Manickam Tagore | ”அதிகார திமிர்ல இருக்கீங்க! மதுரை வடக்கு சீட் கொடுங்க” கோ.தளபதி vs மாணிக்கம் தாகூர்
அதிகாரத்தில் பங்கு கேட்கிறார்கள், தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்த முறை சீட்டே கொடுக்கக்கூடாது என திமுக மாவட்ட செயலாளர் கோ.தளபதி வெளிப்படையாகவே சொன்ன நிலையில், அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என பதிலடி கொடுத்துள்ளார் மாணிக்கம் தாகூர்.
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டும் என திமுகவை நெருக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ். இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் நேரடியாகவே கருத்து தெரிவித்து வந்தனர். எம்.பி மாணிக்கம் தாகூர் அதிகாரத்தில் பங்கு கேட்டு சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியினரை டெல்லிக்கு வரவைத்து முக்கியமான மீட்டிங் வைத்தார் மக்களவை அப்போது அதுமட்டுமல்லாமல் கூட்டணி தொடர்பாக தலைமை சொல்லாமல் யாரும் செய்தியாளர்களை சந்திக்கவோ, சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கவோ என கூடாது என ஆர்டர் போட்டார். அதன்பிறகு அதிகாரத்தில் பங்கு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர் சைலண்ட் மோடுக்கு போனார்கள்.
இந்தநிலையில் மதுரையில் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சித்தார்.
இதனையடுத்து கோ.தளபதியின் மதுரை வடக்கு தொகுதியை 2026 தேர்தலில் காங்கிரஸுக்கு கொடுக்க வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார் மாணிக்கம் தாகூர். இதுதொடர்பான பதிவில் இந்த முறை மதுரை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நிற்க வேண்டும் என்று அன்புதலைவர் கார்கே அவர்களிடம் கோரிக்கை வைப்பேன். தன்மான காக்க சிலருக்கு பாடம் புகட்ட வேண்டும். அதிகார தீமிருடன் இருந்தால் தோழமை கட்சிகள அமைதியாக இருக்கும் காலம் முடிந்துவிட்டது என கொந்தளித்துள்ளார். இந்தநிலையில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றியுள்ளது.























