மேலும் அறிய

கால்நடை வளர்ப்பவர்களே... ஆட்டோ மூலம் விவசாயிகள் அறிவுறுத்தியது என்ன?

தஞ்சாவூர் அருகே சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனவெளி கிராம பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர்: ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்கு விடுபவர்கள் கவனத்துடன் இருக்கணும். நெற்பயிர்களில் மேய்ச்சலுக்கு விடாதீர்கள் என்று தஞ்சாவூர் அருகே ஆட்டோவில் கால்நடை வளர்ப்போருக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயிகள் அறிவிப்பு செய்ததுதான் தற்போது பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி சம்பா, செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் குறுவை சாகுபடியை மும்முரமாக தொடங்கி உள்ளனர். வயல்களை உழுது தயார் படுத்தி நாற்று விடுதல், பாய் நாற்றாங்கால் நடுதல் போன்ற பல்வேறு பணிகளில் தீவிரம் அடைந்துள்ளனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் அருகே சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனவெளி கிராம பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சாகுபடி செய்யாத பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களின் மாடு, ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.

அப்போது மாடு, ஆடுகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களை மேய்ந்து விடுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்த விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு வேதனையடைந்தனர். இதையடுத்து, கால்நடை வளர்ப்போர்களுக்கு வயல்வெளிகளில் கால்நடைகளை விட வேண்டாம் என்கிற வகையில், ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விவசாயிகள் பிரசாரம் மேற்கொண்டனர். இது தற்போது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனைவெளி கிராமங்கள் முழுவதும், கால்நடைகளை வயலில் விட்டால் மாடு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அந்த அபராத தொகையை அந்தந்த கிராமத்தில் அரசு திட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என அறிவுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்தனர். இது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பல இடையூறுகளை சந்தித்து சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தற்போது கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மீண்டும் நாற்றுகள் நடும் நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்று விவசாயிகள் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீராளுர் மற்றும் சுற்றுப்பகுதிகள் முழுவதும் விளம்பரம் செய்து அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த காலங்களில் மேய்ச்சல் நிலம் அதிகளவில் இருந்தன. அங்கு கால்நடை வளர்ப்போர் மாடு, ஆடுகளை மேய்த்து வந்தனர். தற்போது பல இடங்களில் மேய்ச்சல் நிலங்களில் அரசு சார்ந்த கட்டிடங்கள் ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்கள் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்டன. இதனால், கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை பொதுவெளியில் மேய்ச்சலுக்கு விடும்போது, அவை அருகில் உள்ள நெற்பயிரையும் சேர்த்து மேய்ந்து விடுகிறது. நாற்று விட்டு தற்போதுதான் வளர்ந்து வரும் நிலையில் இப்படி ஆடுகள், மாடுகளால் 

இதனால் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆட்டோவில் விழிப்புணர்வாக பிரசாரம் செய்தோம். இந்த பிரசாரத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
விவசாயிகளின் உற்ற நண்பனாக மண் வளத்தை காக்க பெரும் பங்கு வகிக்கும் அசோலா 
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
பழைய மின்மோட்டாரை மாற்றி 4-Star மின்மோட்டார் வாங்க அரசு மானியம்! உடனே விண்ணப்பியுங்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!
வறட்சிக்கு தீர்வு: விருதுநகர் விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
Udhayanidhi : நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
நேற்று அமுதன்.. இன்று தனுஷ்.! தொடரும் கொலைகளே சாட்சி- விஜய் அரசை விளாசிய உதயநிதி
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
Annamalai: ஆஃப் மோடிலே இருக்கும் அண்ணாமலை.. பாஜக-விற்கு பல்டி அடிக்கத்தொடங்கிய ஆதரவாளர்கள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Embed widget