மேலும் அறிய

Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்

பெரம்பூரில் சாலையில் கிடந்த சூட்கேஸில் தலை இல்லாமல் ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில் மனைவியும் கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவரின் உள்ளாடையை வைத்தே கொலைக்கான மர்மத்தை போலீசார் உடைத்துள்ளனர். விசாரணையில் கொலை நடந்தது எப்படி என திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெரம்பூர் ரயில் நிலையத்தின் 4-வது நடைமேடை அருகே கிடந்த நீல நிற சூட்கேஸிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக ஜூன் 5-ஆம் தேதி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை திறந்து பார்த்த போது தலை, கைகள், கால்கள் இல்லாமல் ஆணின் உடற்பகுதி மட்டும் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குற்றவாளியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது. ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவியை வைத்து விசாரணை வேகமெடுத்தது.

உடலை பரிசோதித்த போது பார்கோட் கொண்ட ஓர் உள்ளாடையை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த பார்கோட் பெரம்பூரில் இருந்த துணிக்கடை ஒன்றுக்கு அழைத்து சென்றது. அங்கு சென்று ஆய்வு செய்த போது பெண் ஒருவரின் தொலைபேசி எண் கிடைத்தது. அந்த எண் வழக்கமான அழைப்புகளுக்கு பயன்படுத்தப்படாமல் மெசேஜ் செயலிகளுக்கு மூலம் மட்டும் பயன்படுத்தப்படுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த எண்ணுடன் தொடர்புடைய பெண்ணை கையும் களவுமாக பிடித்து விசாரித்த போது திடுக்கிடும் தகவல் வெளியானது. 

அந்தப் பெண் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிமா (36) என அடையாளம் காணப்பட்டார். மேலும் உயிரிழந்தவர் அவரது கணவர் அமீர் அலி (37) என்பதை போலீசார் உறுதி செய்தனர். இந்த தம்பதியினர் 2022 முதல் தேனாம்பேட்டையில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். அப்போது சென்னையில் காய்கறி வியாபாரம் செய்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 31 வயதான அஷ்ரப் என்பவருடன் ரோஹிமாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் சேர்ந்து அமீர் அலியைத் தீர்த்துக் கட்ட சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

ஜூன் 3-ஆம் தேதி இரவன்று, அமீர் அலிக்கு தூக்க மாத்திரைகளைக் கொடுத்து, பின்னர் கூர்மையான ஆயுதங்களால் அவரைத் தாக்கியுள்ளனர். பின்னர் உடலை துண்டு துண்டாக வெட்டி, உடற்பாகங்களை தனித்தனி பைகளில் அடைத்துள்ளனர். உடலின் நடுப்பகுதி சூட்கேஸுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 5-ஆம் தேதி அதிகாலையில் அந்த சூட்கேஸை பெரம்பூர் ரயில் நிலையத்தில் போட்டுவிட்டு தப்பியோடியது தெரியவந்துள்ளது. 

பாதிக்கப்பட்டவரின் தலை செங்கல்பட்டு மாவட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மீதமுள்ள உடற்பாகங்களை மீட்டெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. மனைவியும் கள்ளக்காதலனும் சேர்ந்து கணவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

“எங்களிடம் சத்தியம் வாங்கினார் முதல்வர் விஜய்” - அமைச்சர் ரஞ்சித்குமார் பரபரப்பு பேட்டி
“எங்களிடம் சத்தியம் வாங்கினார் முதல்வர் விஜய்” - அமைச்சர் ரஞ்சித்குமார் பரபரப்பு பேட்டி
டெல்லி கார் வாங்கித் தருகிறேன்! ரூ.1 கோடி வரை சுருட்டிய விழுப்புரம் நபர் கைது...
டெல்லி கார் வாங்கித் தருகிறேன்! ரூ.1 கோடி வரை சுருட்டிய விழுப்புரம் நபர் கைது...
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
Vinayagar Chaturthi 2026: விநாயகருக்கு அருகம்புல் மாலை எதற்காக? சுவாரஸ்யமான பின்னணி என்ன தெரியுங்களா?
விநாயகருக்கு அருகம்புல் மாலை எதற்காக? சுவாரஸ்யமான பின்னணி என்ன தெரியுங்களா?

வீடியோ

Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN By Election : 2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
2 தொகுதி இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவு.? கம்யூனிஸ்ட் திட்டத்தால் அதிர்ச்சியில் சிஎம் விஜய்.? நடப்பது என்ன.?
Iran Vs America: அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அமெரிக்காவை தெறிக்கவிடும் ஈரான்.! அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை கைப்பற்றிய IRGC; நடந்தது என்ன.?
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
அரக்கோணம் ரயில் பாதையில் மாஸ் அப்டேட்! ₹1,936 கோடி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Thirumavalan:
Thirumavalan: "இது கண்ணியம் இல்ல.." உடல்மொழியில் கவனம் தேவை! முதலமைச்சர் விஜய்க்கு திருமா அட்வைஸ்
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Sachin Tendulkar: கிரிக்கெட்டின் கடவுள் சத வேட்டை தொடங்கிய நாள் இன்று! ஒருநாள் போட்டியில் சச்சின் முதல் செஞ்சுரி வந்தது எப்படி?
Thirumavalavan Statement : ‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!
‘தளபதி ஸ்டாலின் என்ற திருமா’ விஜய் பெயரையே குறிப்பிடாமல் அறிக்கை..!
"வேடிக்கை பாத்தவருக்கு தாமரைப்பட்டயமா.." இந்தியன் பட காட்சியால் மு.க.ஸ்டாலினை சீண்டும் தவெக!
Karthigai Deepam:
Karthigai Deepam: "நீ என் மகளே இல்ல.." சாமுண்டீஸ்வரியின் கண்டிஷனுக்கு கையெழுத்து போடுவாரா ரேவதி?
Embed widget