மேலும் அறிய

கார் விபத்தில் ஊழியர்: ஏன் தாமதம்? இறப்புக்கு மட்டுமே என மனிதத்தன்மையற்று பதிலளித்த மேலாளர்: நடந்தது என்ன?  

கார் விபத்தில் சிக்கிய ஊழியரிடம்,  அலுவலகத்திற்கு தாமதமாக வந்தது குறித்து மேலாளர் கேள்வி எழுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில், விபத்துக்குள்ளான ஊழியர் மற்றும் மேலாளர் இடையேயான சேட்களுக்கு, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். என்ன நடந்தது என பார்ப்போம். 

கார் விபத்தில் ஊழியர்:

சமூக வலைதளங்களில் , ஒரு நபர் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவில்,தான் கார் விபத்தில் சிக்கி இருப்பதாகவும், அதனால், அலுவலகத்திற்கு வருவதற்கு தாமதமாகும் என மேலாளருக்கு தெரிவித்துள்ளார். மேலும் , அவர் விபத்துக்குள்ளான காரின் புகைப்படத்தையும் அனுப்பியிருக்கிறார். 


விபத்தில் ,அவர் நலமுடன் உள்ளாரா ? என்ன ஆயிற்று என கேள்வி எழுப்பாமல், எந்த நேரத்தில்அலுவலகத்திற்கு வருவீர் என மேலாளர் கேள்வி எழுப்பியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலாளர் கருத்து:


இது மட்டும் தெரிவித்தது மட்டுமல்லாமல், நீங்கள் தாமதமாக வருவதற்கான காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், உங்கள் குடும்பத்தில் ஏதேனும் உயிரிழப்பு தவிர இதர காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், தாமதமானதற்கு காரணங்களை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மேலாளர் தெரிவித்துள்ளார். 

எதிர்ப்பு:

இந்த பதிவுகளை சமூக வலைதளங்களில் ஒருவர் பகிர்ந்ததையடுத்து, இது வைரலானது. பலரும் மேலாளரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை பார்க்க முடிகிறது. 
விபத்தில் சிக்கிய ஊழியரை, நலம் விசாரிக்காமல் கருணையற்று எப்போது வருவீர் என கேட்பது எல்லாம் மன்னிக்க முடியாது, தயவு செய்து வேறொரு நிறுவனத்திற்கு மாறி விடுங்கள் அல்லது மேலாளரை வேறு நிறுவனத்திற்கு மாற்ற நிர்வாகத்திடம் முறையிடுங்கள் என சிலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவிப்பதை பார்க்க முடிகிறது.

பயனர்களில் ஒருவர், மீண்டும் அந்த வேலைக்குச் செல்ல வேண்டாம். எதிர்காலத்தில் ஏதாவது நிறுவனமும் நீங்கள் ஏன் வெளியேறினீர்கள் என்று கேட்டால், நீங்கள் இந்த ஸ்கிரீன்ஷாட்டை காட்டவும் என தெரிவித்திருக்கிறார்.

இருப்பினும்,  சிலர் தங்களது முதலாளியுடன் பழகிய சில நேரமறையான நிகழ்வுகளையும் பகிருவதையும் பார்க்க முடிந்தது.  

உழைப்பு சுதந்திரம்:

மனிதர்கள் வேலைக்குச் செல்வது, தங்களது வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதற்கும், நாட்டின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக என்று சொல்லாம். மனிதர்களுக்கு அலுவலகம் மட்டுமே உலகம் இல்லை, அது ஒரு பகுதிதான், அவர்களுக்கு குடும்பம் , நட்பு வட்டாரம், பொழுதுபோக்கு உள்ளிட்டவைகள் இருக்கும். மனிதர்களுக்கான உழைப்பு சுதந்திரத்தை முறையாக நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

அப்பொழுதுதான் நிறுவனங்களுடன் இணக்கமாகவும், மகிழ்ச்சியாகவும் வேலை செய்ய முடியும், அதுதான் நிறுவனத்திற்கும் ஊழியருக்கும் வளமானதாக அமையும். 

தலைப்பு செய்திகள்

PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்

வீடியோ

DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
PM Modi: அனைவருக்கும் வீடு கிடைப்பதே இலக்கு.. பிரதமருக்கு விஜய் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
அணுக்கனிம சுரங்கம்; அன்று நாசகரத் திட்டம்... இன்று நலத்திட்டமா? விஜய்க்கு இபிஎஸ் கேள்வி
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
DMK vs TVK: ஊழலின் உச்ச விஜயபாஸ்கர்கள்; வாஷிங் மெஷின் தவெக - விளாசிய திமுக
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
SP Velumani: பதவி வேண்டாம்.. தோல்விக்கு நீங்கதான் காரணம்.. எஸ்பி வேலுமணி ஆதரவாளர்கள் இபிஎஸ்-க்கு திடீர் கடிதம்
​
​வீரப்பன் மட்டும் உயிரோடு இருந்திருந்தா..! மேகதாது விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் அதிரடி பேச்சு!
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
காலி குடங்களுடன் பஸ்களை மறித்த மக்கள்... பூதலூர் அருகே பரபரப்பு
அரசு பள்ளிகளில்
அரசு பள்ளிகளில் "மகிழ் முற்றம்"- மாணவர் பாராளுமன்றம்: எதிர்கால தலைவர்கள் உருவாகும் களம்!
"நான் இணைவது என்ன குதிரை பேரமா?" - காட்டமாக கேள்வி எழுப்பிய ஒரத்தநாடு மா.சேகர்
Embed widget