மேலும் அறிய

Chennai Murder | மனைவி பாலியல் வன்கொடுமை! தடுத்த கணவர், குழந்தை கொலை! சென்னையில் பகீர் சம்பவம்!

பீகாரை சேர்ந்த இளைஞர் சென்னையில் சாக்கு மூட்டை ஒன்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது. மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த போது தடுத்த கணவரையும், 2 வயது குழந்தை என ஒட்டுமொத்த குடும்பத்தையும் கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்துள்ளது வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.

சென்னை அடையார் இருசக்கர வாகன ஷோரூம் பக்கத்தில் ஜனவரி 26ம் தேதி சாக்கு மூட்டை ஒன்று இருந்தது. அதில் ரத்தக்கறை இருப்பதை பார்த்த மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையை பிரித்த போது அதில் இளைஞர் ஒருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது 2 பேர் சாக்கு மூட்டையை கொண்டு வந்து வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர். 

கொலை செய்யப்பட்டவரின் பாக்கெட்டில் இருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட போது அது ஒரு தனியார் செக்யூரிட்டி அலுவலகம் என்பது தெரியவந்தது. அங்கு சென்று விசாரித்த போது தான் கொலை செய்யப்பட்டவர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என்பதை கண்டுபிடித்தனர். அவர் இங்கு வந்து வேலை கேட்டதாகவும், அப்போது வேலை இல்லாததால் பிறகு சொல்கிறோம் என சொல்லி செல்போன் எண்ணை கொடுத்து அனுப்பியுள்ளனர். அந்த செல்போன் எண் தான் கவுரவ் குமாரின் பாக்கெட்டில் இருந்ததுள்ளது.

அடுத்தடுத்த விசாரணையில் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இந்த கொலை தொடர்பாக 3 வட மாநில நபர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் 9 பேரிடம் அடையாறு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

அப்போது அவர்கள் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. கவுரவ் குமார் மட்டுமல்லாமல் அவரது மனைவியையும், 2 வயது குழந்தையையும் சேர்த்து கொலை செய்ததை குற்றவாளிகள் ஒப்புக் கொண்டது அதிர வைத்தது.

மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த போது தடுத்த கணவர் கவுரவ் குமாரையும், குழந்தையையும் அந்த  போதை கும்பல் கொடூரமாக கொலை செய்துள்ளது. இதனையடுத்து குழந்தையின் சடலத்தை மத்திய கைலாஷ் ஆற்றங்கரையோரம் போலீசார் மீட்டனர். மனைவியும் சடலத்தை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடும் பணி நடந்து வருகிறது. இந்த கொடூர சம்பவத்தில் இன்னும் எத்தனை பேர் சம்பந்தப்பட்டுள்ளார்கள், சம்பவம் நடந்த இடம் என்ன தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளி பணிக்கு வந்த பீகார் இளைஞர் குடும்பத்தோடு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை வீடியோக்கள்

"NEETஐ முழுசா ரத்து பண்ணுங்க +2 மார்க்ஸ் அடிப்படையில்.." மத்தியஅரசுக்கு விஜய் கடிதம்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
AIADMK: துரோகம் செய்த சிலர்.. வேதனையாக இருப்பதாக கலங்கிய இபிஎஸ்.. இனி இதுதான் முடிவு!
AIADMK: துரோகம் செய்த சிலர்.. வேதனையாக இருப்பதாக கலங்கிய இபிஎஸ்.. இனி இதுதான் முடிவு!
Madurai Hc ; குற்றாலம் பிரதான அருவியின் மேம்பாட்டுப் பணிகள் தொடரலாம் - மதுரை அமர்வு உத்தரவு !
Madurai Hc ; குற்றாலம் பிரதான அருவியின் மேம்பாட்டுப் பணிகள் தொடரலாம் - மதுரை அமர்வு உத்தரவு !
40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு
40 வயது பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; லிப்ட் கொடுத்த வாலிபரின் வெறிச்செயல் - பொன்னேரி அருகே பரபரப்பு

வீடியோ

Delhi Bus Gang Rape|டெல்லியில் மீண்டும் நிர்பயா! பேருந்தில் நேர்ந்த கொடூரம் கூட்டு பாலியல் வன்கொடுமை
வெள்ளை அறிக்கை விரைவில்!ஆட்டத்தை தொடங்கிய விஜய்பதற்றத்தில் திமுக
சுக்குநூறான அதிமுக? EPS vs SP வேலுமணி! முற்றும் மோதல்
MA Siddique IAS | நிதித்துறை 'சிங்கம்'விஜய்யின் LIFESAVER..யார் இந்த சித்திக் IAS?
Tasmac New Rule | அடுத்தடுத்து செக்! TASMAC-ல் புதிய RULE..அதிரடி காட்டும் விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Modi: “இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
“இறக்குமதி வரிய ரத்து பண்ணுங்க“; மோடிக்கு அவசரமாக கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்; எதற்கு.?
Aadhav Arjuna: போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
போதைப்பொருள் விற்றால் ‘குண்டர்‘ சட்டம்; காவல் நிலைய புகார்கள் வீடியோ பதிவு; தவெக அரசு அதிரடி
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
MK Stalin: அப்டேட் ஆகி மீண்டும் வருவேன்.. திமுக 2.0 வரும்.. வீடியோ வெளியிட்ட மு.க.ஸ்டாலின்!
Dharmarajan IPS : ’முதலமைச்சர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன் IPS..?
’முதல்வர் விஜயின் பாதுகாப்பு அதிகாரி’ யார் இந்த DIG தர்மராஜன்..?
Work From Home: அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
அரசு அலுவலகங்களுக்கு வாரத்திற்கு 2 நாட்கள் Work From Home; முதலமைச்சர் உத்தரவு; டெல்லியில் நடப்பது என்ன.?
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
Jailer 2 Accident: ஜெயிலர் 2 படப்பிடிப்பில் விபத்து..28 வயது இளைஞர் பலி
KP Munusamy: “நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
“நீக்குனது நீக்குனது தான்“; எடப்பாடி பழனிசாமிக்கே முழு அதிகாரம்; அடித்துச் சொல்லும் கே.பி. முனுசாமி
Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?
Singappen Task Force: சீறிப்பாய தயார்! சேலத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை தொடக்கம்- என்னென்ன செய்யும்?
Embed widget