Rajinikanth Fan Mahashivratri |ரஜினியை சிவனாக வழிபடும் ரசிகர்மஹா சிவராத்திரி கொண்டாட்டம்வைரல் வீடியோ
மஹா சிவராத்திரியை முன்னிட்டு ரஜினியின் தீவிர ரசிகர் ஒருவர் தனது வீட்டில் வைத்துள்ள ரஜினி சிலைக்கு ருத்ராட்ச மாலை, 501 வடை மாலை அணிவித்து மஹாதீபம் ஏற்றி கொண்டாடிய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் வசித்து வருபவர் கார்த்திக் ரஜினிகாந்தி தீவிர ரசிகர் என அறியப்படும் இவர், ரஜினிகாந்தின் முதல் படமான அபூர்வராகங்களில் இருந்து தற்போது புதிதாக வெளியான படத்தின் போஸ்டர் வரை கார்த்தி தனது வீட்டில் ரஜினிக்கு என்று ஒரு கோவில் போன்ற அமைப்பை தயார் செய்து கவனம் பெற்றார்.
இந்த நிலையில் மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு ரஜினி கோவிலில் மூலவருக்கு ருத்ராட்ச மாலை சாத்தியும், 501 வடை மாலையை அணிவித்தும், மேலும் ரஜினியின் கண்கள் எங்கு பார்த்தாலும் தெரிவது போல் சுமார் 5001 உழைப்பாளி பட ரஜினி யின் கண் புகைப்படங்களை அறை முழுவதும் ஒட்டியும், ரஜினியின் உழைப்பாளி பட பேனருக்கு மகா தீபம் காண்பித்தும் மேலும் புலித்தோல் உடையில் ஒருவருடன், சிவா கைலாய வாத்தியங்களுடன் சிறப்பு பூஜைகள் செய்து சிவராத்திரி விழாவை ரஜினியின் தீவிர பக்தர் கார்த்தி கோலாகலமாக கொண்டாடினார்.
இதனை தொடர்ந்து பால், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட ஆறு வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்து, மாலை அணிவித்து இதனைத் தொடர்ந்து ரஜினியின் சிலைக்கு தீபாராதனை காட்டப்பட்டு குடும்பத்தினரோடு ரஜினியை தெய்வமாக வழிபட்டனர்.























