மேலும் அறிய

துவங்க உள்ள பருவமழை... செலுத்தப்படாத கோமாரி தடுப்பூசிகள்... உடனடி நடவடிக்கைக்கு கோரிக்கை ..

" செங்கல்பட்டு மாவட்டத்தில் உடனடியாக கோமாரி தடுப்பூசி, செலுத்த கோரிக்கை எழுந்துள்ளது "

" செங்கல்பட்டு மாவட்டத்தில் உடனடியாக கோமாரி தடுப்பூசி, செலுத்த கோரிக்கை எழுந்துள்ளது. பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே தடுப்பூசியை போட்டு முடிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கால்நடை வரப்போர் கோரிக்கை வைத்துள்ளன
 
கால்நடைகள் நிறைந்த மாவட்டம்
 
செங்கல்பட்டு மாவட்டத்தில்,  2 லட்சத்து 60 ஆயிரத்து 256 கால்நடைகள் உள்ளன. எருமை மாடுகள்  22 ,232,  வெள்ள ஆடு எண்ணிக்கை,  1 லட்சத்து 38 ஆயிரத்து 410,  ஆடுகளின் எண்ணிக்கை  63 ஆயிரத்து 719  உள்ளதாக மாவட்ட கால்நடை துறை தகவல் தெரிவித்துள்ளது.  இந்தநிலையில் பருவமழை தொடங்குவதற்கு முன்பாக போடப்பட வேண்டிய தடுப்பூசிகள் போடவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.''
 
 
மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
 
முக்கிய வாழ்வாதாரம்
 
செங்கல்பட்டு மாவட்டமானது  தொழில் துறையில் வளர்ச்சி அடைந்து வந்தாலும்,  விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு மிகப் பிரதான தொழிலாக இருந்து வருகிறது.  ஏராளமான விவசாயிகள் விவசாயத்தை விட கால்நடை வளர்ப்பதை தங்களுடைய பிரதான தொழிலாக பார்த்து வருகின்றனர்.  கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருவாய் மட்டுமே அவர்களின் வாழ்வாதாரத்தை,  உயர்த்தி வருகிறது எனவும் கூறலாம்.  அந்த அளவிற்கு செங்கல்பட்டு மாவட்டம் கால்நடைகளை சார்ந்து இருந்து வருகிறது.
 
மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
 
100% மானியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி
 
தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் மூலமாக வருடத்திற்கு இரண்டு முறை  மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பசு மற்றும் எருமை மாடுகளுக்கு 100% மானியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.  செப்டம்பர் மாதத்தில்  செலுத்தும் கோமாரி நோய் தடுப்பூசி ஆனது  பருவமழையை கணக்கில் கொண்டு செலுத்தப்படுகிறது.

மேய்ச்சலின் கால்நடைகள் _ File Photo ( Cows )
 
உயிர் இழக்கும் அபாயம்
 
கோமாரி நோய் என்பது கால்களில்  வரக்கூடிய மோசமான நோய் இதன் காரணமாக மாடுகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது.   தொற்று நோயாகும் இருப்பதால்,  அதை  தடுக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இந்த நோய் அதிக அளவு பரவும் என்பதால் அதற்காக செப்டம்பர் மாதங்களில் இந்த தடுப்பூசி செலுத்தப்படும்.  நோய் தொற்று உருவாகும் நேரத்தில் 21 நாட்களுக்கு முன்னதாக தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கால்நடைகள் பாதுகாக்க முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.  ஆனால் நடப்பாண்டு, இது குறித்து இதுவரை எந்த தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். மேலும் , உடனடியாக தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை கால்நடைத்துறை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.
 
விவசாயிகள் கோரிக்கை
 
இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட விவசாய சங்க நலச் தலைவர் வெங்கடேசன்  தெரிவித்ததாவது : கடந்த சில ஆண்டு காலமாகவே தடுப்பூசி போடுவது தாமதமாகி கொண்டு வருகிறது. கால்நடை வளர்ப்போர் மற்றும் கால்நடைகளை கருத்தில் கொண்டு உடனடியாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவித்தார்.
 
நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி
 
 இதுகுறித்து கால்நடை துறை இணை இயக்குனர்  தெரிவித்ததாவது : தற்சமயம் தோல் நோய் பரவாமல் இருப்பதற்கான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது விரைவில் கோமாரி நோய் தடுப்பூசியும் செலுத்தப்படும் என உறுதியளித்தார்.

தலைப்பு செய்திகள்

PM கிசான் தவணைத் தொகை கிடைக்கவில்லையா? உடனே இதைச் செய்யுங்கள் - நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்!
PM கிசான் தவணைத் தொகை கிடைக்கவில்லையா? உடனே இதைச் செய்யுங்கள் - நாகை ஆட்சியர் அறிவுறுத்தல்!
வனவிலங்கு பாதிப்பு: 4 விவசாயிகளுக்கு ரூ.94,500 நிவாரணம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!
வனவிலங்கு பாதிப்பு: 4 விவசாயிகளுக்கு ரூ.94,500 நிவாரணம் வழங்கிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர்!
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யலைன்னா... அனைத்து விவசாயிகள் சங்கங்கள் விடுத்த எச்சரிக்கை
விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யலைன்னா... அனைத்து விவசாயிகள் சங்கங்கள் விடுத்த எச்சரிக்கை
மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி.. முழங்கிய விவசாயிகள் !
மதுரையில் நீர்வளத் துறையில் பாலம் அமைப்பதில் ஊழல் நடைபெறுவதாக கூறி.. முழங்கிய விவசாயிகள் !

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget