Srivaikuntam TVK issue : "கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றேன்..."அன்று இரவு நடந்தது என்ன? பகீர் ஆடியோ
கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்றேன், அப்படி எதுவுமே நடக்கல என்று திருவைக்குண்டம் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சென்றதாக கூறப்படும் மற்றொரு பெண் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) பெண் நிர்வாகி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில், அடுத்தடுத்து வெளியாகும் ஆடியோ உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள பாலா என்ற பாலசுப்பிரமணியனின் மனைவியிடம் பேசும் மற்றொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது
தவெக பெண் நிர்வாகி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கில் இளம் பெண்ணிற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராடி வரும் நிலையில், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் அன்னை விஜி சரவணன் எம்எல்ஏ மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் தெரிவித்தார். ஆனால், தன் மீதும் கட்சி மீதும் திட்டமிட்டு களங்கம் விளைவிக்கப் பார்ப்பதாக எம்எல்ஏ விளக்கம் அளித்தார். இப்புகார் பொய் என அக்கட்சியினர் வாதிடுகின்றனர். இச்சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ள பாலா என்ற பாலசுப்பிரமணியனின் மனைவியிடம் பேசும் மற்றொரு ஆடியோவும் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வெளியாகும் இந்த ஆடியோக்களின் உண்மைத்தன்மையை காவல்துறையினர் முறையாக விசாரித்து, கந்துவட்டி மற்றும் மிரட்டல் சம்பவங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















