மேலும் அறிய

Bhavaneeswari IPS Profile | மேற்கு மண்டலத்தின் முதல் பெண் ஐ.ஜி.. குற்றவாளிகளுக்கு சிம்ம சொப்பணம்

ஆண்களின் பெயர்கள் மட்டுமே இருந்த வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.க்கள் பட்டியலில், 19 வதாக இடம்பெற்ற பவானீஸ்வரியின் பெயரே ஒரு பெண்ணின் பெயராக முதலாவதாக இடம்பெற்றது.

கோவையை தலைமையிடமாக கொண்டு, மேற்கு மண்டல காவல் துறை தலைவர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கோவை மற்றும் சேலம் ஆகிய இரண்டு காவல் சரகங்களுக்கு உட்பட்ட, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்களின் தலைவராக ஐ.ஜி. எனப்படும் மண்டல காவல் துறை தலைவர் நியமிக்கப்படுவார். இது மிகவும் முக்கியமான பொறுப்பு என்பதால், இந்தப் பணிக்கு அனுபவமும், திறமையும் உள்ள நபர்களே நியமிக்கப்படுவது வழக்கம்.

கடந்த 2002 ம் ஆண்டில் மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் பதவி உருவாக்கப்பட்டது. அதன்பின்னர் நரிந்தரபால் சிங் என்பவர் மேற்கு மண்டலத்தின் முதல் காவல் துறை தலைவராக பணி புரிந்தார். அது முதல் கடந்த 2023 ம் ஆண்டு வரை 18 ஐ.ஜி.க்கள், மேற்கு மண்டல காவல் துறை தலைவராக பணியில் இருந்துள்ளார். இந்தப் பட்டியலில் உள்ள அனைவரும் ஆண்களாகவே இருந்தனர்.

ஆனால், கடந்த 2023 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கு மண்டல ஐ.ஜி.யாக இருந்த சுதாகர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அப்பதவிக்கு சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இணை ஆணையராக பணியாற்றி வந்த கே.பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக மேற்கு மண்டல காவல் துறையின் முதல் பெண் ஐ.ஜி. என்ற பெருமையையும் அவர் பெற்றார். ஆண்களின் பெயர்கள் மட்டுமே இருந்த வந்த மேற்கு மண்டல ஐ.ஜி.க்கள் பட்டியலில், 19 வதாக இடம்பெற்ற பவானீஸ்வரியின் பெயரே முதல் பெண்ணின் பெயராக  இடம்பெற்றது.

தமிழ்நாட்டை சேர்ந்த கே.பவானீஸ்வரி 2002 ம் ஆண்டு காவல் துறை அதிகாரியாக தனது பணியை துவக்கினார். கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காவல் துறை அதிகாரியாக பணி புரிந்த அனுபவம் கொண்டவர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சென்னை போக்குவரத்து பிரிவு கூடுதல் ஆணையாளர், திருச்சி மண்டல காவல் துறை துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி உள்ளார்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு முன்னாள் முதலமைச்சர்கள் உடனும் பணி புரிந்த அனுபவம் பெற்றவர் பவானீஸ்வரி. பின்னர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், முக்கிய அரசு அதிகாரிகள் மீதான சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணைகள் இவரது மேற்பார்வையில் தான் நடந்து வந்தது. பின்னர் இலஞ்ச ஒழிப்புத் துறை சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜியாக பவானீஸ்வரி பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2023 ம் ஆண்டு மேற்கு மண்டல காவல் துறை தலைவராக நியமிக்கப்பட்ட பவானீஸ்வரி, திறம்பட பணியாற்றி வருகிறார்.

23 ஆண்டுகளாக காவல் துறை அதிகாரியாக பணியாற்றி வரும் பவானீஸ்வரி, பணி புரிந்த இடங்களில் எல்லாம் தனக்கென தனித்த முத்திரை பதித்துள்ளார். இந்திய அளவில் சிறப்பாக பணியாற்றும் காவல் துறையினருக்கு வழங்கப்படும் ஜனாதிபதி விருது பவானீஸ்வரிக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல தனது சிறப்பான பணிக்காக அவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார். கடினமாக துறைகளில் இருக்கும் போது தான் திறமைகள் வெளிப்படும். அந்த வகையில் ஆணாதிக்கம் மிகுந்த காவல் துறை பணியில் ஒரு பெண்ணாக தனது திறமையான பணிகளின் மூலம் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக மிளிர்கிறார், பவானீஸ்வரி.

ஐபிஎஸ் அதிகாரிக்கே உரிய மிடுக்கோடு, குற்றவாளிகள் மத்தியில் கடினமானவராக பவானீஸ்வரி இருந்தாலும், மற்றவர்கள் மீது காட்டும் அன்பும், பரிவும், பழகும் விதமும், அவரின் பொறுப்புக்கு மேலும் அழகு சேர்ப்பதாக சிலாகின்றார்கள் அவரது நண்பர்கள்

செய்திகள் வீடியோக்கள்

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
விஜய் நிகழ்ச்சியில் த்ரிஷா.. நல் உதாரணமாக இருங்க.. கொந்தளித்த MLA மார்க்கண்டேயன்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை: சிபிஐ விசாரணைக்கு அன்புமணி வலியுறுத்தல்!
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
கிராம சபை கூட்டத்தில் தேசிய அரசியலா? உத்தரகாண்ட் சம்பவத்துக்கு மாப்படுகையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு! 
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - குழந்தை உட்பட 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி சாத்தியம்?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Embed widget