மேலும் அறிய

கால்நடை வளர்ப்பவர்களே... ஆட்டோ மூலம் விவசாயிகள் அறிவுறுத்தியது என்ன?

தஞ்சாவூர் அருகே சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனவெளி கிராம பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர்: ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்கு விடுபவர்கள் கவனத்துடன் இருக்கணும். நெற்பயிர்களில் மேய்ச்சலுக்கு விடாதீர்கள் என்று தஞ்சாவூர் அருகே ஆட்டோவில் கால்நடை வளர்ப்போருக்கு ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி விவசாயிகள் அறிவிப்பு செய்ததுதான் தற்போது பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி சம்பா, செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டு வழக்கம் போல் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஜூன் 15ம் தேதி கல்லணை திறக்கப்பட்டது. தொடர்ந்து விவசாயிகள் குறுவை சாகுபடியை மும்முரமாக தொடங்கி உள்ளனர். வயல்களை உழுது தயார் படுத்தி நாற்று விடுதல், பாய் நாற்றாங்கால் நடுதல் போன்ற பல்வேறு பணிகளில் தீவிரம் அடைந்துள்ளனர்.

அந்த வகையில் தஞ்சாவூர் அருகே சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனவெளி கிராம பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் சாகுபடி செய்யாத பகுதிகளில் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களின் மாடு, ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு வருகின்றனர்.

அப்போது மாடு, ஆடுகள் சாகுபடி செய்துள்ள நெற்பயிர்களை மேய்ந்து விடுகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்த விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டு வேதனையடைந்தனர். இதையடுத்து, கால்நடை வளர்ப்போர்களுக்கு வயல்வெளிகளில் கால்நடைகளை விட வேண்டாம் என்கிற வகையில், ஆட்டோவில் ஒலிபெருக்கி மூலம் விவசாயிகள் பிரசாரம் மேற்கொண்டனர். இது தற்போது பாராட்டுக்களை பெற்று வருகிறது.

சீராளூர், சக்கரசம்மந்தம், பிள்ளையார்நத்தம், தென்னங்குடி, பனைவெளி கிராமங்கள் முழுவதும், கால்நடைகளை வயலில் விட்டால் மாடு ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம், ஆடு ஒன்றுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அந்த அபராத தொகையை அந்தந்த கிராமத்தில் அரசு திட்ட பயன்பாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ளப்படும் என அறிவுறுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்தனர். இது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. பல இடையூறுகளை சந்தித்து சாகுபடி பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தற்போது கால்நடைகளால் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மீண்டும் நாற்றுகள் நடும் நிலை உருவாகி உள்ளது. இதை தடுக்கும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இதுபோன்று விவசாயிகள் ஆட்டோவில் ஒலிப்பெருக்கி மூலம் சீராளுர் மற்றும் சுற்றுப்பகுதிகள் முழுவதும் விளம்பரம் செய்து அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறுகையில், கடந்த காலங்களில் மேய்ச்சல் நிலம் அதிகளவில் இருந்தன. அங்கு கால்நடை வளர்ப்போர் மாடு, ஆடுகளை மேய்த்து வந்தனர். தற்போது பல இடங்களில் மேய்ச்சல் நிலங்களில் அரசு சார்ந்த கட்டிடங்கள் ஆக்கிரமிப்புகள் போன்ற காரணங்கள் மேய்ச்சல் நிலங்கள் குறைந்து விட்டன. இதனால், கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை பொதுவெளியில் மேய்ச்சலுக்கு விடும்போது, அவை அருகில் உள்ள நெற்பயிரையும் சேர்த்து மேய்ந்து விடுகிறது. நாற்று விட்டு தற்போதுதான் வளர்ந்து வரும் நிலையில் இப்படி ஆடுகள், மாடுகளால் 

இதனால் விவசாயிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஆட்டோவில் விழிப்புணர்வாக பிரசாரம் செய்தோம். இந்த பிரசாரத்துக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
கைக்கு வர வேண்டிய மகசூல் கண்முன்னே நாசம்: உழைப்பை சிதைக்கும் காட்டுப்பன்றிகள்
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
விவசாயத்திற்கு மண் அள்றோம்.. பொய் சொல்லிட்டு சிவகங்கையில் என்ன வேலை பாக்குறாங்க தெரியுமா?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
கண் எதிரே பதராகிப்போன 60 நாள் பயிர்! கண்ணீரில் கிராமம் - அதிரடி நடவடிக்கை எடுக்குமா அரசு?
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget