண் சட்ட விரோதமாக, கடத்தல் கடத்தியவர்கள் அதற்கு துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி வழக்கு.

மதுரைக் கிளை
Source : whatsapp
மாவட்ட ஆட்சியரின் நிலை அறிக்கை என்னானது,? எப்பொழுது விசாரணையை முடித்து நிலை அறிக்கை தாக்கல் செய்யபடும்- நீதிபதிகள் கேள்வி. ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தாதுக்கள் நிறைந்த செம்மண் கடத்தி விற்பனை
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை சேர்ந்த சுனில் குமார் தாக்கல் செய்த மனு...," கருங்கல் பேரூராட்சித் தலைவர் சிவராஜன், அதிகாரிகளின் துணையோடு கருங்கல் பேரூராட்சி பகுதிகளில் சட்ட விரோதமாக இரும்பு (ஆக்சைடு) தாதுக்கள் நிறைந்த செம்மண் கடத்தி விற்பனை செய்துள்ளார். இந்த சட்ட விரோத செம்மண் கடத்தலால் அப்பகுதியில் செயற்கை பேரிடரை உருவாக்கி வருகின்றனர். எனவே தரமான சிவில் இன்ஜினியரிங் முறைகளைப் பயன்படுத்தி, எவ்வளவு அளவு செம்மண் திருடப்பட்டுள்ளது என்பதைத் துல்லியமாகக் கணக்கிட வேண்டும். சட்டவிரோத மண் கடத்தலில் ஈடுபட்ட அதிகாரிகள், வாகன உரிமையாளர்கள் மற்றும் கடத்தப்பட்ட மண்ணை வாங்கிய நபர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் சுரங்கத்துறை விசாரணை நடத்தி, முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு, கடத்தப்பட்ட மண்ணின் மதிப்பை 'வருவாய் மீட்புச் சட்டம் மூலம் பேரூராட்சி அதிகாரிகளிடமிருந்து மீட்க வேண்டும். இவ்வாறு கோரியிருந்தார்.
கனிமவளத்துறை இணை இயக்குனர் அறிக்கை தாக்கல்
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணை செய்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில்" கனிமவளத்துறை இணை இயக்குனர் அறிக்கை தாக்கல் செய்து உள்ளார் ஆனால் மாவட்ட ஆட்சியர் எப்பொழுது இந்த விசாரணையை முடித்து நீதிமன்றத்தில் நிலை அறிக்கை தாக்கல் செய்வார் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் ஆகஸ்ட் 12ஆம் தேதிக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















