மேலும் அறிய

தருமபுரி மாவட்டத்தில் காலிபிளவர் சாகுபடி அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டத்தில் காலிபிளவர் சாகுபடி அமோகம்- ஒரு பூ ரூ.20, 30-க்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி. ஆனால் கஷ்டப்பட்டு பயிரிடும் விவசாயிகளை விட, வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைப்பதாக விவசாயிகள் வேதனை.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பஞ்சப்பள்ளி, மாரண்டஅள்ளி, அரூர், கொளகம்பட்டி, மங்கானேரி உள்ளிட்ட பகுதிகளில் 70 நாட்கள் பயிரான காய்கறி பயிர்கள் அதிகளவில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குறைந்த நாட்களில் அதிக லாபம் என்பதால் இப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் காலிபிளவர், முட்டைகோஸ், முள்ளங்கி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில் காலிபிளவர் சாகுபடி தருமபுரி மாவட்டத்தில் அமோகமாக உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் காலிபிளவர் சாகுபடி அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி
 
குறிப்பாக கடந்தாண்டு காலிபிளவர் அதிகளவில் சாகுபடி செய்ததால் விளைச்சல் அதிகரித்து விலை கடும் வீழ்ச்சியடைந்தது. இதனால் கடந்தாண்டு காலிபிளவர் சாகுபடியில் போதிய விலை இல்லாததால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு காலிபிளவர் குறைந்தளவில் விவசாயிகள் சாகுபடி செய்தனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக காலி பிளவர் விற்பனையாகவில்லை. இதனால் விவசாயிகள் போதிய விலை கிடைக்காமல் கவலையடைந்தனர். 
 
இந்நிலையில், காலிபிளவர் சீசன் தொடங்கியுள்ளதால், தருமபுரி மாவட்டத்தில், காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, அரூர், கொளகம்பட்டி, மங்கானேரி உள்ளிட்ட பகுதியில் காலிபிளவர் அமோக விளைச்சல் அடைந்துள்ளது. தற்போது அதிகப்படியான திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதால், அதிகமாக காலி பிளவர் பயன்படுத்தப்படுகிறது. இதனால் காலிபிளவர் விலை தற்போது அதிகரித்து,  ரூ.20 முதல் ரூ.30-க்கும் விற்பனையாகிறது. மேலும் விவசாயிகளிடம் வாங்கி, வெளி மார்க்கெட்டில், ரூ. 40 முதல் 50 வரை விற்பனையாகிறது. இதனால் காலி பிளவர் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டத்தில் காலிபிளவர் சாகுபடி அமோகம் - விவசாயிகள் மகிழ்ச்சி
 
மேலும் ஒரு ஏக்கர் பரப்பில் பயிர் செய்ய ரூ. 40 வரை செலவாகிறது. ஆனால் தற்போது 1 இலட்சம் வரை லாபம் கிடைத்துள்ளது. ஆனால் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் ரூ.22-க்கு வாங்குகின்றனர். இதுவே தங்களுக்கே நல்ல விலை கிடைக்கிறது. ஆனால் எங்களிடம் வாங்கி விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒருமடங்கு இலாபம் எளிமையாக கிடைக்கிறது. இதனால் கூடுதலாக ரூ.5 சேர்த்து கொடுத்தால், நல்ல வருவாய் கிடைக்கும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஓசூர் போன்ற குளிர்  பிரதேசங்களில் வரக்கூடிய இந்த காலிபிளவர்,  வறட்சியாக இருக்கின்ற தருமபுரி மாவட்டங்களிலும் தற்பொழுது அதிகமாக விளைச்சல் அடைந்து வருகிறது. இதனால் முதல்முறையாக பயிரிட்ட காலிஃப்ளவர் சாகுபடியை விடாமல் தொடர்ந்து பயிரிடு போவதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Embed widget